முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

விசுவாசிகளின் ஐக்கியத்திற்கு கருவியாக இருக்கவேண்டிய திருவிருந்து ஆராதனை (கர்த்தருடைய பந்தி), விசுவாசிகளுக்குள் பிளவை உண்டாக்கும் காரணியாக மாறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. அந்த கர்த்தருடைய பந்தியிலுள்ள பொருட்கள் (அப்பம் மற்றும் திராட்சை ரசம்) எழுத்தர்த்தமாக இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்றும், அதில் பங்குபெறுபவர்கள் வெறும் அப்பத்தையும் திராட்சை ரசத்தையுமல்ல, நேரடியாக கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையுமே புசிக்கிறார்கள் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

"இது என்னுடைய சரீரம், இது என்னுடைய இரத்தம்" (மத்தேயு 26:26-28, மாற்கு 14:22-24, லூக்கா 22:19-20, (1கொரிந்தியர் 11:23-26) என்று அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் குறித்து இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளின் நேரடிப் பொருளை (எழுத்தர்த்தத்தை) இவர்கள் தங்கள் கருத்திற்கு ஆதாரமாக கொள்கிறார்கள். "நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தினுடைய ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய ஐக்கியமாயிருக்கிறதல்லவா?" (1கொரிந்தியர் 10:16) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய வார்த்தைகளையும் எழுத்தர்த்தமாகவே எடுத்துக்கொண்டு, தங்கள் சிந்தனையை மேலும் உறுதிபடுத்த முயற்சிக்கிறார்கள். எளிதாக குறிப்பிடுவதற்கு வசதியாக, இந்தக் கோட்பாட்டை நமது விவாதத்தில் 'எழுத்தர்த்த வாதம்' என்று அழைப்போம். ரோமன் கத்தோலிக்க சபையோடு, இன்று சில புராட்டஸ்டன்ட் சபைகளும் இந்த எழுத்தர்த்தக் கருத்தையே சத்தியம் என்று நம்புகின்றன.

இருப்பினும், மேற்கண்ட கருத்தை எதிர்ப்பவர்கள், கர்த்தருடைய சரீரம் மற்றும் இரத்தத்திற்கு அந்த அப்பமும் திராட்சை ரசமும் அடையாளங்களே என்றும், "இது என் சரீரம்", "இது என் இரத்தம்" என்ற கர்த்தருடைய வார்த்தைகள் வெறும் உவமையாக (அலங்காரமாக) சொல்லப்பட்டவை என்றும், அப்போஸ்தலரும் அதே உவமையையே வலியுறுத்தினார் என்றும் வாதிடுகிறார்கள். எளிதாக குறிப்பிடுவதற்கு வசதியாக, இந்தக் கோட்பாட்டை நமது விவாதத்தில் 'அலங்கார வாதம்' அல்லது 'அடையாள வாதம்' என்று அழைப்போம். பெரும்பான்மையான புராட்டஸ்டன்ட் சபைகள் இந்த அடையாளக் கொள்கையையே கொண்டுள்ளன.

"இந்த சர்ச்சை எல்லாம் எதற்கு? திருவிருந்தின் மூலம் கர்த்தரை நினைவுகூர்ந்தோமா இல்லையா என்பதுதானே முக்கியம்? அப்பம் மற்றும் திராட்சை ரசம் அவருடைய சரீரம் மற்றும் இரத்தம் என்று சொல்வதை எழுத்தர்த்தமாக நம்பினாலும், அல்லது உவமையாக நம்பினாலும் பிரச்சனை என்ன?" என்று சமரசம் செய்துகொள்பவர்களும் சிலர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்தப் பிரச்சனை எவ்வளவு சிக்கலானது என்பதை ஒருவேளை சிந்திக்காமல் இருக்கலாம். இந்த ஆய்வு ஏன் அவசியம் என்பதைத் தெரிவிக்கும் சில முக்கிய கோணங்களை இங்கே முன்வைக்கிறேன்:

1) நித்திய ஜீவனைப் பெறும் வழிமுறையைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு இந்த சர்ச்சையைத் தீர்ப்பது அவசியம்.

கர்த்தருடைய சரீரத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவர்களுக்கு மட்டுமே நித்திய ஜீவன் உண்டு என்று வேதம் போதிக்கிறது (யோவான் 6:53-56). இது பந்தியில் பங்குபெறுவதன் மூலமே நடக்கிறது என்று எழுத்தர்த்த வாதிகள் நம்புகிறார்கள். உதாரணமாக, நவீன புராட்டஸ்டன்ட் & சுயதீனா சபைகளில் எழுத்தர்த்த போதனையைப் புகுத்தியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: "இயேசுவில் பங்கு பெறுவது என்றால் அவருடைய சரீரத்திலும், இரத்தத்திலும் பங்கு பெறுவதே. இயேசுவின் சரீரத்திலும் இரத்தத்திலும் பங்கு பெறுவது என்றால் கர்த்தருடைய இராபோஜன பொருட்களைப் புசித்து பானம் பண்ணுவதே" இதுவே உண்மையானால், இந்த அடையாள வாதிகள், இயேசுவின் சரீரத்திலும் இரத்தத்திலும் பங்கு பெறச் செய்யும் ஒரே வழிமுறையை நிராகரிக்கிறார்கள். அதை வெறும் அடையாளமாகத் தாழ்த்தி, தெரிந்தோ தெரியாமலோ பந்தியை அவர்கள் அவமதிக்கிறார்கள்.

ஆனால் ஒருவேளை அடையாள வாதமே உண்மையானால், கர்த்தருடைய இராபோஜனத்தில் பங்குபெறுவதே அவருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைக் குடிப்பதாகும் என்று நம்புபவர்கள் அவர்கள் பெரிய தவறையே செய்கிறார்கள். நித்திய ஜீவனைப் பெறக்கூடிய ஒரே வழியை அவர்கள் முற்றிலுமாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். எனவே, கர்த்தருடைய இராபோஜனத்தைக் குறித்து இந்த இரண்டு கருத்துக்களில் எது வேதத்திற்கு இசைவானது என்று தீர்மானிப்பது முக்கியமற்ற விஷயம் என்று எண்ணுவது மிகவும் ஆபத்தானது.

2) பந்தியில் பாத்திரவான்களாக (தகுதியோடு) பங்குபெறுகிறோமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த இந்த சர்ச்சையைத் தீர்ப்பது அவசியம்.

"என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்" (1கொரிந்தியர் 11:29). அபாத்திரமாக (தகுதியற்ற விதத்தில்) பந்தியில் பங்குபெறுவது என்றால் என்ன? எழுத்தர்த்த வாதத்தை ஆதரித்து சிலர் 1கொரிந்தியர் 11:29-ம் வசனத்தை இவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்கள்: "அந்த வார்த்தைகளைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? கர்த்தருடைய அப்பத்தைப் புசிக்கும் விசுவாசிகள் சரியான விதத்தில் புசிக்காவிட்டால், அவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகுமெனச் சொல்லப்பட்டுள்ளது. சரியான விதத்தில் புசிப்பது என்றால் என்ன? கர்த்தருடைய சரீரம் என்று நிதானித்து (விவேகித்து) புசிப்பதே பாத்திரமாகப் புசிப்பதாகும்" அதுவே உண்மையானால், அடையாள வாதிகள் பந்தியில் பங்குபெறும் ஒவ்வொரு முறையும் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்கிறார்கள்! அவைகள் அடையாளங்கள் மட்டுமே என்று நம்பி, அபாத்திரமாக, ஆக்கினைத்தீர்ப்பை வருவித்துக்கொள்ளும்படியே அவர்கள் பந்தியில் பங்குபெறுகிறார்கள்.

ஆனால், அடையாள வாதமே உண்மையானால், பாத்திரமாகப் பந்தியில் பங்குபெறுவது என்று பவுல் சொன்ன நோக்கத்தையே திரவிய மாற்று வாதிகள் முற்றிலுமாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். பந்தியில் அபாத்திரமாகப் பங்குபெறும் ஆபத்தைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாததால், அவர்கள் அந்தத் தவறைச் செய்தாலும் அதை உணரும் நிலையில் இல்லை. பாத்திரமாகப் பந்தியில் பங்குபெறுகிறோமா இல்லையா என்பதை அறிந்துகொள்ளும் பொறுப்புள்ளவர்களுக்கு இந்த சர்ச்சை தீர்க்கப்படுவது அவசியம்.

3) வேத போதனையைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு இந்த சர்ச்சையைத் தீர்ப்பது அவசியம்.

தேவனுடைய வார்த்தையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட போதனைகள் இருக்காது. இரண்டு முரண்பட்ட போதனைகள் எழும்போது, அவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்க வேண்டும், அல்லது இரண்டுமே தவறான போதனைகளாக இருக்க வேண்டும்; ஆனால் அந்த இரண்டும் சத்தியமாக இருப்பது சாத்தியமில்லை. தேவன் தனது வார்த்தைக்குத் தானே முரண்படமாட்டார் என்பதால், ஒரு வசனத்திற்குக் கூறப்படும் விளக்கம், மற்ற எந்த வசனங்களில் உள்ள போதனையோடு முரண்பட்டாலும், அந்த விளக்கத்தை மனித கற்பனைப் போதனையாகக் கருதி நிராகரிக்க வேண்டும். இது வேதாகம வியாக்கியானத்தில் பயன்படுத்தவேண்டிய அடிப்படை விதி. நாம் தற்போது ஆராயும் இந்த இரண்டு முரண்பட்ட கருத்துக்களில், முழுமையான வேத போதனையோடு ஒத்துப்போகும் கருத்தே சத்தியம். எந்த வேத வசனத்தோடும் ஒத்துவராத கருத்து தவறான புரிதலும், பொய்யுமாகும். வேதத்தைத் தவறாகப் புரிந்துகொள்கிறவர்கள் தங்கள் சொந்த கேடுக்கு ஏதுவாகவே அப்படிச் செய்கிறார்கள் என்று பேதுரு செய்த எச்சரிக்கையைப் புறக்கணித்தவர்கள் மட்டுமே இந்த சர்ச்சையின் விஷயத்தில் நடுநிலை வகிப்பார்கள் (2பேதுரு 3:16).

எனவே ஜெபத்துடனும், வேத வெளிச்சத்திலும், இந்த சர்ச்சைக்குத் தீர்வு காண்பதே இரு தரப்பினருக்கும் நல்லது. நடுநிலை வகிப்பதைக் கைவிட்டு, பாரபட்சமற்ற மனநிலையுடன் வாருங்கள், நாம் இணைந்து ஆராய்வோம், சத்தியம் என்னவென்று அறிந்துகொள்வோம்.

 

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 13, 2026
பிரசங்கித்தல் என்பது தேவன் நமக்கு அளித்துள்ள ஒரு புனிதமான பொறுப்பாகும். தேவனுடைய வார்த்தையைப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
கலாத்தியர் 2:11-14 வரையிலான வேதப்பகுதியை மையமாக வைத்து, "பெரிய ஊழியர்கள் செய்யும் பெரிய தவறுகள்"...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
இந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள முப்பத்திமூன்று தெய்வங்களில் ஒருவரான...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
எங்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் "சிந்தியுங்கள்" என்று...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
லூக்கா சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில், நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான மூன்று உவமைகளைக் குறித்து...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.