16ம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய்மைவாதிகளின் விண்ணப்பம்
துதியும்.., நன்றியும்.., (Praise and Thanksgiving)
என் தேவனே, உமக்குத் துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக!
நீர் அழகானவர், மகா பெரியவர், அனைத்திலும் முதன்மையானவர்; என் இருதயம் உம்மை வியந்து, ஆராதித்து, நேசிக்கிறது. என்னுடைய சிறிய பாத்திரம் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு நிரம்பி வழிகிறது; அதை முழுமையாக இடைவிடாமால் உமக்கு முன்பாக ஊற்ற விரும்புகிறேன்.
நான் உம்மைப் பற்றி நினைக்கும்போதும், உம்மிடம் பேசும்போதும், பத்தாயிரம் இன்பமான எண்ணங்கள் பிறக்கின்றன; பத்தாயிரம் மகிழ்ச்சியின் ஊற்றுகள் திறக்கப்படுகின்றன; பத்தாயிரம் புத்துணர்ச்சியூட்டும் சந்தோஷங்கள் என் இதயமெங்கும் பரவி, ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியால் நிரப்புகின்றன.
நீர் உருவாக்கிய என் ஆத்துமாவிற்காக உம்மைப் போற்றுகிறேன்; அது தரிசு நிலத்தில் (பாவமான உலகில்) நிலைநாட்டப்பட்டிருந்தாலும், அதை அலங்கரித்து, பரிசுத்தப்படுத்தியதற்காக உமக்கு நன்றி.
நீர் எனக்குக் கொடுத்த இந்த சரீரத்திற்காக, அதன் பலத்தையும் வீரியத்தையும் பாதுகாப்பதற்காக, இன்பங்களை அனுபவிக்க நீர் தந்த உணர்வுகளுக்காக, என் உறுப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டிற்காக, உமது கட்டளைகளைச் செய்யும் என் கைகள், கண்கள் மற்றும் காதுகளுக்காக நான் உம்மைத் துதிக்கிறேன்.
தினசரி தேவைகளைச் சந்திக்கும் உமது மேன்மையான கிருபைக்காக, நிறைந்த மேஜைக்காக, வழிந்தோடும் பாத்திரத்திற்காக, பசி, சுவை மற்றும் இனிமைக்காக உமக்கு நன்றி.
என் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சமூக உறவுகளுக்காக, பிறருக்கு சேவை செய்யும் திறனுக்காக, பிறருடைய துக்கங்களையும் தேவைகளையும் உணரும் இதயத்திற்காக, சக மனிதர்கள் மீது அக்கறை கொள்ளும் மனதிற்காக, சுற்றிலும் மகிழ்ச்சியைப் பரப்பும் வாய்ப்புகளுக்காக நான் உம்மைப் போற்றுகிறேன்.
பரலோக பேரின்பத்தில் இருக்கும் என் அன்புக்குரியவர்களுக்காகவும், உம்மை நேருக்கு நேர் காணப்போகும் என் எதிர்பார்ப்புக்காகவும் உமக்கு நன்றி.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நான் உம்மை நேசிக்கிறேன். என் தேவனே, இந்தக் காலத்திலும் நித்தியத்திலும் உம் மீதான என் அன்பை இன்னும் அதிகமாக்குவீராக."
—-- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.