இருளான பாதையிலிருந்து வெளிச்சத்தை நோக்கி...
அன்பான நண்பரே, இன்று உங்கள் உள்ளத்தில் மன நிம்மதி இருக்கிறதா? "எப்படியாவது இந்த குடி பழக்கத்தை விட்டுவிட வேண்டும்" என்ற போராட்டத்தில் இருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் இன்று பலர் இந்த கேள்வியை தங்களுக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கை -யில் குடிபழக்கம் என்பது மட்டும் இல்லையெனில் நீங்கள் எவ்வளவாக முன்னேறியிருப்பீர்கள் என்பதை கற்பனை செய்துபாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் உயர்வும் மதிப்பும் அதிகமாகத்தான் இருக்கும்.
உண்மையான சூழ்நிலையைப் பாருங்கள்
குடிபழக்கம் என்பது வெறும் ஒரு பொழுது போக்கு அல்ல, அது நம்மை மெல்ல மெல்ல அழிக்கும் ஒரு கண்ணி. இன்று மதுபானம் நமக்கு எளிதாக கிடைக்கும் சூழலில் இருப்பதால், தமிழ்நாட்டில் குடிபழக்கத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தற்போதைய தரவுகளின்படி தமிழ்நாட்டில் சுமார் 25.4% முதல் 29.2% ஆண்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர். இது தொடருமானால் போதை பழக்கத்திற்கு அடிமை ஆகும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுதான் செல்லும். இன்று உங்களை சோதனைக்கு உள்ளாக்கும் இதே பிரச்சனை நாளை உங்கள் பிள்ளைகளையும் சோதிக்கும். இதன் வளர்ச்சியும் விளைவையும் கற்பனை செய்து பாருங்கள்.
குடிப்பழகத்தினால் ஏற்படும் பிரச்னைகள்
சில பிரச்னைகளை இங்கே முன்வைக்கிறேன்.
- உடல்நலம்: கல்லீரல் பாதிப்பு, கை கால் நடுக்கம், தீராத தலைவலி மற்றும் மருத்துவ செலவுகள்.
- குடும்பம்: தன் மனைவியின் கண்ணீர், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம், வீட்டில் சண்டை சச்சரவுகள்.
- பொருளாதாரம்: தான் வாங்கிய கடனை அடைக்க முடியாமை, உழைத்த பணம் அனைத்தும் டாஸ்மாக் கடையில் கரைந்து போதல்.
- தற்காலிக நினைவாற்றல் இழப்பு: அதிகப் படியான மது அருந்தும்போது, மூளையில் உள்ள 'ஹிப்போகாம்பஸ்' (Hippocampus) என்ற அந்த பகுதி பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதிதான் குறுகியகால நினைவுகளை நீண்ட கால நினைவுகளாக மாற்றும் வேலையைச் செய்கிறது. மது போதையில் இருக்கும் போது ஒருவர் தன்னை சுய நினைவை மறந்து பேசிக்கொண்டே இருப்பார், ஆனால் அடுத்த நாள் காலையில் அவருக்கு தான் செய்ததோ அல்லது பேசியதோ எதுவுமே நினைவில் இருக்காது.
- மூளைச் சுருக்கம்: மது அருந்துவதால் மூளையின் செல்கள் சுருங்கி, மூளையின் அளவு குறையத் தொடங்குகிறது. இதனால் எதையும் சிந்தித்துச் செயல்படும் திறன் (Decision making) குறைகிறது.
உதாரணத்திற்கு ஒரு வாழ்க்கை
பாலுவின் கதையைக் கேளுங்கள்: பாலு என்பவன் ஒரு திறமையான தொழிலாளி. தன்னுடைய உழைப்பின் மூலம் சிறு வயதிலே பல உயரங்களையும் நன்மதிப்பையும் அடைந்தவர். தொடக்கத்தில் நண்பர்களோடு மகிழ்ச்சிக்காக குடிக்க ஆரம்பித்தது, நாளடைவில் அது ஒரு கட்டாயமாக மாறியது. மாலை நேரம் வந்தால் போதும் அவனுடைய கை கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். கால்கள் தானாக டாஸ்மாக் கடையை நோக்கிச் செல்லும் நிலைக்கு வந்தான்.
இப்போது அவர் சம்பாதித்த பணம் அனைத்தும் மதுவிற்கே சரியானது. கடன் தொல்லை கழுத்தை நெரிக்க, வீட்டில் தினமும் சண்டை ஒரு கட்டத்தில், "நான் என் குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறேன், தற்கொலை செய்துகொள்வதே மேல்" என்ற முடிவுக்கு வந்தார்.
அந்த இருண்ட நேரத்தில் தான், இயேசு கிறிஸ்துவின் அன்பை அவருடைய நண்பர் மூலம் அறிந்தார். நம்பிக்கை இல்லாத நிலையில், "ஆண்டவரே, இந்த நரக வேதனையிலிருந்து என்னை விடுவியும், என்னால் முடியவில்லை" என்று கண்ணீரோடு ஜெபித்தார்.
அவனுடைய வாழ்வில் அதிசயம் நடந்தது! ஒரே நாளில் எல்லாம் மாறவில்லை என்றாலும், இயேசு அவருக்குள் ஒரு புதிய மன உறுதியைக் கொடுத்தார். குடிப்பதற்கான வெறி குறைந்தது. இன்று பாலு குடிப்பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு, அவனுடைய கடன்களை அடைத்து, அவன் தன் குடும்பத்தாரோடு சமாதானமாக வாழ்கிறான்.
இந்த பாலுவை மாற்றின இயேசுவால், உங்களையும் மாற்ற முடியும்!
இதற்கு என்னதான் தீர்வு
வேதம் சொல்லுகிறது:
"வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள்எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." (மத்தேயு 11:28).
- பாவ மன்னிப்பு: இயேசு உங்கள் பாவங்களை மன்னித்து, குற்ற உணர்விலிருந்து உங்களை விடுவிக்கிறார்.
- புதிய இருதயம்: இயேசு உங்களுக்குள் வரும்போது, போதையை விரும்பும் சுபாவத்தை மாற்றி, சமாதானத்தை விரும்பும் புதிய இருதயத்தைத் தருகிறார்.
- இயேசு கிறிஸ்து உங்களை ஏமாற்றமாட்டார்: உங்கள் சூழல் எதுவாக இருந்தாலும் இந்த மெய்யான இரட்சகரால் உங்களுக்கு விடுதலையை தரமுடியும்.
விடுதலைக்கான வழி:
அன்பான நண்பரே, உங்கள் பலவீனத்தை ஒப்புக்கொள்ளுங்கள். உங்களை குடிக்கு நேராக நடத்தும் சூழ்நிலைகளை உணர்ந்து விழிப் படையுங்கள். இன்றே உங்களை நேசிக்கிற ஆண்டவரிடம் திரும்புங்கள். இந்த ஜெபத்தை விசுவாசத்தோடு சொல்லுங்கள்:
ஜெபம்:
"அன்புள்ள இயேசுவே, நான் ஒரு பாவி. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, என் உடலையும், குடும்பத்தையும், என்னுடைய சமாதானத்தையும் இழந்து பிரச்சனையில் தவிக்கிறேன். பாலுவின் வாழ்க்கையை மாற்றினவரே, என்னையும் மாற்றும். என் சுய முயற்சியால் இதிலிருந்து வெளிவர முடியவில்லை. எனக்காக சிலுவையில் மரித்தவரே, என்னை மன்னியும். இந்த போதை பழக்கத்தின் சங்கிலிகளை உடைத்து என்னை விடுவிக்க கெஞ்சுகிறன். என் இருதயத்திற்குள் வந்து என்னோடு வாசம் செய்யும். இன்று முதல் நான் உமக்கே சொந்தம். ஆமென்."
நீங்கள் இந்த பொல்லாத பழக்கத்திலிந்து வெளிவந்து உங்கள் குடும்பத்திற்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வாழவும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்னுதாரணமான தகப்பனாய் வாழவும் நாங்கள் விரும்புகிறோம். எங்களோடு இணைந்து சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் தருகிற, நம்மை உண்டாக்கிய உண்மையான கடவுளை பற்றிக் கொள்ளும்படி நாங்கள் உங்களை அன்போடு அழைக்கிறோம். நாட்களைத் தள்ளிப் போடாதீர்கள். நாளை என்பது நிச்சயம் இல்லாதது. இன்றே வாருங்கள்.
நாளை என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. எனவே இன்றே உங்கள் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து மனந்திரும்பு; உன் பாவத்திற்குப் பரிகாரமாக இரத்தம் சிந்தி மரித்து உயிர்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இன்றே விசுவாசி.
“மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளை நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக் காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே.” (யாக்கோபு 4:13,14)
“இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.” (2கொரிந்தியர் 6:2).
"கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31).