முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல் பிறந்த கதை

1. பாடுவேன் என் மீட்பரையே,
அவர் அன்பின் மாட்சிமை;
சாபக்கேட்டினின்று மீட்க
ஈனக் குருசேறினார்.
 
  பாடுவேன் என் மீட்பரையே;
  கிரயமாய் தம் ரத்தத்தை
  சிலுவையிலே செலுத்தித் தீர்த்தார்;
  மன்னித்தீந்தார் விடுதலை.
 
2. பாவச்சேற்றில் வீழ்ந்த என்னை
எல்லையில்லா அன்பாலும்,
இரக்கத்தாலும் இலவசமாய்
மீட்ட அன்பைக் கூறுவேன்.
- பாடுவேன்
 
3. போற்றுவேன் என் மீட்பரையே;
வெல்லும் வல்லமை சொல்வேன்;
பாவம் சாவு நரகமீது
வெற்றியைத் தருவாரே.
- பாடுவேன்
 
4. பாடுவேன் என் மீட்பரையே;
தெய்வ அன்பால் நேசித்தார்;
சாவினின்று ஜீவன் தந்து
தேவ மைந்தனாக்கினார்.
- பாடுவேன்

1876-ம் ஆண்டின் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களை, பென்சில்வேனியாவிலுள்ள தன் சொந்த ஊரான ரோமில் கழித்துவிட்டு, பிரபல அமெரிக்க பாடலாசிரியர் பிலிப். P. பிளிஸ் தன் மனைவியுடன் ரயிலில் சிக்காகோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  ஓகியோவிலுள்ள அஷ்டபுலாவுக்கருகே இருந்த ஒரு பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அப்பாலம் உடைந்தது.  ரயில் 60 அடி ஆழத்தில் விழுந்து, நெருப்புக் பற்றிக்கொண்டது.

ஆச்சரியவிதமாக அடிபடாமல் தப்பின பிளிஸ், எரிந்து கொண்டிருந்த ரயில் பெட்டியின் ஜன்னல் வழியே வெளிவந்தார்.  ஆனால், தன் மனைவி எரியும் ரயில் வண்டிக்குள் சிக்கியிருப்பதை அறிந்து, மனைவியைக் காப்பாற்ற, மீண்டும் எரியும் நெருப்புக்குள் சென்றார்.  சென்றவர் மீண்டும் வரவேயில்லை.

விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்களுள், பிளிஸ்ஸின் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.  உடையாமல் இருந்த  அப்பெட்டியில் இப்பாடல் இருந்தது.  பிளிஸ் எழுதின இக்கடைசிப் பாடலை, அவர் அதுவரை செய்துவந்த, மேஜர் விட்டிலின் ஊழிய இசைப்பணியைத் தொடர அழைக்கப்பட்ட மெக்ரனகன் பெற்றார்.  தகுந்ததோர் ராகம் அமைத்தார்.

இக்கோர விபத்து நடந்த சில நாட்களுக்குப்பின் மேஜர் விட்டில் சிக்காகோவில் நற்செய்திக் கூட்டம் நடத்தினார்.  அதில் இப்பாடல் கண்டுபிடிக்கப்பட்டதின் பின்னணியைச் சொல்லிவிட்டு, அதற்கு இசை அமைத்த மெக்ரனகனை  அறிமுகம் செய்து வைத்தார்.  இப்பாடலைக் கேட்ட மாத்திரத்தில், அனைவரும் ஆவியில் அனலுற்றனர்.

இப்பாடலை எழுதிய பிளிஸ், அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவின் கிளீயர்பீல்ட் கவுன்ட்டியில் 9.7.1838 அன்று பிறந்தார். சிறுவயது முதல் ஏழ்மையிலே வளர்ந்தார்.  தன் இளமைப் பருவத்தில், மரம் அறுக்கும் தொழிலாளராக வேலை செய்தார்.  வயதுக்குமீறிய வளர்ச்சியும், வித்தியாசமான நடையுடை பாவனையும் கொண்டவராகத் தோற்றமளித்தார். 

1850-ல் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதன் பின், அருகிலுள்ள பாப்டிஸ்ட் சபையில் சேர்ந்தார்.

தன் வாழ்வின் ஆரம்ப காலத்திலிருந்தே, பிளிஸ் இசையில் சிறந்த தாலந்து படைத்தவராக  விளங்கினார்.  குறைந்த கால இசைப்பயிற்சியை மேற்கொண்டார்.  பின்னர் சிக்காகோ சென்று டாக்டர் ஜார்ஜ் ரூட் என்பவருடன் சேர்ந்து கொண்டார்.  10 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து இசைப்பயிற்சி அளிப்பதிலும், இசைக் கருத்தரங்குகள்  நடத்துவதிலும் ஈடுபட்டார்.

1874-ம் ஆண்டு, பிரபல நற்செய்திப் பிரசங்கியார்களான ஈ.க. மூடியும், மேஜர் தானியேல் ர. விட்டிலும் அவரை அணுகி, தங்களோடு முழுநேர ஊழியத்தில் ஈடுபடுமாறு அழைத்தனர்.  அந்நாள் முதல், இத்தகைய நற்செய்திக் கூட்டங்களில் சிறப்புப் பாடல்கள் பாடியும், மக்களை உற்சாகப்படுத்திப் பாட வைத்தும், தேவனுக்கு மகத்தான ஊழியம் செய்தார்.  இவ்வாறு முழுநேர ஊழியனாகி இரண்டே ஆண்டுகளில், தனது முப்பத்தெட்டாம் வயதிலேயே மரித்தார்.

இப்பாடல் 1877-ம் ஆண்டு  ''வெல்கம் டைடிங்ஸ்''  என்ற புதிய ஞாயிறுபள்ளிப் பாடல் புத்தகத்தில் வெளியானது.  அற்பமான ஆயுள் காலத்திற்குள்  அற்புதமாக ஆண்டவரைச் சேவித்த ஊழியர் இவர்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
ஒரு சாதாரணமான பிரசங்க பீடத்தில் நின்று இன்றை செய்தியின் தலைப்பு கிறிஸ்துவுக்காகப் பாடு சகிப்பதைப்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
மீட்புக்கு இரண்டு விஷயங்கள் முற்றிலும் அவசியமானவை: முதலாவது பாவத்தின் குற்ற உணர்விலிருந்தும் அதின்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
"இதற்காகப் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி ஜெபம் பண்ணுவானாக." (சங்கீதம் 32:6). தொடர்ந்து வாசிக்க...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 20, 2025
  உங்கள் பதில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் உங்களின் பதில் நித்தியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்....

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.