முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல் பிறந்த கதை

 பாடல் : இயேசு நேசிக்கிறார்

 
பல்லவி
இயேசு நேசிக்கிறார், - இயேசு நேசிக்கிறார்;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ!
 
சரணங்கள்
1. நீசனாமெனைத் தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன்  முழு
மனதால் நேசிக்கிறார்.
            - இயேசு
2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம்.
             - இயேசு
3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்.
             - இயேசு
4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார் ;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன்.
             - இயேசு
5. ராசன் இயேசுவின்மேல் இன்ப கீதஞ்சொலில்,
ஈசன் இயேசெனைத் தானேசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன்.
             - இயேசு

பத்தொன்பதாம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்தில்,  கொலைக் குற்றத்திற்காகத் தூக்குத்தண்டனை பெற்ற சுப்பிரமணியம் கோவிந்தசாமி என்ற கைதி ஒருவர் சிறைச்சாலையில் இருந்தார்.  சிறைச்சாலைக் கைதிகள் மத்தியில் ஊழியம் செய்து வந்த நற்செய்திப் பணியாளர் ஒருவர், அவரைச் சந்தித்து, அன்பாகப் பேசி, ''இயேசு உங்களை நேசிக்கிறார்" என்று கூறினார். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து நேசிப்பவர் எவரும் உண்டோ என வியந்த அவர், நம்ப மறுத்து, ''உண்மை தானா?'' என வினவினார்.  நற்செய்திப் பணியாளர் தமது கையிலிருந்த வேதபுத்தகத்தைக் காட்டி, ''இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் உண்மை அதுவே''  எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, பல வாரங்கள் இருவரும் வேதபுத்தகத்தைச் சேர்ந்து வாசித்து, இயேசுவின் தியாக அன்பைக் குறித்துச்  சிந்தித்தனர்.  தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முன்னர், அக்கைதி ஆண்டவரை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்று, பிரெக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.

அவரைத் தூக்கிலிட்டபின், அவருடைய உடைமைகளை அவரது சிறை அறையிலிருந்து எடுத்துச் செல்ல, அவரது உறவினர் வந்தனர்.  அப்போது, அவர் தலையணைக்குக் கீழே, ஒரு சிறு காகிதத்தில் இப்பாடல் எழுதப்பட்டிருந்தது.

இப்பாடலின் ஒவ்வொரு அடியையும், தன் வாழ்வின் அனுபவ சாட்சியாக, பிரெக்கன்ரிஜ் எழுதியிருக்கிறார்  எனக் கூறினால், அது மிகையாகாது.  அவர் தன் வாழ்வின் இறுதி நாட்களை, நல் நம்பிக்கையுடையவராய், தன் அன்பர் இயேசுவோடு என்றென்றும் வாழும் பரலோக வாழ்வை எதிர்நோக்கியவராய், தைரியத்துடன், சாட்சியாக அச்சிறைச்சாலையில் நடத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஜூலை 24, 2026
வியாதி என்ற முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் இப்போது சிந்திக்கப்போகிறோம். இதிலிருந்து யாராலும்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்படும் சர்தை சபையானது, வெளியில் உயிரோடிருப்பதாகப் பெயர்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
சார்லஸ் ஸ்பர்ஜன் அவர்கள், சங்கீதம் 110:3-ஐ அடிப்படையாகக் கொண்டு முழங்கிய இந்த உன்னதமான பிரசங்கம்,...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
சுவிசேஷப் பணி என்பது மனிதத் திட்டங்களாலோ அல்லது நிறுவனங்களின் பலத்தினாலோ நடைபெறுவது அல்ல; அது...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாவது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய காரியம் இது. இந்தப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
மே 09, 2026
இன்று அநேக பெற்றோர்கள் குழந்தைகளின் மீது மிகவும் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.