முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg
பல்லவி
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறையுண்டு நீ சொல், மனமே
 
சரணங்கள்
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுலகுயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்.
             - என் மீட்பர்
2. பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் :
சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்.
             - என் மீட்பர்
3. ஆசிசெய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும்.
             - என் மீட்பர்
4. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்;
கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார் ;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.
             - என் மீட்பர்.
5. போனது போகட்டும், புவி வசை பேசட்டும்,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும்,
ஆனது ஆகட்டும், அருள் மழை பெய்திடும்,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்.
             - என் மீட்பர்.

அருள்திரு. ஞா.சாமுவேல் ஐயர் ஒரு சிறந்த வேத நிபுணர்.  தமிழ் மொழிப்பற்று மிக்கவர்.  அதுமட்டுமன்றி கர்நாடக இசையையும் முறைப்படி கற்றவர்.  இப்படிப்பட்ட சிறந்த மேதை எழுதிய பாடலே இப்பாடல்.

போதகர் சாமுவேல் தரங்கம்பாடி, மற்றும் பெங்களூர் இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.  தன் வாழ்க்கையில் சோதனைகள் பலவற்றை அனுபவித்தார்.  தொடர்ந்து வந்த துன்பங்களால் வேதனையுற்று, சோர்வு மேலிட, ஒரு நாள் மாலை மயங்கும் வேளையில், ஓரிடத்தில் நடந்து  சென்று கொண்டிருந்தார்.  அப்போது, அவர் பாதையில் கிடந்த ஒரு சிறு காகிதத்துண்டைப் பார்த்துக் கையிலெடுத்தார். அதில் "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்," என்ற வேத வசனம் எழுதப்பட்டிருந்தது.

வேத அறிஞராகிய சாமுவேலின் மனக்கண்முன், யோபுவின் வாழ்க்கை திரைப்படம் போல ஓடியது. யோபு கடந்து வந்த பாடுகளைத் தான் அனுபவிக்கும் வேதனைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அத்தனை பாடுகள் மத்தியிலும், மனந்தளராது, இவ்வசனத்தின் மூலம் சாட்சி பகர்ந்த விசுவாச வீரன் யோபுவின் சவால், சாமுவேலுக்குப் புத்துணர்ச்சியையும், தெம்பையும் அளித்தது.

தனது வேதனைப் புலம்பல்களினின்று விடுபெற்ற போதகரின் உள்ளம், புதிய உற்சாகத்தால் நிறைந்தது. இவ்வசனம் அவர் உள்ளத்தில் தந்த நம்பிக்கையே, இப்பாடலாக உருவெடுத்தது. தன் வாழ்க்கையின் சோர்வுகளை, இப்பாடலைக் கொண்டு மேற்கொண்டு, வெற்றி பெற்றார்.

கருத்து மிகுந்த இப்பாடல், இன்றும் சோர்ந்து போகும் மக்களுக்கு, நம்பிக்கையூட்டும் பாடலாக விளங்குகிறது. சாமுவேல் ஐயர் எழுதிய "குணப்படு பாவி," என்ற மற்றொரு கீர்த்தனை, திருச்சபை வழிபாட்டில், பாவ அறிக்கைக்கு வழிநடத்தும் பாடலாக உபயோகிக்கப்படுகிறது.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.