images/new_theme/Promotion banner-4-2-min.jpg

லோத்தின் மனைவி சோதோம் நகரத்தின் அழிவைச் சற்றுத் திரும்பிப் பார்த்ததற்காகத் தேவன் அவளைத் தண்டித்த செயல், பெண்களின் மீது அவருக்கு இருந்த குறைவான அபிப்பிராயத்தினால்தானா? லோத்தும் அவனது குடும்பத்தாரும் நகரத்தை விட்டுப் பாதுகாப்பான இடத்திற்குத் தப்பிச் செல்லும்போது, "பின்னிட்டுத் திரும்பிப் பார்க்கக் கூடாது" என்று தேவதூதர்கள் தெளிவாக எச்சரித்திருந்தார்கள். எனவே, இது “வெறுமனே திரும்பிப் பார்க்கும்” ஒரு செயலாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் ஓடித் தப்பிச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய ஒரு நேரடிக் கட்டளை தேவதூதர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

முழு நகரமும் அக்கினியால் எரிக்கப்படும்போது, அவர்கள் அதிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனவே, தேவன் அவர்கள் மீது காட்டிய மாபெரும் இரக்கத்திற்கு, தங்கள் வாழ்க்கையில் அவர்கள் காட்டவேண்டிய பிரதி உபகாரத்தின் அடையாளமாகவே 'திரும்பிப் பார்க்க வேண்டாம்' என்னும் கட்டளை கொடுக்கப்பட்டது. இதற்கு அவர்கள் முழுமையாகக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதர்களால் கொடுக்கப்பட்ட நேரடியான கட்டளைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனது லோத்தின் மனைவியின் குற்றமேயாகும். வேண்டுமென்றே கட்டளைகளை மீறும் செயல்களுக்கு எந்தவொரு நீதிமன்றமும் தண்டனையே வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவேதான் லோத்தின் மனைவி உப்புத்தூணாக மாறினாள். இது அவள் ஒரு பெண் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையல்ல. ஒருவேளை லோத்து திரும்பிப் பார்த்திருந்தாலும், அவனது கீழ்ப்படியாமையின் விளைவாக அவனும் கட்டளையை மீறியதன் அடிப்படையில் அதே தண்டனையைச் சந்தித்திருப்பான். எனவே, லோத்தின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு, தேவன் எந்த வகையிலும் பாலினப் பாகுபாடு காட்டாதவர் என்பதைத் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன், பாவத்தை எந்தப் பாலினத்தவர் செய்தாலும் பட்சபாதமின்றி (பாகுபாடின்றி) அதைத் தண்டிப்பவர் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக அறிந்துகொள்கிறோம்.

 

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 17, 2026
உலகில் பலரும் தங்கள் “சுயசித்தம்” அல்லது “சுதந்திரச் சித்தம்” (Free Will) குறித்துப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
மே 06, 2026
திருச்சபையார் வெறும் மனிதனுடைய அபிப்பிராயங்களைக் கேட்காமல், தங்களுக்கான தேவனுடைய ஜீவ வார்த்தையையே...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 19, 2026
ஆவிக்குரிய ஆபத்துகள் நிறைந்த காலத்திலே வாழும் நீங்கள், மற்றவர்களுடைய ஆத்தும நன்மைக்காக உங்களால்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
பனிப்பொழிந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், இதே வசனத்தைக் கேட்டபோதுதான் சார்லஸ் ஸ்பர்ஜன் தேவனுடைய...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
கிறிஸ்தவ விசுவாசத்தின் மிக முக்கியமான உபதேசங்களில் ஒன்று ‘நியாயப்பிரமாணத்திற்கும்’ (Law)...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 19, 2026
கல்லின்மேல் கட்டப்பட்ட சபையில் நீங்கள் இருக்கிறீர்களா? ஒரே மெய்யான திருச்சபையில் நீங்கள்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.