முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

     “ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின் மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்” (2 சாமுவேல் 11:2)

தாவீதின் பாவத்தைப் பற்றி நாம் அடிக்கடியாகவும் அதிகமாகவும் பேசுகிறோம். ஆனால் பத்சேபாளின் பாவத்தைப் பற்றி நாம் பேசுவதோ அல்லது அதைக் குறித்துக் கேள்விப்படுவதோ கூட மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. தாவீதின் பாவம் மிகப் பெரியது, பத்சேபாளின் பாவமோ மிகச் சிறியது என்பது நிதர்சனமாக உண்மை. தாவீதின் பாவம் வேண்டுமென்றே செய்யப்பட்டது மற்றும் யார் நம்மைக் கேள்வி கேட்பார்கள் என்னும் அகந்தையில் செய்யப்பட்டது. ஆனால் பத்சேபாளின் பாவமோ கவனக்குறைவால் மட்டுமே நடைபெற்றது. தாவீது வேண்டுமென்றே பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தார் மேலும் அவனுடைய கணவனை திட்டமிட்டுக் கொலை செய்தார். ஆனால் பத்சேபாளின் வாழ்விலே இது ஏதேச்சையாக நடந்த ஒன்று, மேலும் தாவீதின் கண்களுக்கு முன்பாகத் தன்னை எதிர்பாராத வகையில் வெளிப்படுத்திக் காட்டினாள். எனவே தாவீதின் பாவம் பெரியது என்பதிலும் பத்சேபாளின் பாவம் சிறியது என்பதிலும் நமக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

ஆயினும் பத்சேபாளின் சிறிய பாவமே, தாவீதின் பெரிய பாவத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது என்பதும் உண்மையாகவே உள்ளது. பத்சேபாளுடைய அறியாமையின் சிறிய பாவமானது, சிந்தனையற்றதும் கவனக்குறைவாகவும் தாவீதுக்கு முன்பாகத் தன்னை வெளிப்படுத்திக் காட்டிய அவளுடைய சிறிய செயலானது, “சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக். 3:5) என்னும் யாக்கோபின் வார்த்தைகளுக்கு ஏற்ப, ஒரு பெரிய தீப்பிழம்பை உண்டாக்கி காட்டையே எரித்த தீப்பொறியைப் போல மாறிவிட்டது. ஒரு பக்கம் பார்த்தால், பத்சேபாளைப் பொருத்தவரை அது தாவீதின் கண்களுக்கு முன்பாக கொஞ்சம் கவனக்குறைவாக நடந்துகொண்ட செயலாகவும், கொஞ்சம் சிந்தனையற்ற செயலாகவும் மற்றும் ஏதேச்சையாகவும் தற்செயலாகவும் நடைபெற்ற ஒரு செயலாகவும் இருக்கிறது. ஆனால் மறுபக்கம் பார்த்தால், தாவீதைப் பொருத்தவரை அது விபச்சாரமாகவும், மனசாட்சியின் குற்ற உணர்வை உண்டாக்கிய செயலாகவும் மாறிவிட்டது. மேலும் இது கொலைக்கும், அவளுடைய கணவனின் இழப்புக்கும், ஏதுவும் அறியாத போர் வீரர்களின் மரணத்திற்கும் வழிவகுத்துக் கொடுத்துவிட்டது. இவை மட்டுமின்றி, தேவனின் எதிரிகள் அவரைத் தூஷிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாகவும், முறையற்ற கர்ப்பம் தரித்த அவமானத்திற்கும், ஒன்றும் அறியாத குழந்தையின் மரணத்திற்கு ஏதுவாகவும், பின்னாட்களில் அப்சலோம் தவறான முறையில் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்வதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போரில் அவன் மரணமடைவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. மேலும் இஸ்ரவேல் மக்கள் அனைவருடைய பார்வையில் படும்படி தாவீதின் மனைவிகளைத் தீட்டுப்படுத்திய தவறான செயலுக்கும், தாவீதின் குடும்பத்தார் ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்யப்படுவதற்கு ஏதுவான சூழலை உண்டாக்கியதற்கும் பத்சேபாளின் ஒரு சிறிய பாவம் காணமாக அமைந்துவிட்டது. (2 சாமு. 12:11-18)

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.