முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
காயங்களையும் பார்க்கின்றன
 
என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
 
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
 
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
 
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
 

’காலம் கடந்த கிறித்தவப் பாடல்கள்’ என்றாலே சில பிரபலங்களின் பெயர்கள் தான் ஞாபகத்திற்கு வரும். அத்தகையோரின் வரிசையில் இல்லாத, ஆனால் அநேகருடைய உள்ளத்தில் கிறிஸ்தவ இராஜ்ஜியத்தை தனது பாடல்களின் வழியாகக் கடத்தியவர் சகோ. மர்காஸிஸ் அற்புதராஜ் அவர்கள்.

அவர் எழுதின ’சிலுவை நாதர் இயேசுவின்’ மற்றும் ’அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்’ என்ற இரு பாடல்களும் காலம் கடந்தவை என்றால் மிகையாகாது. இந்த இரு பாடல்களையும் கிறித்தவ உலகத்திற்கு அர்ப்பணிக்கும் போது அவர்கள் அருகில் இருந்தது தேவனுடைய கிருபையே.

ஒரு வானொலி நிகழ்ச்சிக்காக 1978 ம் ஆண்டு கிறிஸ்தவ கலைத் தொடர்பு நிலையத்திலே முதலாவது பதிவு செய்யப் பட்டது தான் ‘சிலுவை நாதர் இயேசுவின்’ என்ற பாடல். இந்த பாடலை ஒலிப் பதிவு செய்ய நாங்கள் தயார் ஆகும் போது இந்த பாடலை எவ்வாறு ஒரு தரிசனத்தின் மூலமாக கொடுத்தார் என்று விவரித்தார்.

சிலுவையில் இயேசு ஆணிகளால் கடாவப் பட்டு இருக்க ஒரு முரடன் அவரைத் தன் முரட்டுக் கைகளால் அந்த சிலுவையை அதிகமாக அசைப்பதைக் கண்டாராம். இதனால் இயேசு அதிகமாக கஷ்டப் படுவதைக் கண்டு இந்த தரிசனத்தைக் கண்ட சகோ அற்புதராஜ் அதிகமாகத் துடித்துப் போனாராம். அப்போது இயேசு சொன்ன வார்த்தைகளே பாடல் கவிகளாக மாறினது. இந்த பாடலுக்கான முகவுரையுடனும், ஜெபத்துடனும் இந்த பாடலை ஒலிப் பதிவைச் செய்யும் போது எங்கள் எல்லாரையும் கல்வாரிக்கு அழைத்துச் சென்றதாக இருந்தது.

FMPB க்காக ஒரு இடைவெளிக்குப் பின்னர் அறைகூவல் வானொலி நிகழ்ச்சியைத் தயார் செய்த போது தான் ’அர்ப்பணித்தேன்’ என்ற பாடல் முதலாவதாக ஒலிச் சுருளிலே பதிவு செய்யப் பட்டது. இந்த பாடலை தூத்துக்குடி கத்தோலிக்க ஒலிப் பதிவு நிலையத்தில் 1980 ஆம் ஆண்டு ஒலிப் பதிவு செய்யும் போது தமிழகத்தில் இருந்து அருட்பணியாளர்கள் இந்தியா முழுவதும் செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் தான் இந்த பாடல் எழுதப்பட்டது என்ற முகவுரையுடன் இந்தப் பாடலும் பதிவு செய்யப் பட்டது.

அற்புதராஜ் ஐயாவின் பெருவாரியான பாடல்களுக்கு பின்னிசை அமைத்தது திரு. விக்டர் தங்கதுரை அவர்கள்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
ஒரு சாதாரணமான பிரசங்க பீடத்தில் நின்று இன்றை செய்தியின் தலைப்பு கிறிஸ்துவுக்காகப் பாடு சகிப்பதைப்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
மீட்புக்கு இரண்டு விஷயங்கள் முற்றிலும் அவசியமானவை: முதலாவது பாவத்தின் குற்ற உணர்விலிருந்தும் அதின்...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
"இதற்காகப் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி ஜெபம் பண்ணுவானாக." (சங்கீதம் 32:6). தொடர்ந்து வாசிக்க...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 20, 2025
  உங்கள் பதில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் உங்களின் பதில் நித்தியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்....

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.