முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல் பிறந்த கதை

1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே!
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களே!
 
              பல்லவி
அல்லேலூயா! அல்லேலூயா! - என்று
எல்லாரும் பாடிடுவோம்!
அல்லலில்லை! அல்லலில்லை!
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்!
 
2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களே!
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களே!
                - அல்லேலூயா!
 
3. நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களாம்!
மிஞ்சும் ஓசைத் தாளங்களால்
மேலும் பரவசம் நாடுங்களே!
                - அல்லேலூயா!
 
4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே!
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்ச்
சீயோனின் கீதம் பாடுங்களே!
                - அல்லேலூயா!

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுக் காரியதரிசியாகத் திருப்பணியாற்றிய மறைதிரு. டாக்டர். தயானந்தன் பிரான்சிஸ், ஆண்டவர் தன் வாழ்வில் தந்த அநேக ஆசீர்வாதங்களுக்காகவும், பாதுகாப்புக்காகவும், அவரைப் போற்றிப் புகழ்ந்து, நன்றி செலுத்தும் வண்ணம், அச்சூழ்நிலைகளின் அடிப்படையில், இசைப்பாடல்கள் பலவற்றை இயற்றியிருக்கிறார். ஒருமுறை சென்னையிலுள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.  அவரது நண்பரும் அவர் மனைவியாரும் தங்கள் குழந்தைகளை டாக்டர். தயாவுக்கு அறிமுகம் செய்தனர்.  பின்னர் தங்கள் கடைக்குட்டியைப் பார்த்து, டாக்டர். தயாவுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டும்படி கேட்டுக் கொண்டார்கள்.  அந்தக் குழந்தை உடனே ஒரு பாடலைப் பாடியது.

''மிக நன்றாய்ப் பாடினாய்!'' என்று டாக்டர். தயா தன் பாராட்டுக்களைத் தெரிவித்து, அவர்களிடமிருந்து விடைபெற்றார். டாக்டர். தயா அன்று அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாத உண்மை என்னவெனில், அப்பாடல் அவர் இயற்றிய இப்பாடலாகும்.  திருமறையின் சங்கீதப் புத்தகப் பாடல்களின் சாயலில் அவர் இப்பாடலை எழுதினார்.

தமிழ் நாடு இறையியல் கல்லூரியின் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக, டாக்டர். தயா இப்பாடலை எழுதினார்.  அவரது நண்பரும், இசைவல்லுனரும், அக்கல்லூரியின் பேராசிரியருமான டாக்டர். மெ. தாமஸ் தங்கராஜ், இப்பாடலுக்கு இனிய இசை அமைத்துக் கொடுத்தார்.  இந்த இசையமைப்பின் காரணமாக இப்பாடல் வெகுவிரைவில் பல இடங்களில் பரவியது.  திருமறைத் தொடர்கள், திருமறை சார்ந்த கருத்துக்கள் காரணமாகவும் இப்பாடல்  செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும்.  இப்பாடலைச் சகோதரி பி. வசந்தா இசைத்தட்டில் பாடியிருக்கிறார்கள்.

மற்றுமொரு முறை, டாக்டர். தயா கிறிஸ்தவக் கலைத் தொடர்பு நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில், 3.11.1970 அன்று, சென்னை அண்ணா சாலையில் தனது ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது குறுக்கே ஒரு சைக்கிள் வந்ததால், பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்த முயன்றபோது, அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  அப்போது அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பேருந்தில் அடிபட்டு நொறுங்கிவிடாமல், மயிரிழையில் உயிர் தப்பினார்.

பல நாள் சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மாத காலம் மஞ்சள் காமாலை வியாதியினால் பாதிக்கப்பட்டு, மூன்று மாதகாலம் படுத்த படுக்கையானார்.  அப்படுக்கையில் அவர் சுகம் பெற்று வந்த நாட்களில், ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கீழ்க்கண்ட பாடலை இயற்றினார்:

எடுப்பு
உன்னைப் போல இயேசுவே - உலகிலே
என்னைத் தாங்குவார் யாரே?
 
தொடுப்பு
அன்னை வயிற்றில் இருந்த நாள்முதல்
ஆளாய் வாழும் காலம் முழுதும்
முன்னும் பின்னும் சூழ்ந்தே அன்பால்
மோசம் நாசம் யாவிலும் காக்கும்!
                - உன்னை
 
1. விரைந்து ஓடியே விபத்தில் சிக்கி நான்
வீழ்ந்து மடியும் வேளை வந்தாய்;
பரிந்தே என்னைப் பற்றி யெடுத்தாய்;
பசுமை வாழ்வும் பலமும் தந்தாய்!
                - உன்னை
 
2. கொடிய நோயின் பிடியில் சிக்கி நான்
குமுறி யழுத வேளை வந்தாய்;
மடிய மாட்டாய் மகனே என்றாய்;
மனதில் உடலில் நலனைத் தந்தாய்!
                - உன்னை.

இப்பாடலுக்குத் திருவாளர்கள் பீட்டர்- ரூபன் இசையமைத்து, CACS நிறுவனத்தில் திரு. J.M. ராஜு பாட, ஒலிப்பதிவானது. FEBA மற்றும் CACS இசை நிகழ்ச்சிகளில் இப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் அருள்திரு. எசேக்கியேல் ஜார்ஜ் இப்பாடலைப் பல இடங்களிலும் பாடிப் பிரபல்யப்படுத்தினார்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஆகஸ்ட் 20, 2025
நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான இரண்டு கேள்விகள்: உண்மையாகவே தேவன் இருக்கிறாரா? அப்படி...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 19, 2025
கிறிஸ்து மரித்தாரா? அவர் சிலுவையில் கோரமான முறையில், வேதனையுடன், அவமானத்தையும், சாபத்தையும்...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 19, 2025
நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு மதங்கள் இருந்தபோதிலும், வேதாகமும் மனிதனின் மனசாட்சியும் ஒரு ஒரே...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
சாத்தானின் சுவிசேஷம் ஒரு புரட்சிகர கொள்கைகளின் அமைப்பும் அல்ல, அது ஒரு அராஜகவாதத் திட்டமும் அல்ல....

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
நாவு நம்முடைய சரீரத்தில் மிகவும் சிறிய அவயம். ஆனால் அது உலகம் அளவிற்கு தீமையை கொண்டிருக்கிறது. அது...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
மனிதகுலம் ஆதாமின் வீழ்ச்சியின் மூலம், நாம் தேவனின் அன்பை மட்டுமல்ல, நமது இயல்பின் தூய்மையையும்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.