முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: இடமுண்டு என் உள்ளத்தில்

ஆசிரியர்: எமிலி எலியட் 

பாடல் பிறந்த கதை

1. சிங்காசனமும் ராஜ கிரீடமும்
துறந்தெனக்காய் புவி வந்தீர்;
ஆயினும் உம் தூய பிறப்பிற்கு
பெத்லகேமில் இடமில்லை.
  வாரும் ஆண்டவா, இயேசுவே,
  இடமுண்டு என் உள்ளத்தில்.

2. உம் ராஜ கட்டளையைக் கூறியே
தூதர் சேனையும் பாடியதே;
ஆனால் தாழ்மை மிகுந்த நீர் ஏழை மரி
மைந்தனாக இப்பூவில் வந்தீர்.
  - வாரும் ஆண்டவா

3. குழியுண்டு நரிக்கு, பறவைகட்கு
கூடுண்டு மர நிழலில்;
தேவ மைந்தனே, உம் படுக்கை எங்கே?
கலிலேய வனாந்தரத்தில்
  - வாரும் ஆண்டவா

4. விடுவிக்கும் ஜீவ வார்த்தை கொண்டு வந்தீர்
உம் மக்களை விடுவிக்கவே;
ஐயோ! ஏளனமாய் முள் கிரீடம் சூட்டி
கல்வாரிக்கனுப்பினரே.
  - வாரும் ஆண்டவா

5. பரலோகம் களித்து, விண்தூதர் பாடும்
உம் வெற்றி வருகையின் நாள்;
"இடமுண்டு, என் அருகில் வா" என்னும்
உம் வார்த்தை என் உள்ளில் தாரும்.
  - வாரும் ஆண்டவா
 

குதூகலமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஆதாரமான, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி, தூய வேதத்தில் வாசித்துக் கொண்டிருந்த எமிலி எலியட் இவ்வார்த்தைகளைக் கண்டபோது வேதனைப்பட்டாள். இந்த வசனம் அவள் உள்ளத்தில் எழுப்பிய கேள்விக் குறிக்குப் பதிலாக இப்பாடலை எழுதினாள்.

இறைமகன் இயேசு தியாக அன்பினால் இவ்வுலகில் மனு உரு எடுத்த செயலையும், அதற்கு எதிரிடையாக, இவ்வுலக மக்கள் காட்டிய அன்பற்ற பதிலையும் ஒப்பிட்டு தியானித்த எமிலி, தன் பாடலின் முதல் 4 சரணங்களையும் ஒப்பிடும் காட்சிகளாகவே எழுதினாள். ஒவ்வொரு சரணத்திலும் முதலிரு வரிகள் இயேசுவின் பிறப்பின் தியாக அன்பை எடுத்துக் கூறுகின்றன. பின்வரும் இருவரிகள் அவருக்கு நாம் அளித்த அன்பற்ற பதிலை எடுத்துக்காட்டுகின்றன. இயேசுவின் முதலாம் வருகையைப் பற்றி இவ்வாறு எழுதின எமிலி, 5-வது சரணத்தில், அவரது கம்பீரமான இரண்டாம் வருகையைப் பற்றி எழுதி, "இவ்வருகையில், முதல் வருகையின் வேறுபாடுகள் அனைத்தும் மாறிப்போகும்", என்ற நல் நம்பிக்கையுடன் இப்பாடலை முடிக்கிறார்.

இப்பாடலை இயற்றிய எமிலி, 22-7-1836 அன்று இங்கிலாந்திலுள்ள பிரைட்டனில் பிறந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் திருச்சபையின் நற்பணிக்கென்று அர்ப்பணித்து வாழ்ந்தார். தாம் இருந்த பகுதியில் செய்யப்பட்ட மீட்புப் பணிகளிலும், ஞாயிறு பள்ளி ஊழியங்களிலும் உற்சாகமாக ஈடுபட்டார். "நான் பாவி தான்" என்ற பிரபல பாடலை இயற்றிய சார்லெட் எலியட் இவருடைய மருமகளாவார். ஆறு ஆண்டுகள் "திருச்சபையின் மிஷனரி ஊழியத்தில் சிறுவர் பணி" என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். நோய்வாய்ப்பட்டோர், உடல் ஊனமுற்றோர், மற்றும் குடும்பங்களில் பிரச்சனையோடு இருப்பவர்களின் உபயோகத்திற்கென்று 48 பாடல்களை எழுதி, "தலையணைக்கடியில்" என்ற தலைப்பில் வெளியிட்டார்.

இப்பாடலை, எமிலி தன் தந்தையின் ஆலயமாகிய தூய மாற்கு ஆலயத்தின் பாடகர், மற்றும் ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளின் உபயோகத்திற்கென எழுதினார். சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் உண்மையான நோக்கத்தை எடுத்துக்காட்டவே இப்பாடல் எழுதப்பட்டது.

அந்நாட்களில் இங்கிலாந்து தேசத்தில் புகழ்பெற்ற ஆர்கன் இசைமேதையான போதகர் தீமோத்தேயு R. மத்தேயு இப்பாடலுக்கு "மார்கரெட்" என்ற ராகத்தை, அமைத்துக் கொடுத்தார்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
டிசம்பர் 19, 2025
அன்பான நண்பரே, இன்று உங்கள் உள்ளத்தில் மன நிம்மதி இருக்கிறதா? "எப்படியாவது இந்த குடி பழக்கத்தை...

Read More ...

Intro Image
டிசம்பர் 19, 2025
  அன்பானவர்களே! இந்த உலகத்தில் ஜாதி மதம் இனம் மொழி நாடு என வேறுப்பாடு பார்க்காமல் உலகமெங்கும் ஒருமித்து இயேசு கிறிஸ்துவின்...

Read More ...

Intro Image
டிசம்பர் 11, 2025
தினந்தோறும் பிரச்சனையோடு இருக்கும் ஒரு மனிதனை கற்பனை செய்து பாருங்கள். பரிசுத்த வேதத்தில்...

Read More ...

Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.