முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: இயேசென்னை நேசிக்கிறார்

ஆசிரியர்:  பிலிப் ட. பிளிஸ்

பாடல் பிறந்த கதை

ஆனந்தம் என் இயேசு அன்புள்ளவர்,
அவர் தந்த வேதத்தில் வாசிக்கின்றேன்;
அதிசயமானவை அதிலே உண்டு;
இயேசென்னை நேசிப்பது நிச்சயம்.

    மகிழுவேன்! நேசிக்கிறார்!
    நேசிக்கிறார்! நேசிக்கிறார்!
    மகிழுவேன்! நேசிக்கிறார்!
    இயேசென்னை நேசிக்கிறார்!

தூரமாய் விலகிச் சென்றபோதும்
தேடித் தொடர்ந்ததே தேவ அன்பு;
நேசிக்கும் அன்பரை நான் நினைத்தே
நேசக் கரத்தில் தஞ்சம் புகுவேன்.
    - மகிழுவேன்

ராஜாதி ராஜனைக் காணும்போது
பாடலொன்று மட்டும் பாடச் சொன்னால்,
இயேசென்னை நேசிக்கும் அற்புதத்தை
நித்தியத்தில் நானும் பாடிடுவேன்
    - மகிழுவேன்

நவயுக ஞாயிறுபள்ளிகளின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ரேய்க்ஸின் ஊழியங்கள் மூலம், 18ம் நூற்றாண்டில், சிறுவர் சுவிசேஷ நற்பணியின் முக்கியத்துவத்தை திருச்சபை உணர்ந்தது. இச்சிறுபிள்ளைகளின் ஊழியத்தை, பாடல்களின் மூலமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பதையும், திருச்சபை நன்கு கண்டு கொண்டது.

இத்தேவையைச் சந்திக்க, 19-ம் நூற்றாண்டின் நற்செய்தி இசை வல்லுனர்களான சாங்கி, பேனி கிராஸ்பி, மற்றும் பிலிப் ட. பிளிஸ் ஆகியோர் பல பாடல்களை சிறுவர்களுக்கென்றே இயற்றினார்கள். வேத போதனைகளை சிறுபிள்ளைகள் கற்றுக்கொள்ள இப்பாடல்கள் பெரிதும் உதவின. "இப்பாடலாசிரியர்களில், குறிப்பாக, நற்செய்தியின் அடிப்படைச் சத்தியங்களை அழகாகப் பாடக்கூடிய வகையில் பாடலமைப்பதில் சிறந்த தாலந்து படைத்தவர், பிளிஸ்ûஸப்போல் வேறு எவருமில்லை", என அவரது இசைத்துறை நண்பர் ஜார்ஜ் இ. ஸ்டெப்பின்ஸ் கூறியிருக்கிறார்.

ஒருமுறை, பிளிஸ் ஒரு கூட்டத்தில், "நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன்", என்ற பல்லவியை மீண்டும் மீண்டும் பாடக் கேட்டுக்கொண்டேயிருந்தார். அப்பொழுது அவர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. "என் ஆண்டவரின் நித்திய அன்பைப் புகழ்ந்து பாடாமல், அவரிடம் நான் வைத்திருக்கும் சாதாரண அன்பை மீண்டும் மீண்டும் பெரிதாகப் பாடுவதேன்"? என்பதே. இந்தக் கேள்வியின் அடிப்படையில் தான், இப்பாடல் அவர் உள்ளத்தில் உருவானது.

இந்த அழகான பாடல் எழுதப்பட்டவுடனே, சீக்கிரத்தில், பல நாடுகளிலும் பிள்ளைகள் விரும்பிப் பாடும் பாடலென சிறப்புப் பெற்றது. சிறுவர் ஊழியத்தில் வாஞ்சை மிக்க பிளிஸ், அனைத்து ஞாயிறு பள்ளிகளின் உபயோகத்திற்கென்றே, 1871 - ம் ஆண்டு "ஞாயிறு பள்ளிகளின் அலங்காரம்", என்ற தலைப்பில் ஒரு சிறுவர் பாடல் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டது. இப்பாடல் இன்றும் சிறுவர் விரும்பிப் பாடும் பாடலாக விளங்குகிறது.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 17, 2026
உலகில் பலரும் தங்கள் “சுயசித்தம்” அல்லது “சுதந்திரச் சித்தம்” (Free Will) குறித்துப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
மே 06, 2026
திருச்சபையார் வெறும் மனிதனுடைய அபிப்பிராயங்களைக் கேட்காமல், தங்களுக்கான தேவனுடைய ஜீவ வார்த்தையையே...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 19, 2026
ஆவிக்குரிய ஆபத்துகள் நிறைந்த காலத்திலே வாழும் நீங்கள், மற்றவர்களுடைய ஆத்தும நன்மைக்காக உங்களால்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
பனிப்பொழிந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், இதே வசனத்தைக் கேட்டபோதுதான் சார்லஸ் ஸ்பர்ஜன் தேவனுடைய...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
கிறிஸ்தவ விசுவாசத்தின் மிக முக்கியமான உபதேசங்களில் ஒன்று ‘நியாயப்பிரமாணத்திற்கும்’ (Law)...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 19, 2026
கல்லின்மேல் கட்டப்பட்ட சபையில் நீங்கள் இருக்கிறீர்களா? ஒரே மெய்யான திருச்சபையில் நீங்கள்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.