முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: கர்த்தாவே, யுகயுகமாய்

ஆசிரியர்: ஐசக் வாட்ஸ்

பாடல் பிறந்த கதை

 

1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்:
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.
 
2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.
 
3. பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்,
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.
 
4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.
 
5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார் ;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.
 
6. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.

''ஆங்கிலத் திருச்சபைப் பாடல்களின் தந்தை'' என்று அழைக்கப்படும் போதகர் டாக்டர் ஐசக் வாட்ஸ், 17.07.1674 அன்று இங்கிலாந்திலுள்ள சௌத்தாம்டனில் பிறந்தார்.  அவரது தந்தை ஒரு மறுமலர்ச்சித் திருச்சபையின் போதகர்.  கல்வியறிவு நிறைந்த அவர், வாட்ஸ் பிறந்த நாட்களில், தனது புரட்சிகரமான மறுமலர்ச்சிக் கொள்கைகளுக்காகச்  சிறையிலிருந்தார்.  அவரது 9 பிள்ளைகளில் மூத்த மகன்தான் வாட்ஸ்.

சிறுவயதிலிருந்தே, வாட்ஸ் கவிதை இயற்றுவதில் சிறந்த தாலந்து படைத்தவராக விளங்கினார்.  அவர் சாதாரணமாகப் பேசுவது கூட கேட்போரின் பொறுமையைச் சோதிக்குமளவிற்குக் கவிதை நயமாக இருந்தது.  இந்தப் பழக்கத்தை விட்டுவிடும்படி, ஒரு முறை அவர் தந்தை அவரைத் திட்டினார். அப்போது வாட்ஸ் அழுதுகொண்டே,

'' இரக்கம் காட்டுங்கள் தந்தையே

கவிதை புனையேன் இனியே ''

என்று கவிதை நயத்திலேயே பதிலளித்தார்!

வாட்ஸ் தமது 5-வது வயதில் லத்தீன் மொழியையும், 9-வது வயதில் கிரேக்க மொழியையும், 11வது வயதில் பிரெஞ்சு மொழியையும், 13-வது வயதில் எபிரெய மொழியையும், தம் தந்தையிடம் கற்றுத் தேறினார்.  பல துறைகளிலும் சிறந்த  மேதையாக விளங்கினார்.  இவர் எழுதிய பாடல்கள், புதுமையான கோணத்தில் இருந்ததால், இவர், அக்காலத்தின் புரட்சிக் கவிஞராகக் கருதப்பட்டார்.  இவருடைய புத்தகங்கள் இவர் வாழ்ந்த 17-ம், 18-ம், நூற்றாண்டு மக்களின்  கண்ணோட்டத்தையே மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தவைகளாக விளங்கின.

இப்பாடல், மோசேயின் சங்கீதமாகிய,  90-ம் சங்கீதத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது.  காலத்தின் அருமையை அழகாகச் சித்தரிக்கும்  இச்சங்கீதத்தை,  வாட்சின் இப்பாடல் இன்னும்  மதிப்பு மிக்கதாக உயர்த்தியுள்ளது.  எனவே, இது ஆங்கிலத் திருச்சபைப் பாடல்களில், உயர்வாய் மதிக்கப்படும் உன்னதப் பாடலாய் இன்றும் விளங்குகிறது. 9 சரணங்களோடு எழுதப்பட்ட இப்பாடலின் 1, 2, 3, 5, 9-ம் சரணங்களே, இப்போது பொதுவாகப் பாடப்படுகின்றன.  இப்பாடலை 1719-ம் ஆண்டு, வாட்ஸ்'' புதிய ஏற்பாட்டு நடையிலுள்ள தாவீதின் சங்கீதங்கள்'' என்ற பாடல் புத்தகத்தில் வெளியிட்டார்.

இப்பாடலுக்கு வாட்ஸ் கொடுத்த பெயர் ''மனிதனின் பெலவீனமும், தேவனின் நித்திய தன்மையும்.'' அந்நாட்களில் இங்கிலாந்தின் ஆன் அரசி, 1.8.1714 அன்று திடீரென மரித்ததைத் தொடர்ந்து தோன்றிய, நிலையில்லாத அரசியல் நிலையும், வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யூத ராஜாவாகிய யோசியா,  கி.மு. 609-ல், தனது வாலிப வயதில், எகிப்தின் ராஜாவால் கொல்லப்பட்டபோது,  யூதேயா நாட்டில் நிலவிய  குழப்பநிலையும் வாட்சை மனிதனின் நிலையற்ற தன்மையைப்பற்றிச் சிந்திக்கச் செய்து, இப்பாடலை எழுதத் தூண்டின.

இப்பாடல், ஐசக் வாட்ஸ் எழுதிய 600-க்கும் மேற்பட்ட பாடல்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  இங்கிலாந்து தேசத்தின் எல்லாப் பண்டிகை நாட்களிலும் இப்பாடல் பாடப்படுகிறது.  எனவே, 1748-ல் தனது

74-வது வயதில் வாட்ஸ் மரித்தபோது, அவரது தாய்நாடு வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைத்துக் கௌரவித்தது.

இப்பாடலுக்கு வில்லியம் கிராப்ட் அமைத்த, ''தூய ஆன் '' என்ற ராகம் இணைக்கப்பட்டது.  இப்பாடலினால் அந்த ராகம் பிரபல்யமாகி, பின்னர் இசை மேதைகளான ஜார்ஜ் F. ஹாண்டல், J.S. பாக் ஆகியோர் அந்த ராகத்தை விரும்பித் தங்கள் பாடல்களில் உபயோகித்தனர்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.