முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: நற்செய்தி கூறுவேனே

ஆசிரியர்: கேத்தரின் ஹான்கே

பாடல் பிறந்த கதை

1. நற்செய்தி கூறுவேனே! மேலோர் காணாததை;
இயேசுவின் மகிமையை! இயேசுவின் அன்பையே!
நற்செய்தி கூறுவேனே! சத்தியமானதே;
என் வாஞ்சையை வேறொன்றும் திருப்தி செய்யாதே.
 
    நற்செய்தி கூறுவேனே! மேலோகிலும் அதுவே;
    இயேசுவின் அன்பைப்பற்றி நான்  மீண்டும் கூறுவேன்.
 
2. நற்செய்தி கூறுவேனே! ஆச்சரியமானதே;
பொன்மய கனவுகள் ஒப்பானதல்லவே;
நற்செய்தி கூறுவேனே! எனக்கு செய்திட்ட
அனைத்திற்காகவுமே இப்போதே கூறுவேன்
                                                          - நற்செய்தி
 
3. நற்செய்தி கூறுவேனே! மீண்டும் சொல்ல நன்றே;
 சொல்லச் சொல்லச் செய்தியின் இனிமை கூடுதே;
நற்செய்தி கூறுவேனே! கேளார் இன்னும் உண்டே
தேவ தூய வார்த்தையின் ரட்சிப்பின் செய்தியை.
                                                          - நற்செய்தி
 
4. நற்செய்தி கூறுவேனே! நன்றாய் அறிந்தோரும்
மற்றோரைப் போலக் கேட்க வாஞ்சையாய் உள்ளோரே;
மகிமையிலே நானும் புதிதாய்ப் பாடினும்
அப்பாடல் நான் விரும்பும் இந்த நற்செய்தியே.
                                                          - நற்செய்தி

இங்கிலாந்து தேசத்தில் நற்செய்திப் பணியானது, ஜார்ஜ் வொயிட்பீல்டு, மற்றும் வெஸ்லி சகோதரர்களின் ஊழியங்களால், பதினெட்டாம் நூற்றாண்டில் விறுவிறுப்படைந்தது.  ஆயினும்,  ஆரம்ப நாட்களில் இப்பணி, சமுதாயத்தின் கீழ்நிலை மக்கள் மத்தியில் தான் சிறப்பாக நடைபெற்றது.  பின்னர், 19-ம் நூற்றாண்டில், உயர்நிலை மக்களும் நற்செய்திப் பணியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.  தென்கிழக்கு லண்டனின் கிளாபம் என்ற பகுதியில் உள்ள வசதிபடைத்த மக்கள், வேத போதனையிலும், ஜெப ஐக்கியத்திலும் உறுதியுள்ளவர்களாய், பல இடங்களிலும் நற்செய்தி பரவ செயல்பட்டனர்.  இம்  மக்கள் இங்கிலாந்து திருச்சபையின் அங்கத்தினர்களாகத் தொடர்ந்து நிலைத்திருந்து, நற்செய்திப் பணியை உற்சாகமாகச் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஊழிய வாஞ்சை நிறைந்த ஒரு செல்வந்தரின் மகளாக, கேத்தரின் ஹான்கே 1834-ம் ஆண்டு பிறந்தார்.  தந்தையின்  சுவிசேஷ பாரம், மகளின் உள்ளத்தையும் நிரப்பிற்று.  தன் வாலிப வயதிலேயே, லண்டன் மாநகரின் பலதரப்பட்ட பிள்ளைகளுக்கு, ஞாயிறு பள்ளிகள் அமைத்து, சிறுவர் ஊழியம் செய்தாள்.  இப்பணியின் மூலம், அநேக வாலிபர்கள் ஊழியர்களாக எழும்பினார்கள்.  கேத்தரின், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் திறமை மிக்கவள்.  இத்தாலந்துகள் மூலம் அவள் சம்பாதித்த பணம் அனைத்தையும், தூர தேச மிஷனரிப் பணிகளுக்கென்று, காணிக்கையாக அனுப்பி வைத்தாள்.

இவ்வாறு ஊழியம் செய்த கேத்தரின், தனது முப்பதாவது வயதிலேயே, கடுமையான வியாதிக்குள்ளானாள்.  வியாதிப் படுக்கையின் நாட்களையும் வீணாக்காமல்,  இயேசு கிறிஸ்துவின் இவ்வுலக வாழ்க்கையை, 50 சரணங்களடங்கிய ஒரு பெரிய கவிதையாக எழுதினாள்.  இரு பகுதிகளாக எழுதப்பட்ட இக்கவிதையின் முதற்பகுதியின் தலைப்பு, "தேவையான நற்செய்தி".  இப்பகுதியை மையமாகக் கொண்டு,  "தொன்மை மிக்க அந்நற்செய்தியை எனக்குக் கூறுங்கள்"  என்ற பிரபல பாடலை அவள் எழுதினாள்.  பின்பு, அதே ஆண்டிலேயே, இரண்டாம் பகுதியின் அடிப்படையில், ''அந்நற்செய்தியை நான் கூற விரும்புகிறேன்.''  என்ற இந்த அருமையான பாடலைத் தன் முதல் பாட்டிற்குப் பதிலாக அமையுமாறு எழுதினாள்.

இசையிலும் திறமையுள்ள கேத்தரின், இப்பாடலுக்கு ராகத்தையும் அமைத்தாள்.  பின்னர், 1867- ல் கனடாவின் மான்ட்ரியலில் நடைபெற்ற, Y.M.C.A பன்னாட்டுக் கூட்டத்தில், மேஜர் ஜெனரல் ரஸ்ஸல் இந்தப் பாடலைத் தன் செய்தியில் அறிமுகம் செய்தார்.  அந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட அமெரிக்க இசை வல்லுனரான வில்லியம் D. டோயன் இப்பாடலை விரும்பியதால், அருமையான மற்றொரு ராகத்தை இதற்கு உருவாக்கினார்.

பின்னர், பிலடெல்பியாவின் இசை மேதையான வில்லியம் G. ஃபிஷர், இப்பாடலுக்கு புதியதொரு ராகம் அமைத்து, இப்பாடலின் பல்லவியையும் இணைத்தார்.  1875-ல் பிளிஸ் -சாங்கி வெளியிட்ட '' நற்செய்திப்  பாமாலைகளும், பக்திப் பாடல்களும் '' என்ற புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்று பிரபலமானது.

கட்டுரைகள்
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மே 07, 2025
வேதபுத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதன்...

Read More ...

Intro Image
மே 07, 2025
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்....

Read More ...

Intro Image
ஏப்ரல் 23, 2025
நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
ஆர்மீனியர்கள் என்ற பிரிவினர் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து வேதத்திலுள்ள இயேசுகிறிஸ்துவா? என்று...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது. பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து,...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.