முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

ஆசிரியர்: நாகூம் டேட்

பாடல் பிறந்த கதை

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க,
விண்ஜோதி கண்டனர்.
 
2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண்தூதன்: ''திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.''
 
3. ''தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய்க் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.''
 
4. ''இதுங்கள் அடையாளமாம்,
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.''
 
5. என்றுரைத்தான்; அஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.
 
6. "மா உன்னதத்தில் ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்.''

புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ சபை உருவான 16-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரை, திருச்சபையின் பாடல்கள் அனைத்தும் ''ஸ்டெர்ன்ஹோல்ட் ஹப்கின்ஸ் சால்ட்டர்'' என்ற சங்கீதங்களின் அமைப்பில் பாடப்பட்டன. இப்பாடல்கள் கரடுமுரடான அமைப்பாக இருந்ததால், அவற்றைப் பாடுவது கடினமாக இருந்தது. எனவே, சங்கீதங்களை நவீன முறையில் மாற்றியமைத்து, எளிதில் பாடும்படி அமைக்க, 1696-ம் ஆண்டு, இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களான நாகூம் டேட்டும், நிக்கோலஸ் பிராடியும் முயற்சி எடுத்தனர்.

கடும் எதிர்ப்புகள் மத்தியில், வில்லியம் அரசனின் ஆதரவுடன், இப்புதிய அமைப்பு சங்கீதங்கள் இங்கிலாந்து திருச்சபையில் உபயோகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1700-ம் ஆண்டு, சங்கீதங்களின் மற்றொரு துணைத் தொகுப்பையும் வெளியிட்டனர். இத்தொகுப்பில், சங்கீதங்களைத் தவிர, 16 பாடல்களையும் அறிமுகம் செய்தனர். இவற்றில் இப்பாடலும் ஒன்று.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேத பகுதியில் வரும், ''தேவ தூதர்கள் மேய்ப்பர்களுக்கு இயேசு பிறந்த நற்செய்தியை அறிவிக்கும் சம்பவத்தை'', எளிய நடையில் கிறிஸ்மஸ் கீதமாக இப்பாடலில் எழுதினார்கள். மற்றப் பாடல்களனைத்தும் காலத்தினால் அழிக்கப்பட்டுப் போயினும், இந்த கிறிஸ்மஸ் பாடல், பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்மஸ் தரும் உண்மையான மகிழ்ச்சியைச் சுட்டிக் காட்டும் பாடலாக விளங்குகிறது.

நாகூம் டேட் 1652-ம் ஆண்டு, அயர்லாந்தைச் சேர்ந்த டப்ளினில் வாழ்ந்த போதகரின் மகனாகப் பிறந்தார். லண்டனின் திருத்துவ இசைக் கல்லூரியில் படித்துத் தேறினார். 1690-ம் ஆண்டு, ''இங்கிலாந்து தேசப் புலவர்'', என்ற சிறப்புப் பட்டமும் பெற்றார். ஆனால், அவரது குடிப்பழக்கமும், ஊதாரித்தனமான செயல்களும் அவரது வாழ்வைக் கெடுத்தன. இறுதியில், 1715-ம் ஆண்டு லண்டனில், ஒரு கடன்பட்டோரின் அகதி இல்லத்தில், பரிதாபமாக மரித்தார். அவருடைய உற்ற நண்பரான பிராடியோ, தன் வாழ்நாள் முழுவதும், போதகராக, ஆண்டவருக்குச் சேவை செய்தார். இப்பாடலுக்கு, புகழ்பெற்ற ஜார்ஜ் F. ஹேன்டல் அமைத்த ராகத்தை, ''கிறிஸ்மஸ்'' என்ற தலைப்பில் இணைத்தனர்.

கட்டுரைகள்
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மே 07, 2025
வேதபுத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதன்...

Read More ...

Intro Image
மே 07, 2025
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்....

Read More ...

Intro Image
ஏப்ரல் 23, 2025
நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
ஆர்மீனியர்கள் என்ற பிரிவினர் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து வேதத்திலுள்ள இயேசுகிறிஸ்துவா? என்று...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது. பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து,...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.