images/new_theme/Promotion banner-4-2-min.jpg

       ஜெபம் தேவன் ஏற்படுத்திக் கொடுத்த நியமங்களில் ஒன்றாகும். நாம் தனிப்பட்ட முறையிலும் ஜெபிக்க வேண்டும்; அவ்வாறே பொதுக் கூடுகைகளிலும் நாம் ஜெபிக்க வேண்டும். ஆவியினால் நிறைந்த மன்றாட்டு ஜெபத்தை  ஏறெடுப்பவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக மாறுகிறார்கள். ஜெபம் காரியங்களைச் சாதிக்கக்கூடியது. யார் ஜெபிக்கிறார்களோ அவர்களும், யாருக்காக ஜெபிக்கிறார்களோ அவர்களும் தேவனிடமிருந்து பெரிய காரியங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஜெபமே தேவனின் இருதயத்தைத் திறப்பதற்கான வழியாகவும், ஜெபிக்கிறவர்களின் வெறுமையான ஆத்துமா நன்மையால் நிரப்பப்படுவதற்கான வாய்க்காலாகவும் விளங்குகிறது. ஜெபத்தின் வாயிலாக ஒரு கிறிஸ்தவர் தனது இருதயத்தை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பரிடம் திறந்து காட்டுவதுபோல தேவனிடம் வெளிப்படுத்திக் காட்ட முடியும். மேலும் அவருடன் நெருக்கமாக உறவாடி நட்பைப் பெற்று, ஒரு புதிய சாட்சியாகத் திகழ முடியும். ஜெபம் ஒரே விதமாக, மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒருவிதமான மந்திரச் சொல்போன்று இராததால், நாம் தனிப்பட்ட முறையில் ஜெபிக்கும், பொது வெளியில் ஜெபிக்கும்போதும் வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும். அவ்வாறே ஜெபிக்கும் முறையிலும் நாம் வித்தியாசத்தைக் காட்டமுடியும், அதாவது உரத்த சத்தத்தோடும் நாம் ஜெபிக்க முடியும், வெளியே சத்தம் கேட்காமல் மனதுக்குள்ளும் ஜெபிக்க முடியும். நாம் நமது தாலந்துகளைப் பயன்படுத்தி சத்தமாகவும் ஜெபிக்க முடியும், கிருபையைப் பயன்படுத்தி அமைதியாகவும் ஜெபிக்க முடியும். எவ்வாறாயினும், கைகளைக் கூப்பி, கண்களை மூடி, வாயை அசைத்துச் ஜெபிக்கும்போது நமது இருதயம் அதனுடன் இசைந்து செல்லாவிட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை. நாம் ஆவியோடும் ஜெபிக்க வேண்டும், அதே வேளையில் கருத்தோடும் ஜெபிக்க வேண்டும். ஜெபம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் காட்டக்கூடிய நான்கு காரியங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

  1. ஜெபம் உண்மையானதாக இருக்க வேண்டும்.
  2. ஜெபம் ஆவியானவரோடு (ஆவியில் ஜெபித்தல்) இணைந்து செல்ல வேண்டும்.
  3. ஆவியோடும் கருத்தோடும் ஜெபிக்க வேண்டும்.
  4. நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ அந்தக் காரியத்தைப் பற்றி சுருக்கமாக ஜெபிக்க வேண்டும்.
கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
டிசம்பர் 31, 2025
16ம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய்மைவாதிகளின் விண்ணப்பம் துதியும்.., நன்றியும்.., (Praise and...

Read More ...

Intro Image
டிசம்பர் 19, 2025
அன்பான நண்பரே, இன்று உங்கள் உள்ளத்தில் மன நிம்மதி இருக்கிறதா? "எப்படியாவது இந்த குடி பழக்கத்தை...

Read More ...

Intro Image
டிசம்பர் 19, 2025
  அன்பானவர்களே! இந்த உலகத்தில் ஜாதி மதம் இனம் மொழி நாடு என வேறுப்பாடு பார்க்காமல் உலகமெங்கும் ஒருமித்து இயேசு கிறிஸ்துவின்...

Read More ...

Intro Image
டிசம்பர் 11, 2025
தினந்தோறும் பிரச்சனையோடு இருக்கும் ஒரு மனிதனை கற்பனை செய்து பாருங்கள். பரிசுத்த வேதத்தில்...

Read More ...

Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.