முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: உம்மண்டை கர்த்தரே

ஆசிரியர்: சாரா பிளவர் ஆடம்ஸ்

பாடல் பிறந்த கதை

1. உம்மண்டை, கர்த்தரே,
நான் சேரட்டும்.
சிலுவை சுமந்து
நடப்பினும்,
என் ஆவல் என்றுமே
உம்மண்டை, கர்த்தரே, (2)
நான் சேர்வதே.

2. தாசன் யாக்கோபைப் போல்,
ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல்
தூங்குகையில்
எந்தன் கனாவிலே
உம்மண்டை, கர்த்தரே, (2)
இருப்பேனே,

3. நீர் என்னை நடத்தும்
பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணி போல்
விளங்குமாம்
தூதர் அழைப்பாரே
உம்மண்டை, கர்த்தரே, (2)
நான் சேரவே.

4. விழித்து உம்மையே
நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே, (2)
நான் சேர்வேனே.
 

21.5.1889 அன்று இங்கிலாந்திலுள்ள ஜான்ஸ்டன் பட்டணம் மிகுந்த வெள்ளப் பெருக்கினால் சூழப்பட்டது. அங்கு ஒரு வண்டி சுழல் நீரில் சிக்கி, தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது அவ்வண்டியில் கவிழ்ந்து கிடந்த ஒரு பெட்டிக்குள் ஒரு இளம் பெண் சிக்கிக் கொண்டிருந்தாள். அவள் தூர கிழக்கு நாடுகளுக்கு மிஷனரியாகச் செல்லத் தன்னை அர்ப்பணித்து, அப்பயணத்தை மேற்கொண்டவள். கரையிலிருந்து உதவி எதுவும் செய்ய முடியாமல் தவித்த மக்களை அமைதியாகப் பார்த்தாள். ஒரு ஜெபம் பண்ணிவிட்டு, இப்பாடலை எந்தவித கலக்கமுமின்றிப் பாட ஆரம்பித்தாள். கரையிலிருந்து அனைவரும் கண்ணீர் மல்க, அவளோடு பாடலில் இணைந்தனர். பாடிக் கொண்டிருக்கும் போதே அவள் ஆண்டவரின் சந்நிதியைச் சென்றடைந்தாள்.

1912 - ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிநான்காம் நாள்! இங்கிலாந்து தேசமெங்கும் ஒரே கோலாகலம்! ஊரெங்கும், புதிதாக பயணத்தைத் துவக்கப் போகும் அந்த அதிநவீன சொகுசுக் கப்பலைப் பற்றிய பேச்சுத்தான்!.

டைட்டானிக் என்ற அந்த உலகிலேயே மிகப் பெரியதும், பிரமாண்டமுமான சொகுசுக்கப்பல், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளைச் சுமந்து கொண்டு, இங்கிலாந்திலுள்ள சௌதாம்ப்டன் துறை முகத்திலிருந்து, அமெரிக்கா செல்லத் தயாராகி, கெம்பீரமாக நின்றது. அக்கப்பலை வடிவமைத்த பொறியியல் வல்லுனர்கள், "இக்கப்பல் கடலில் மூழ்குவது சாத்தியமேயில்லை." என்று பெருமையுடன் கூறினர்.

ஆனால் நடந்தது என்ன?

தன் முதற் பயணத்திலேயே அட்லாண்டிக் சமுத்திரத்தின் பனிக்கட்டிகளில் அக்கப்பல் மோதி, மூழ்க ஆரம்பித்தது.

உயிர்காக்கும் சாதனங்கள் போதுமான அளவு இல்லை. எனவே, திகிலோடு மரணத்தை எதிர் நோக்கிய 2000 - க்கும் மேற்பட்ட பயணிகளின் மன அமைதியைக் காக்க, கப்பலின் இசைக்குழு இப்பாடலை இசைக்க ஆரம்பித்தது. அனைவரும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உணர்ச்சி பொங்க, இப்பாடலைப் பாடினார்கள். மூன்று மணி நேரத்திற்குள் அதில் 1500 பேர், உறைய வைக்கும் குளிர்ந்த சமுத்திர நீரில் மூழ்கி மரித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே இதைத் தனக்கு மிகவும் விருப்பமான பாடலென்று கூறிவந்தார். 1901 - ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, உயிர் பிரியுமுன் அவர் முணுமுணுத்த வார்த்தைகள் இப்பாடலே. பின்னர் அவரது அடக்க ஆராதனையிலும், ஞாபகார்த்த ஆராதனையிலும், அமெரிக்கா முழுவதும் இப்பாடல் பாடப்பட்டது. இவ்வாறு, மிகவும் துயரமான தருணங்களில், பலதரப்பட்ட மக்களும் ஆறுதல் பெறப் பாடிய, புகழ் பெற்ற இப்பாடலை எழுதியவர், சாரா பிளவர் ஆடம்ஸ் என்ற ஒரு பெண்.

சாரா இங்கிலாந்திலுள்ள ஹார்லோவில் 22. 2. 1805 - அன்று பிறந்தாள். அவளது தந்தை பெஞ்சமின் "கேம்பிரிட்ஜ் இன்டெலிஜென்சர்", என்ற வாராந்திர புரட்சிப் பத்திரிக்கையின் நிருபர். எனவே, தந்தையின் எழுத்துத் திறமையை மகளும் பெற்றிருந்தாள்.

சாரா இளம் வயதிலேயே, அவள் பங்கு பெறும் திருச்சபையின் செய்தி மலரில், கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுவாள். பல தாலந்துகள் படைத்த சாரா ஒரு நல்ல அழகி. நடிப்பதிலும் திறமை மிக்கவள். 1834-ம் ஆண்டு ஜான் பிரிட்ஜஸ் ஆடம்ஸ் என்ற பிரபல பொறியியல் வல்லுனரைத் திருமணம் செய்து கொண்டாள். அவளுடைய பல்வேறு தாலந்துகளையும், விருப்பங்களையும் அறிந்த அவளது கணவர், அவளை மிகவும் உற்சாகப்படுத்தினார். 1837-ல் லண்டனில் உள்ள ரிச்சர்டு கலையரங்கத்தில் மாக்பெத் சீமாட்டியாக நடித்தாள். ஆயினும், அவளது உடல்நிலை பெலவீனமாயிருந்ததால், அவளால் அதில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. எனவே, நடிப்பதை விட்டுவிட்டு, எழுத்துப்பணியில் தனது கவனத்தைத் திருப்பினாள். சிறந்த எழுத்தாளராக மாறினாள்.

சாராவின் சகோதரி எலிசபெத் இசை அமைப்பதில் தாலந்து படைத்தவளாக விளங்கினாள். எனவே, திறமைவாய்ந்த இச்சகோதரிகளிடம், அவர்கள் ஆலயப் போதகர் மறைதிரு வில்லியம் ஜான்சன் பாக்ஸ் தன் திருச்சபைக்கு ஒரு புதிய பாடல் புத்தகம் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சகோதரிகள் பழைய பாடல்களுடன், 13 புதிய பாடல்களையும், 62 புதிய ராகங்களையும் இப்புதிய பாடல் புத்தகத்தில் தங்களது காணிக்கையாகச் சேர்த்தனர்.

ஒருநாள் போதகர் பாக்ஸ் யாக்கோபின் பெத்தேல் அனுபவத்தைப் பற்றி ஒரு செய்தியைத் தயாரித்தார். அச்செய்தியின் நிறைவாக ஒரு பாடல் இருந்தால் நலமாக இருக்குமென இச்சகோதரிகளிடம் கூறினார். சாரா பாடலை எழுத, எலிசபெத் அதற்கு ராகம் அமைத்தாள். இவ்வாறு, மற்றுமொரு புதிய பாடல், அவர்கள் தொகுத்த பாடல் புத்தகத்தில் இடம் பெற்றது. இப்புத்தகம்
1841 - ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில் 1844 - ம் ஆண்டு இப்பாடல் அறிமுகமானது. ஆயினும் பிரபலமாகவில்லை.
12 ஆண்டுகளுக்குப்பின் "அமெரிக்க ஆலய இசைத் தந்தை", என்று அழைக்கப்படும் லோவல் மேசன், "பெத்தனி" என்ற அருமையான ராகத்தை இப்பாடலுக்கு அமைத்தார். இந்த ராகம் இப்பாடலை உலகப்புகழ் பெற்றதாக மாற்றிவிட்டது. இந்த லோவல் மேசன் என்பவர், "என் அருள் நாதா", போன்ற பல பிரபல பாடல்களுக்கும் ராகம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுலக வாழ்க்கையில் வீசும் புயலில் நங்கூரமாக, வெற்றி அளிப்பவராக, ஆண்டவர் விளங்குகிறார் என்பதை, இப்பாடல் தெளிவாகக் காட்டுகிறது. எலிசபெத் 1846-ம் ஆண்டு எலும்புருக்கி நோயால் மரித்தாள். அவளது வியாதிப் படுக்கையில் உதவி செய்த சாராவும், இரண்டாண்டுகளுக்குள், தனது 43-வது வயதிலேயே மரித்தாள்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.