முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: எத்தனை நாவால் பாடுவேன்

ஆசிரியர்: சார்லெஸ் வெஸ்லி

பாடல் பிறந்த கதை
1. எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை!
என் ஆண்டவர், என் ராஜனின்
மேன்மை மகிமையை!
 
2. பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்;
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன் கீதமாம்.
 
3. உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்;
புலம்பல் நீங்கும் பூரிப்பால்,
நிர்ப்பாக்கியர் நம்புவார்.
 
4. ஊமையோர், செவிடோர்களும்,
அந்தகர், ஊனரும்,
உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்!
நோக்கும்! குதித்திடும்!
 
5. என் ஆண்டவா, என் தெய்வமே,
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.

"எனக்கு மட்டும் ஆயிரம் நாவுகள் இருந்தால், அத்தனை நாவுகளையும் கொண்டு என் இயேசுவைப் போற்றுவேன்!"

மொரோவியர் குழுத்தலைவர் பீட்டர் போலர்   பிரசங்க மேடையில் இவ்வாறு உற்சாகமாய் முழங்கியதைக் கேட்டுக் கொண்டிருந்தார் சார்லெஸ் வெஸ்லி. தனது ஆல்டெர்கேட் இரட்சிப்பு அனுபவத்தின் 11-வது நினைவு நாளைக் கொண்டாட, வெஸ்லி எழுத நினைத்த பாடலின் தலைப்பாய் இவ்வாஞ்சை மாறியது.

எனவே, 1749-ல் 19 சரணங்களுடன் வெஸ்லி எழுதிய இப்பாடலுக்கு, அவர் கொடுத்த தலைப்பு "ரட்சிப்பின் அனுபவ நினைவு நாள் பாடல்" என்பதே. நன்றிப் பெருக்குடன் தன் சொந்த ரட்சிப்பின் அனுபவத்தைப் பற்றி பல சரணங்களை இதில் எழுதினார். இதைப் பார்த்த அவரது சகோதரர் ஜான் வெஸ்லி, இதில் பல சரணங்களை எடுத்துவிட்டு, இதை ஒரு 7 சரணப் பாடலாக மாற்றினார்.

இப்பாடல் ஆயிரம் மொழிகளில் ஆண்டவரைத் துதிக்க விரும்புவதாகவும் அர்த்தம் கொள்கிறது. இதனால் இப்பாடல் வேதாகம மொழிபெயர்ப்பில் ஈடுபட, பல மிஷனரிகளை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தற்போது வேதாகமம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

50 ஆண்டுகளுக்கு மேல், ஆண்டவருக்காக உற்சாகமாய் உண்மையோடு ஊழியம் செய்த சார்லெஸ், 29-3-1788 அன்று மரித்தார். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது கூட, ஆண்டவரைத் துதித்து தன் கடைசிப் பாடலை அவரது மனைவியின் உதவியுடன் எழுதினார். இது, ஆண்டவர் மீது அவருக்கிருந்த அன்பையும், பாடல் எழுதுவதில் அவருக்குள் இருந்த தணியாத ஆவலையும் காட்டுகிறது.

இப்பாடலுக்கு கார்ல் G. கிளேசர், "அஸ்மோன்" என்ற ராகத்தை அமைத்தார்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 17, 2026
உலகில் பலரும் தங்கள் “சுயசித்தம்” அல்லது “சுதந்திரச் சித்தம்” (Free Will) குறித்துப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
மே 06, 2026
திருச்சபையார் வெறும் மனிதனுடைய அபிப்பிராயங்களைக் கேட்காமல், தங்களுக்கான தேவனுடைய ஜீவ வார்த்தையையே...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 19, 2026
ஆவிக்குரிய ஆபத்துகள் நிறைந்த காலத்திலே வாழும் நீங்கள், மற்றவர்களுடைய ஆத்தும நன்மைக்காக உங்களால்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
பனிப்பொழிந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், இதே வசனத்தைக் கேட்டபோதுதான் சார்லஸ் ஸ்பர்ஜன் தேவனுடைய...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
கிறிஸ்தவ விசுவாசத்தின் மிக முக்கியமான உபதேசங்களில் ஒன்று ‘நியாயப்பிரமாணத்திற்கும்’ (Law)...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 19, 2026
கல்லின்மேல் கட்டப்பட்ட சபையில் நீங்கள் இருக்கிறீர்களா? ஒரே மெய்யான திருச்சபையில் நீங்கள்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.