முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

என் அருள்நாதா இயேசுவே

பாடல் : ஐசக் வாட்ஸ்

பாடல் பிறந்த கதை
 1. என் அருள் நாதா இயேசுவே!
சிலுவைக் காட்சி பார்க்கையில்,
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.
 
2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்.
 
3. கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே.
 
4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்.
 
5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே!

போதகர் டாக்டர் ஐசக் வாட்ஸ் ஒரு புகழ் பெற்ற கவிஞர். அவரது வாலிப நாட்களில், அவரை நேரில் பார்த்திராத ஓர் அழகான நாகரீகமான பெண், அவர் எழுதிய கவிதையின் அழகில் மயங்கினாள். அவரைக் காண ஆவலாய் ஓடி வந்தாள். அந்த நேரிடைச் சந்திப்பில், வாட்ஸ் அவளது அழகில் மயங்கி நிற்க, அவளோ அவரைப் பார்க்கச் சகிக்க முடியாமல், தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். வாட்ஸ் அவளிடம் தன்னைத் திருமணம் செய்ய வேண்டினார். அவளோ, "வாட்ஸ், இந்த விலையேறப்பெற்ற ஆபரணத்தை நான்  மிகவும் நேசிக்கிறேன். ஆனால், அது அமைந்திருக்கும் பெட்டகத்தை என்னால் விரும்ப முடியவில்லையே," என்று கூறினாள்.

ஆம், வளர்ச்சி முற்றுப்பெறாத, அவலட்சணமான தோற்றமுடையவர்தான் ஐசக் வாட்ஸ். 5 அடி உயரத்தில், குள்ளமானவராய் இருந்தார். அவருடைய பெரிய தலையும், நீண்டு வளைந்த மூக்கும், அவருக்கு விகாரத் தோற்றமளித்தன. தன்னை நிராகரித்த அப்பெண்ணின் பதிலால் துவண்டு விடாமல், பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும், 30 ஆண்டுகளுக்கு மேலாக, சிறந்த நண்பர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப்பின், ஐசக் வாட்ஸ் தன் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை.

பெலவீனமான சரீரமுடைய வாட்ஸ் தன் 9வது வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். தனது

14 - வது வயதில் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். தனக்காக, சிலுவையில் தம்மையே தியாக பலியாக அளித்த இயேசுவின் அன்பை வியந்து, தன் நன்றியை வெளிப்படுத்தும்  வகையில் இப்பாடலை எழுதினார்.

அந்நாட்களில், சுய அனுபவங்களையோ, உள்ளத்தின் உணர்ச்சிகளையோ, அடிப்படையாகக் கொண்டு பாடல் எழுதுவதற்கு, மிகுந்த எதிர்ப்புகள் இருந்தன. எனினும், தன் உள்ளத்தில் சிலுவைக் காட்சியை நிறுத்தியவராக, வாட்ஸ் இப்பாடலை எழுதியிருக்கிறார். பிரபல வேதாகம வல்லுனராகிய மத்தேயு அர்னால்ட்,  "ஆங்கில மொழியில் எழுதப்பட்ட திருச்சபைப் பாடல்களில், இப்பாடல் மிகச் சிறந்தது," எனக் கூறுகிறார்.

இப்பாடலை வாட்ஸ் 1707-ம் ஆண்டு, தான் நடத்திய நற்கருணை ஆராதனைக்கென்று எழுதினார். அதே ஆண்டிலேயே வாட்ஸ் வெளியிட்ட, "பாடல்களும் ஆவிக்குரிய கீதங்களும்" என்ற பாடல் புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இப்பாடலுக்கு வாட்ஸ் கொடுத்த தலைப்பு, "கிறிஸ்துவின் சிலுவையால், உலகிற்குச் சிலுவையில் அறையப்படுதல்" என்பதாகும்.

இப்பாடலுக்கு, புகழ்பெற்ற அமெரிக்க இசை வல்லுனராகிய லோவல் மேசன், "ஹாம்பர்க்" என்ற ராகத்தை அமைத்தார். எபிரெயர்கள் தேவாலயத்திலும், ஜெப ஆலயங்களிலும் பாடும் பாடல் ராகங்களின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டுள்ளது. லோவல் மேசன், "உம்மண்டை கர்த்தரே" போன்ற பிரபல பாடல்களுக்கு ராகம் அமைத்தவராவார்.

 

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஆகஸ்ட் 20, 2025
நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான இரண்டு கேள்விகள்: உண்மையாகவே தேவன் இருக்கிறாரா? அப்படி...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 19, 2025
கிறிஸ்து மரித்தாரா? அவர் சிலுவையில் கோரமான முறையில், வேதனையுடன், அவமானத்தையும், சாபத்தையும்...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 19, 2025
நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு மதங்கள் இருந்தபோதிலும், வேதாகமும் மனிதனின் மனசாட்சியும் ஒரு ஒரே...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
சாத்தானின் சுவிசேஷம் ஒரு புரட்சிகர கொள்கைகளின் அமைப்பும் அல்ல, அது ஒரு அராஜகவாதத் திட்டமும் அல்ல....

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
நாவு நம்முடைய சரீரத்தில் மிகவும் சிறிய அவயம். ஆனால் அது உலகம் அளவிற்கு தீமையை கொண்டிருக்கிறது. அது...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
மனிதகுலம் ஆதாமின் வீழ்ச்சியின் மூலம், நாம் தேவனின் அன்பை மட்டுமல்ல, நமது இயல்பின் தூய்மையையும்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.