முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

என் முன்னே மேய்ப்பர் போகிறார்

ஆசிரியர்: ஜோசப் H. கில்மோர்

பாடல் பிறந்த கதை

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்;
நல் மேய்ப்பராகக் காக்கிறார்;
ஓர்காலும் என்னைக் கைவிடார்!
நேர் பாதை காட்டிப் போகிறார்.
முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
  என் முன்னே சென்று போகிறார்!
  நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்,
  அன்போடு பின் சென்றேகுவேன்.
 
2. கார்மேகம் வந்து மூடினும்,
சீர் ஜோதி தோன்றி வீசினும்,
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்;
என்றைக்கும் முன்னே போகிறார்.
            - முன் செல்கின்றார்.
 
3. மெய்ப்பாதை காட்டி! பின் செல்வேன்,
தெய்வீகக் கையால் தாங்குமேன்,
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழை முன்னே போகிறீர்.
           - முன் செல்கின்றார்.
 
4. ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்
நீர் சாவை வெல்லச் செய்குவீர்,
பேரின்பம் காட்டி முன் செல்வீர்.
          - முன் செல்கின்றார்.

இப்பாடல் உருவான சம்பவத்தை அதின் ஆசிரியர் ஜோசப் H. கில்மோர் இவ்வாறு கூறுகிறார் :-

"நான் பிலடெல்பியாவிலுள்ள முதல் பாப்டிஸ்ட் சபையின் புதன் மாலைக் கூட்டத்தில், சங்கீதம் 23-ப் பற்றிப் பிரசங்கிக்க அழைப்புப் பெற்றேன். தேவனால் வழிநடத்தப்படுவதின் ஆசீர்வாதங்களை எண்ணி வியந்தவனாய் தேவசெய்தி அளித்தேன். ஆராதனை முடிவில் போதகர் வாட்சனின் வீட்டில் எங்களை உபசரித்தார்கள். அப்போது எங்கள் கலந்துரையாடலின்போது, மீண்டும் "தேவனின் வழிநடத்துதலின் ஆசீர்வாதங்கள்" என்ற எண்ணம் என் உள்ளத்தில் தொனிக்கவே, ஒரு பென்சிலை எடுத்து, மட மடவென்று இப்பாடலை எழுதி, என் மனைவியின் கரத்தில் கொடுத்தேன். அதன்பின் அதை மறந்துவிட்டேன். என் மனைவி, எனக்கே தெரியாமல், அதை "" வாட்ச்மன் அண்டு ரிபிளெக்டர் '' என்ற பத்திரிக்கைக்கு அனுப்ப, அவர்கள் அதை வெளியிட்டிருந்தனர்.

மூன்று வருடங்கள் கழித்து, நியூயார்க்கிலுள்ள ரோச்செஸ்டரின் இரண்டாம் பாப்டிஸ்ட் சபையில் நியமனம் பெற, செய்தி கொடுக்கச் சென்றேன். அங்குள்ளவர்கள் பாடும் பாடல்கள் என்னவென்பதை அறிய, அவர்கள் பாடல் புத்தகத்தைத் திறந்தேன். திறந்த பக்கத்தில் இப்பாடல் இருந்தது. அப்போது தான் இப்பாடல் திருச்சபையின் பாடல்களில் ஒன்றாக மாறியிருப்பதை நான் அறிந்தேன்.''

கில்மோர், மாசாசூசெட்ஸிலுள்ள போஸ்டனில் 29.4.1834-ல் பிறந்தார். அவருடைய தந்தை நியூஹாம்ஷையர் மாகாணத்தின் கவர்னராக இருந்தார். 1861-ல் கில்மோர் நியூட்டன் மறையியல் கல்லூரியில் பட்டம் பெற்று, பல பாப்டிஸ்ட் சபைகளில் போதகராகப் பணியாற்றினார். பின்னர், கவர்னரான தன் தந்தையின் செயலாளராகவும், தான் படித்த கல்லூரியிலேயே எபிரேய மொழிப் பேராசிரியராகவும் வேலை செய்தார். அதன் பின், ரோச்செஸ்டர் பல்கலைக் கழக இலக்கியப் பேராசியராகப் பணிபுரிந்து, பல பாடப்புத்தகங்களைக் கல்லூரி மாணவர்களுக்கு எழுதி வெளியிட்டார்.

இப்பாடலை அவர் தமது 28-வது வயதில் 26.3.1862-ல் எழுதினார். பல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். எனினும், அவற்றில் இப்பாடலே பிரபலமானது.

1863-ம் ஆண்டு பத்திரிக்கையில் வெளியான இப்பாடலைப் பார்த்த வில்லியம் B. பிராட்பரி, இதற்கு இசையமைத்ததுடன், இதின் பல்லவியையும் எழுதி இணைத்தார்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.