images/new_theme/Promotion banner-4-2-min.jpg

தோராவில், அதாவது ஐந்தாகமத்தில் பாலினப் பாகுபாடு உள்ளது என்று கூறும் கட்டுரைக்கான மறுப்புரையாக இது எழுதப்பட்டுள்ளது. 'www.evilbible.com' என்னும் இணையதளத்தில், “தோராவில் பாலினப் பாகுபாடு” என்ற தலைப்பில் பெயர் வெளியிடாத ஒருவரால், தோராவுக்கு எதிராகச் சில தவறான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. இத்தகைய தவறான கருத்துகளுக்குப் பதிலளித்துத் தெளிவுபடுத்துவதற்கான ஒரு தாழ்மையான முயற்சியே இந்தக் கட்டுரை. தடித்த எழுத்துக்களில் உள்ள வாசகங்கள் அந்த இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகள்; அதைத் தொடர்ந்து அதற்கான மறுப்புரைகள் சாதாரண எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

பரிசுத்த வேதாகமம் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகம். இது 40 வெவ்வேறு ஆசிரியர்களால், 1500 ஆண்டுகளில், மூன்று கண்டங்களிலிருந்து எழுதப்பட்டது. இவற்றில் 'தோரா' என்பது வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. தமிழில் இது 'ஐந்தாகமம்' என்று அழைக்கப்படுகிறது. தோராவைப் படிக்கும்போது நாம் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால், அது உண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தெரிவிக்கும் துல்லியமான வரலாற்றுக் குறிப்பு என்பதாகும். வேதாகமத்தின் வரலாற்றுப்பூர்வமான நம்பகத்தன்மைக்கும், அதனுடைய ஆதாரப்பூர்வமான உறுதிக்கும் கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவமல்லாத தரப்புகளிலிருந்து பல சான்றுகள் உள்ளன. மெய்யாகவே கூறப்போனால், பிளேட்டோ (Plato) போன்ற வரலாற்று அறிஞர்கள் மற்றும் இலியட் (Iliad) போன்ற இலக்கியங்களுக்கு இருப்பதைக் காட்டிலும், பரிசுத்த வேதாகமத்தின் புத்தகங்களுக்குக் கணிசமான அளவு வரலாற்று ஆவணங்களும், அதன் கையெழுத்துப் பிரதிகளும் சான்றுகளாக உள்ளன. வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அதில் வருகிற கதாபாத்திரங்களின் குணநலன்கள், அவர்களின் பாவங்கள், அவர்களின் தோல்விகள், அவர்களின் வெற்றிகள், அவர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்கள் ஆகியவற்றைப் பற்றிய எல்லா உண்மைகளையும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

அவர்கள் செய்த எல்லாவற்றையும் தேவன் அங்கீகரிக்கிறார் என்றோ, அவர்களின் தீய செயல்களை மன்னிக்கிறார் என்றோ இது எந்த வகையிலும் பொருள்படாது. வேதாகமக் கதாபாத்திரங்களை உயர்த்திக் காட்ட வேண்டும், அவர்களைக் கதாநாயகர்களாகச் சித்தரிக்க வேண்டும் என்று வேதாகம ஆசிரியர்கள் நினைத்திருந்தால், அக்கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் இருண்ட அத்தியாயங்களைப் பதிவு செய்வதிலிருந்து அவர்கள் விலகியிருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால் அவர்களின் தவறுகள் யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். ஆனால், பிற மத நூல்களிலும் உலக வரலாற்றிலும் கூட இல்லாத வகையில், வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் அதன் உண்மைத்தன்மைக்கும் மிகத் துல்லியமாகச் சான்றளிக்கும் விதமாக, அதில் வருகிற ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை முழுவதும் எவ்விதப் பாரபட்சமுமின்றியும், விருப்பு வெறுப்பின்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே குறிப்பிடத்தக்கதாகும்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 13, 2026
பிரசங்கித்தல் என்பது தேவன் நமக்கு அளித்துள்ள ஒரு புனிதமான பொறுப்பாகும். தேவனுடைய வார்த்தையைப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
கலாத்தியர் 2:11-14 வரையிலான வேதப்பகுதியை மையமாக வைத்து, "பெரிய ஊழியர்கள் செய்யும் பெரிய தவறுகள்"...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
இந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள முப்பத்திமூன்று தெய்வங்களில் ஒருவரான...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
எங்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் "சிந்தியுங்கள்" என்று...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
லூக்கா சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில், நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான மூன்று உவமைகளைக் குறித்து...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.