images/new_theme/Promotion banner-4-2-min.jpg

லேவியராகமம் 19:20: இந்த வசனம், ஒரு பெண் அடிமையாயிருந்து,  ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும்போது அவள் வேறொருவனுடன் உடலுறவு கொண்டால், அவள் “கசையினால்” அடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. கசையடி என்பது மிகவும் கடுமையான தண்டனை அல்லவா? இத்தகைய நிகழ்வுக்குக் காரணமன அந்தப் பெண் அடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் அவளுடன் இருந்த அந்த ஆணைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே இது என்ன மாதிரியான சமத்துவம்?

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ளவும், குற்றச்சாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இந்தப் பகுதி முழுவதையும் வாசிப்போம்:

லேவியராகமம் 19:20-22 “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.  அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.”

இந்த 20 -ஆம் வசனம் மூலமொழிக்கு ஏற்றாற்போல் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையில் இவ்வார்த்தைக்கு அடிக்கப்படுதல் என்பது பொருள் கிடையாது. இந்த பெயர்ச்சொல் முழு பழைய ஏற்பாட்டிலும் ஒருயொரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெயர்ச்சொல்லிலிருந்தே “பகார்” என்ற வினைச்சொல் தோன்றியது. அதாவது “விசாரணை செய், தீர விசாரி, தீவிரமாய் தேடு” என்பதே இதன் பொருள். எனவே, அடிக்கப்படுதல் என்பதற்குப் பதிலாக, அவளுடைய “விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று வர வேண்டும். இவ்வசனத்தில் வருகிற “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க,” என்ற வாசகத்தில் வருகிற, “மீட்கப்படாமலும்” என்னும் தமிழ் வார்த்தைக்கான எபிரெயச் சொல், “படா” என்பதாகும். இதற்கு மீட்பு என்ற பொருள் இருந்தாலும் பெரும்பாலும், “காப்பாற்றப்படுதல், விடுவிக்கப்படுதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்பதற்குப் பதில், “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் காப்பாற்றப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்று வர வேண்டும். அதாவது, அந்த அடிமைப் பெண், தவறான முறையில் உடலுறவு கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் போது, ஒருவராலும் அவள் காப்பாற்றப்படாமல் விட்டுவிடப்பட்டால் அவள் விசாரிக்கப்பட வேண்டும்.   எனவே லேவியராகமம் 19:20 க்கான மாற்று எளிய மொழிபெயர்ப்பு, இவ்வறாக இருக்க வேண்டும். “ஓர் அடிமையாகிய பெண்ணுடன் ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அப்பெண்ணுடன் தவறாக நடந்துகொண்ட நபரால் நிந்திக்கப்பட்டும், அவளுக்கு எந்த உதவியும் செய்யாமலும், அவளுக்குக் கிடைக்க வேண்டிய சுதந்தரம் வழங்கப்படாமலும் இருந்தால், அவள் விசாரிக்கப்பட வேண்டும்; அவள் அடிமை ஸ்தானத்திலிருந்து விடுதலை பெறாதவளாகையால் அவன் கொல்லப்படமாட்டான்.”

ஆகவே இங்கு வழங்கப்பட்ட அறிவுரையில் அந்தப் பெண்ணுடன் நேரடியாகப் பொருந்தக்கூடிய எந்த வித அறிவுரையும் இல்லை. அவளே இங்கு பாதிக்கப்பட்டவள். இந்த வசனத்தின் தொடக்கத்தில் ஒரு ஆண் அடிமைப் பெண்ணைக் கற்பழித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு, அவள் விடுதலையாகாதவள் ஆகையால் அவள் இறக்க மாட்டான் என்பதே முடிவு. அவள் விடுதலை பெற்ற ஒரு சுதந்திரப் பெண்ணாக இருந்திருந்தால், அவன் இறக்க வேண்டியிருக்கும்!

இந்த வழக்கில், அவளைக் கற்பழித்தவன் தன்னுடைய குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, அதற்கான குற்றநிவாரண பலியைச் செலுத்த வேண்டும் (வசனம் 21). ஆகவே அவளைக் கற்பழித்த ஆணுக்குத் தண்டனை இல்லை என்று ஆகிவிடாது. அவனும் தன் குற்றத்தைச் சுமக்க வேண்டும், அதற்காக காணிக்கை செலுத்த வேண்டும். அவள் விட்டு விடப்படுவதுப் போல் இவன் விடுவிக்கப்படுவதில்லை.

இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உள்ளது. அது, என்னவெனில், இந்தப் பிரச்சினையில், அடிமைப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆணிடம் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும் என்று கட்டளை உள்ளது. அந்த அடிமைப் பெண் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஏனெனில் இவள் ஒரு அடிமையாக இருப்பதால், ஒரு சுதந்திரமான மனிதனை எதிர்ப்பதில் உள்ள தன்னுடைய இயலாமையை அவள் உணர்ந்திருக்கலாம். எனவே பாவத்திற்கு பரிகாரம் செய்யும் பொறுப்பை பெண்ணிடம் கேட்காமல் ஆணின்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இங்கே ஓர் அடிமைப் பெண்ணிடம் தேவன் கொண்டிருக்கிற கரிசனையுள்ள இதயத்தைப் பாருங்கள். அந்தக் காலத்தில் நிலவிய அடிமைத்தனத்தில் இப்படியான ஒன்று நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மார்ச் 04, 2026
சுவிசேஷமே தேவன் தாம் தெரிந்துகொண்டவர்களை அழைப்பதற்குப் பயன்படுத்தும் கருவி!" என்பதே அதற்கான...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரம் மனந்திரும்பாத ஒவ்வொரு பாவியின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கிறது;...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
"மாயையானதைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்" "என் வாயின்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
நரகத்தை மனிதர்களாகிய நாம் யாரும் பார்த்ததில்லை என்றாலும், ஏறக்குறைய எல்லா மதத்தின் புனித நூல்களும் நரகத்தைப் பற்றிப்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
தமிழ் கிறிஸ்தவ திருச்சபைகளான ரோமன் கத்தோலிக்கம், லூத்தரன், மெதடிஸ்டு, சி.எஸ்.ஐ (CSI) மற்றும்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 24, 2026
வேதாகம வரலாற்றில் காணிக்கை என்பது ஆராதனையின் ஒரு முக்கிய அங்கமாகும். பழைய ஏற்பாட்டில் இது ஒரு...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.