images/new_theme/Promotion banner-4-2-min.jpg

       லேவியராகமம் 21:9: இந்த வசனம், ஆசாரியர்களின் மகள் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்டால் எரித்து கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் ஒழுக்கக் கேடாய் நடக்கிற ஆசாரியர்களின் மகன்களைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லையே? இது குறித்து தோராவில் எங்கும் பதிலளிக்கப் படவில்லை. இங்கே ஆண்களுக்கு அவர்கள் விரும்பியபடி செய்ய அதிகாரம் உள்ளது, ஆனால் ஒரு பெண் தவறு செய்துவிட்டால், அவள் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இது பாரபட்சம் அல்லவா?

லேவியராகமம் 21 மற்றும் 22 அதிகாரங்கள், ஆசாரியனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் இருக்க வேண்டிய பரிசுத்த ஸ்தானத்திற்கான பரிந்துரைகளாகும். பரிசுத்த வேதாகமத்தின் தேவன் தம்முடைய ஆசாரியர்களிடத்திலும் குறிப்பாக யூத மக்களிடமும் எதிர்பார்க்கிற பரிசுத்த தரத்திற்கான தரநிலையாகும். இது தேவன் எதிர்பார்க்கிற பரிசுத்தத்திற்கான முக்கியத்தவத்தின் எதிர்பார்ப்பாகும்.

ஆரோனின் குமாரருக்குரிய பரிசுத்தராக இருக்க வேண்டும் என்ற பரிசுத்த நியமத்திற்கான கட்டளையை லேவியராகமம் 21 -ஆம் அதிகாரம் விவரிக்கிறது.. 1 முதல் 8 வசனங்கள் வரை ஆசாரியர்களின் மகன்கள் எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்கான அம்சங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 9 -ஆம் வசனம், ஆசாரியனின் மகள்கள் இருக்க வேண்டிய முறை பற்றி விவரிக்கிறது.

ஆசாரியனின் மகள் விபச்சாரம் செய்தால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும், அதுவும் அவள் தீயினால் எரிக்கப்படுகிற மரணம் என்பது உண்மைதான். இது பாவங்களுக்கான தண்டனையிலேயே மிகவும் கடுமையான வடிவமாகும். தண்டனை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுப்பதுதான். அதன் கடுமைக்கு பயந்து அவர்கள் அதைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என்பதே இதன் நோக்கம். மேலும் இங்கு ஆசாரியனின் மகன்களைப் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்று கூறுவது வேதாகமத்தின் தேவனைப் பற்றிய அறிவு இல்லாதது ஆகும். எங்கெல்லாம் பாலியல் மீறுதல்களைப் பற்றி வேதம் விவாதிக்கிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் தேவன் ஆண் பெண் இருபாலருக்குமே தண்டனையை அறிவித்திருக்கிறார். எந்த ஒரு சாதாரண இஸ்ரவேலனுக்கும் இச்சட்டங்கள் பொருந்துமெனில், பலிகளுடன் தேவனிடம் நெருங்கி வரும் ஆசாரியர்களாக ஆரோனின் மகன்களுக்கு இது எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும். தேவனுக்கு அருகாமையில் இருப்பவர்களை அவர் தண்டிக்க மாட்டார் என்று சிந்திப்பது முட்டாள்தனமானது. இந்தக் குறிப்பிட்ட பகுதியில் ஆண்களின் தண்டனையைப் பற்றிக் குறிப்பிடாததால், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று அர்த்தமல்ல.

நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில், இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, எந்தவொரு ஆசாரியனின் மகளும் எரிக்கப்பட்டதாக வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கீழப்படியாத ஆசாரியனின் மகன்களுக்கு என்ன நேரிட்டது என்பதற்கான இரண்டு பதிவுகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளன. லேவியராகம் 10 -ஆம் அதிகாரத்தில், ஆரோனின் மூத்த மகன்களான நாதாபும், அபியுவும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்ததற்காக தேவனால் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்.  பிரதான ஆசாரியனாகிய ஏலியின் மகன்களான ஓப்னியும், பினெகாசம் (1 சாமுவேல் 4) தங்களுடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காக போரில் கொல்லப்பட்டதையும் தேவனின் தண்டனையாகவே காண்கிறோம்.

பாவம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக மிகவும் தீவிரமான ஒரு காரியமாயிருக்கிறது. தேவன் பரிசுத்தரும், நீதியுள்ளவருமாயிருக்கிறார். பாலினம், தேசியம், சமூக அந்தஸ்து மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பாவம் செய்தால் தேவன் யாரையும் தண்டிக்கிறார். ஆணோ பெண்ணோ யார் பாவம் செய்தால், எந்தப் பாவத்தைச் செய்தாலும் தேவன் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்கவே மாட்டார். அவர்களை நிச்சயமாகவே தண்டிப்பார். இந்தச் சத்தியம் வேதாகமம் முழுவதிலும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

அடுத்த அத்தியாயத்தில் (லேவியராகமம் 22) சொல்லப்பட்டு உள்ளதையும் நாம் கூடுதலாகக் கவனித்துப் பார்ப்போம். பலி செலுத்தப்பட்ட உணவுகளை ஆசாரியனின் பிள்ளைகள் என்ற முறையில் அவருடைய மகன்களும் மகள்களும் உண்பதற்கு தேவன் அனுமதித்திருக்கிறார். எனவே தேவன் பெண் பிள்ளைகளுடைய காரியத்தில் எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லை. நாம் தேடினாலும் அவ்வாறு காட்டியதாக நாம் பர்க்கமுடியாது.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
பிப்ரவரி 10, 2026
இது ஜெபிக்கும் முறையை நமக்கு போதிப்பது மட்டுமல்லாமல், தேவனுக்குப் பிரியமான ஜெபத்திற்கு அடிப்படையான சில முக்கியக் கொள்கைகளையும்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 10, 2026
ஆனால், விசுவாசிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய ஊழியங்களில் மிக முக்கியமான ஒன்று -...

Read More ...

Intro Image
பிப்ரவரி 09, 2026
இரட்சிப்பிலே மனிதனுடைய செயல்பாட்டின் அவசியத்தை ‘ஹைப்பர் கால்வினிசம்’ (Hyper-Calvinism) ஒருபுறம்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 09, 2026
சோதோமின் பாவம் குறித்து வேதம் சொல்வது, சோதோமின் பாவத்தை ஆதரிக்கும் வசனங்களாகச் சித்தரிக்கப்பட்ட...

Read More ...

Intro Image
பிப்ரவரி 09, 2026
இந்தக் கட்டுரையில், ஸ்டீபன் நாப் எழுதிய 'கிறிஸ்தவமும் வேதத்தில் உள்ள அதன் தாக்கமும்' (Christianity and the Vedic...

Read More ...

Intro Image
பிப்ரவரி 09, 2026
“நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.