images/new_theme/Promotion banner-4-2-min.jpg

      (எண்ணாகமம் 30:3-16): இந்தப் பகுதியில் ஒரு பெண் தன் கணவன் அனுமதிக்காத வரை ஒரு பொருத்தனையைச் செய்ய முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது பாலினப் பாகுபாடு அல்லவா?

நாம் மீண்டும் ஒரு முக்கியமான பகுதியைச் சிந்திக்கப் போகிறோம். மேலும் இதுவே பெரும்பாலன மக்களால் அடிக்கடி தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிற பகுதியாகும். அந்தப் பெண்ணியவாதி குறிப்பிடுவது போல, இந்த பகுதி கர்த்தருக்குப் பொருத்தனை செய்வது பற்றியதுதான். நாம் ஏற்கனவே சிந்தித்தபடி பொருத்தனை செய்வது ஒரு தீவிரமான விஷயமாகும். அதை ஒருவரும் எளிதாகக் கருத முடியாது. எவனொருவன் பொருத்தனை செய்தாலும் அவன் எந்தக் காரியமாக இருந்தாலும் அதை அவன் நிறைவேற்றியே ஆக வேண்டும். ஒருவேளை ஒரு பெண் தன் தந்தையின் அனுமதியில்லாமலோ அல்லது கணவனின் அனுமதியில்லாமலோ ஒரு பொருத்தனை செய்திருந்தால், அவள் அதை நிறைவேற்றாமல் போனால், அவள் அதைச் செலுத்தியே தீர வேண்டும் என்று கட்டாயத்திலிருந்து விடுபடுகிறாள். தேவன் அவளை மன்னிப்பார், அது அவளுக்கு எதிரான பாவமாக கருதப்படமாட்டாது. மேலும் கணவனோ அல்லது தந்தையோ அதற்கு உடன்படவில்லை என்றாலும் அவள் அந்தப் பொருத்தனையிலிருந்து விடுபடுகிறாள். என்னைப் பொருத்தவரை இது பெண்களைப் பற்றிய காரியத்தில் பதற்றத்தைக் காட்டிலும் பெரிய ஆறுதலையே தருகிறது. ஒரு குடும்பத்தில் தந்தையோ (திருமணமாகாத பெண்ணின் விஷயத்தில்) அல்லது கணவனோ தான் (திருமணமான பெண்ணின் விஷயத்தில்) தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதே தெய்வீக வடிவமைப்பில் குடும்பத்தைப் பற்றி கருத்தாகும்.

எனவே ஒரு பெண் பொருத்தனை செய்ய முடியாது என்ற பெண்ணியவாதியின் அனுமானம் மிகவும் தவறானது. ஆனால் இந்தப் பொருத்தனைகளானது குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கவும் அதைப் பாதுகாக்கவும் தேவன் கட்டளையிட்ட நபர்களாகிய அவரது தந்தை அல்லது கணவர் ஆகியோருடன் தொடர்புடையது ஏற்புடையதா என்பதே கேள்வியாகும். ஒரு பெண் தனது திருமணத்திற்கு முன் இளம் பெண்ணாக தனது தந்தையின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறபடியால் அவள் வீட்டில் உள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் மற்றும் அவளுடைய தந்தைக்கு கீழ்ப்படியவும் வேண்டும் (எப்படி நம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கற்பிக்கிறோமோ அதுபோலத்தான் இதுவும்). ஆதியாகமம் 1-2 ல் நாம் முன்பு விவாதித்தபடி, படைப்பில் தேவன் மனிதனை வீட்டின் தலைவராக உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தின் தலைவரின் வழி நடத்துதலுக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய பொறுப்பு மனைவிக்கு உள்ளது.

தேவனை மையமாகக் கொண்ட ஒரு அன்பான இல்லத்தில், தந்தையாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, பெண்கள் செய்த பொருத்தனையைப் புரிந்துகொண்டு, அந்தப் பெண்ணின் பொருத்தனையை நிறைவேற்றவே அனுமதிப்பார்கள் என நான் நம்புகிறேன். ஒரு அன்பான குடும்பத்தில் ஒரு பெண் சுயாதீனமாக தேவனுக்குப் பொருத்தனை செய்கிற சுதந்திரம் உள்ள சிறந்த சூழ்நிலையே நிலவும் என்பதிலும் சந்தேகமில்லை. எனினும் இந்த பகுதி சுட்டிக்காட்டுகிற படி பெண்கள் பொருத்தனை செய்வதை ஏதோவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளாத தந்தைகளும் கணவர்களும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தேவன் பொருத்தனை செய்த பெண்களைக் காப்பாற்றவே விரும்புகிறார். அவர்களுடைய பொருத்தனைமீது கவனம் வைக்காமல், அவர்களுக்கு மன்னிப்பையும் பொருத்தனையை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து விடுதலையையும் தருகிறார்.

சில சமயங்களில் பெண்களின் கடினமான சூழ்நிலைகளைத் தேவன் புரிந்துகொள்கிறார். மேலும் அவருடைய இருதயம் பெண்களின் பக்கமாக தாங்கலாக இருக்கிறது. அவரது இரக்கமும் கருணையும் பெண்களின் கரிசணையைக் குறித்தே உள்ளது, இது இந்த தேவனைப் பின்பற்றுவதற்கு எனக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறது. எனவே, ஒரு பெண் பொருத்தனையை நிறைவேற்றாவிட்டால் அவள் அதற்குப் பொறுப்பாளியாவதில்லை, மாறாக அவள் பொருத்னையை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுகிறது என்று எப்படிக் கூறமுடியும்?

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மார்ச் 04, 2026
சுவிசேஷமே தேவன் தாம் தெரிந்துகொண்டவர்களை அழைப்பதற்குப் பயன்படுத்தும் கருவி!" என்பதே அதற்கான...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரம் மனந்திரும்பாத ஒவ்வொரு பாவியின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கிறது;...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
"மாயையானதைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்" "என் வாயின்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
நரகத்தை மனிதர்களாகிய நாம் யாரும் பார்த்ததில்லை என்றாலும், ஏறக்குறைய எல்லா மதத்தின் புனித நூல்களும் நரகத்தைப் பற்றிப்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 25, 2026
தமிழ் கிறிஸ்தவ திருச்சபைகளான ரோமன் கத்தோலிக்கம், லூத்தரன், மெதடிஸ்டு, சி.எஸ்.ஐ (CSI) மற்றும்...

Read More ...

Intro Image
பிப்ரவரி 24, 2026
வேதாகம வரலாற்றில் காணிக்கை என்பது ஆராதனையின் ஒரு முக்கிய அங்கமாகும். பழைய ஏற்பாட்டில் இது ஒரு...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.