images/new_theme/Promotion banner-4-2-min.jpg

(எண்ணாகமம் 30:3-16): இந்தப் பகுதியில், "ஒரு பெண் தன் கணவன் அனுமதிக்காதவரை ஒரு பொருத்தனையைச் செய்ய முடியாது" என்று சொல்லப்பட்டிருப்பது பாலினப் பாகுபாடு அல்லவா?

நாம் மீண்டும் ஒரு முக்கியமான பகுதியைச் சிந்திக்கப் போகிறோம். இதுவே பெரும்பாலான மக்களால் அடிக்கடி தவறாக விளக்கப்படுகிற பகுதியாகும். அந்தப் பெண்ணியவாதி குறிப்பிடுவது போல, இப்பகுதி கர்த்தருக்குப் பொருத்தனை செய்வது பற்றியதுதான். நாம் ஏற்கனவே சிந்தித்தபடி, பொருத்தனை செய்வது ஒரு தீவிரமான விஷயமாகும்; அதை ஒருவரும் எளிதாகக் கருதிவிட முடியாது. எவரொருவர் பொருத்தனை செய்தாலும், அது எந்தக் காரியமாக இருந்தாலும், அதை அவர்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும். ஒருவேளை ஒரு பெண் தன் தந்தையின் அனுமதியில்லாமலோ அல்லது கணவனின் அனுமதியில்லாமலோ ஒரு பொருத்தனை செய்திருந்து, அதை அவள் நிறைவேற்றாமல் போனால், அவள் அதைச் செலுத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து விடுபடுகிறாள். தேவன் அவளை மன்னிப்பார்; அது அவளுக்குப் பாவமாகக் கருதப்படமாட்டாது. மேலும், கணவனோ அல்லது தந்தையோ அதற்கு உடன்படவில்லை என்றாலும் அவள் அந்தப் பொருத்தனையிலிருந்து விடுபடுகிறாள். என்னைப் பொறுத்தவரை, இது பெண்களைப் பற்றிய காரியத்தில் பதற்றத்தைக் காட்டிலும் பெரிய ஆறுதலையே தருகிறது. ஒரு குடும்பத்தில், தந்தை (திருமணமாகாத பெண்ணின் விஷயத்தில்) அல்லது கணவன் (திருமணமான பெண்ணின் விஷயத்தில்) தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே குடும்பத்தைக் குறித்த தெய்வீக வடிவமைப்பாகும்.

எனவே, "ஒரு பெண் பொருத்தனை செய்ய முடியாது" என்ற பெண்ணியவாதியின் அனுமானம் மிகவும் தவறானது. ஆனால், இந்தப் பொருத்தனைகள் குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கவும், அதைப் பாதுகாக்கவும் தேவன் நியமித்த நபர்களாகிய தந்தை அல்லது கணவருடன் தொடர்புடையதாய் இருப்பது ஏற்புடையதா என்பதே இங்கு கேள்வியாகும். ஒரு இளம் பெண் தனது திருமணத்திற்கு முன் தன் தந்தையின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறபடியால், அவள் வீட்டில் உள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; அவளுடைய தந்தைக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் (நாம் நம் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கற்பிப்பது போலத்தான் இதுவும்). ஆதியாகமம் 1-2 அதிகாரங்களில் நாம் முன்பு சிந்தித்தபடி, படைப்பில் தேவன் மனிதனை (ஆணை) வீட்டின் தலைவராக உருவாக்கியிருக்கிறார். எனவே, குடும்பத் தலைவரின் வழிநடத்துதலுக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய பொறுப்பு மனைவிக்கு உள்ளது.

தேவனை மையமாகக் கொண்ட ஒரு அன்பான இல்லத்தில், தந்தையாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, அவர்கள் அப்பெண் செய்த பொருத்தனையைப் புரிந்துகொண்டு, அதை நிறைவேற்றவே அனுமதிப்பார்கள் என நான் நம்புகிறேன். ஒரு அன்பான குடும்பத்தில், ஒரு பெண் சுயாதீனமாக தேவனுக்குப் பொருத்தனை செய்கிற சுதந்திரம் உள்ள சிறந்த சூழ்நிலையே நிலவும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனினும், இப்பகுதி சுட்டிக்காட்டுகிறபடி, பெண்கள் பொருத்தனை செய்வதை ஏதோவொரு காரணத்திற்காக ஏற்றுக்கொள்ளாத தந்தைகளும் கணவர்களும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தேவன் பொருத்தனை செய்த அந்தப் பெண்களைக் காப்பாற்றவே விரும்புகிறார். அவர்களுடைய பொருத்தனையின்மீது கவனம் வைக்காமல், அவர்களுக்கு மன்னிப்பையும், பொருத்தனையை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து விடுதலையையும் தருகிறார்.

சில சமயங்களில், பெண்களின் கடினமான சூழ்நிலைகளைத் தேவன் புரிந்துகொள்கிறார். மேலும், அவருடைய இருதயம் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அவரது இரக்கமும் கருணையும் பெண்கள்மீது கரிசனை கொண்டுள்ளது. இது, இந்த தேவனைப் பின்பற்றுவதற்கு எனக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறது. எனவே, ஒரு பெண் பொருத்தனையை நிறைவேற்றாவிட்டால் அவள் அதற்குப் பொறுப்பாளியாவதில்லை; மாறாக, அவள் பொருத்தனையை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படுகிறாள். அப்படியிருக்க, பெண்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது என்று எப்படிக் கூறமுடியும்?

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஏப்ரல் 13, 2026
பிரசங்கித்தல் என்பது தேவன் நமக்கு அளித்துள்ள ஒரு புனிதமான பொறுப்பாகும். தேவனுடைய வார்த்தையைப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
கலாத்தியர் 2:11-14 வரையிலான வேதப்பகுதியை மையமாக வைத்து, "பெரிய ஊழியர்கள் செய்யும் பெரிய தவறுகள்"...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
இந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள முப்பத்திமூன்று தெய்வங்களில் ஒருவரான...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
எங்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நீங்கள் "சிந்தியுங்கள்" என்று...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
லூக்கா சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில், நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான மூன்று உவமைகளைக் குறித்து...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 06, 2026
உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.