images/new_theme/Promotion banner-4-2-min.jpg

      (எண்ணாகம் 31:14-18): இந்த வேதபகுதியில், மீதியானிய இனத்தைச் சேர்ந்த ஆண்களையும், பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கொல்லும்படி மோசே தனது ஆட்களிடம் உத்தரவிடுகிறார். ஆனால் திருமணமாகாத கன்னிப் பெண்களை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இது அப்பெண்களைக் கற்பழிப்பதற்குத்தானே உயிரோடு காப்பாற்றச் சொல்லுகிறார். இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு தானே?

மீதியானியர் ஒரு நாடோடிக் கூட்டத்தார் ஆவர். இவர்கள் மோவாப் மக்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். பாலியல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையின் மூலமாக இஸ்ரவேலரைக் கவர்ந்து, அவர்களை உருவ வழிபாட்டிற்குள் தள்ளியவர்கள் இவர்கள். எனவே இவர்களைப் பழிவாங்கும் வகையில் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (எண். 25). இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் பலிகளில் கலந்துகொண்டார்கள், அவர்கள் மத்தியில் அவர்களுடைய பலியின் உணவைச் சாப்பிட்டு, பாகால் உட்பட மோவாபியர்களின் பல தெய்வங்களை வணங்கினர் (எண் 25:2,3). இதனிமித்தமாக இஸ்ரவேல் மக்களில் 24,000 பேர்களை ஒரு கொள்ளை நோய்யை அனுப்பிக் கொலை செய்தார். இந்த கொள்ளை நோயானது இஸ்ரலேர்கள் மீதியானியர்களுடன் உடலுறவு கொண்டு தங்களைத் தீட்டுப்படுத்தியதன் விளைவாக நேரிட்டது. (எண் 25:9). ஆகவே, மிதியானியர்களின் தவறான சூழ்ழ்ச்சியின் காரணமாகவும் அவர்களுடைய பாவத்தின் காரணமாகவும் தேவன் அவர்களை நியாயமான முறையில் தண்டித்தார். இஸ்ரவேலர்களுக்கு மேலும் இவர்களுக்குப் பிரச்சினை வராதபடிக்கு ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அவர்களை அழித்து நியாயம் தீர்க்கும்படி கட்டளையிட்டார்.

எண்ணாகமம் 31:14-18. இந்த வேதபகுதி திருமணமாகாத கன்னிப் பெண்கள் தவிர அனைத்துப் பெண்களும் இஸ்ரவேலர்களை மயக்கிப் பாவம் செய்யத் தூண்டியதன் தண்டனையாக அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறுகிறது. கன்னிப் பெண்களை விட்டுவிட வேண்டும் என்றும் அது கூறுகிறது, ஒருவேளை இந்த இளம் கன்னிப் பெண்கள் பாகால் வழிபாட்டுடன் தொடர்புடைய ஒழுக்கக்கேடான செயல்களில் வெளிப்படையாக ஈடுபடாமல் இருந்திருக்கலாம். எனவேதான் அவர்கள் திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களுடன் அவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த இளம் பெண்கள் இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட வேண்டும் என்றுதான் வேத வசனம் கூறுகிறது. இவர்கள் இஸ்ரவேலர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே எந்தபொரு ஆதாரமும் இல்லாமல் இஸ்ரவேலின் ஆண்கள் அவர்களை கற்பழித்தார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள் என்று கூறுவது தவறான கருத்தாகும். அவர்கள் போரின்போது கைதியாக்கப்பட்டதால் போர் நிபந்தனைகளின்படி அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளாக மாறியிருப்பார்கள் என்று கூறமுடியும். மேலும் அவர்கள் அடிமைகளாகிவிட்டால், இஸ்ரவேலில் வழங்கி வருகிற அடிமை தொடர்பான அனைத்துச் சட்டங்களும் அவர்களுக்குப் பொருந்தும். எனவே, அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று எந்த எழுதப்பட்ட ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் கருதுவது தவறானது. இன்றைய நாட்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டால் என்ன நிகழுகிறதோ அதைக் குறித்த அச்சத்தால் எழுகிற கருத்தாகும் இது.

மேலும், எண்ணாகமம் 25:7,8 -இல் ஒரு சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு இஸ்ரவேல் ஆணும் ஒரு மீதியானிய பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டதால், இருவரும் பினெகாஸால் கொல்லப்பட்டதைக் காண்கிறோம். இஸ்ரவேலர்களுக்கு தேவன் வழங்கிய சட்டம் கற்பழிப்பைக் கண்டனம் செய்கிறது மட்டுமின்றி, சில சந்தர்ப்பங்களில் அது மரண தண்டனையும் வழங்குகிறது (உபாகமம் 22:25-27). மேலும், கன்னிப் பெண்களைத் தப்பவிடுவதற்கான கட்டளையைத் தொடர்ந்து, வீரர்கள் உடனடியாகத் தங்களையும், தாங்கள் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களையும் சுத்திகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (எண்ணாகமம் 31:19). கற்பழிப்போ அல்லது ஒருமித்த மனதுடன் உடலுறவு கொள்வதோ லேவியராகமம் 15:16-18 வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கட்டளையை மீறும் செயலாகும். எனவே உடலுறவு குறித்த காரியத்தில் இவ்வளவு கெடுபிடிகள் சட்டங்களால் கொடுக்கப்பட்டுள்ளதால், அமலேக்கிய இனத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்களை பலாத்காரம் இஸ்ரவேலர்கள் பலாத்காரம் செய்தார்கள் என்று கூறுவது, வேத வாக்கியங்களின் வெளிச்சத்தில் எந்த வகையாலும் பொருளற்ற வாதம் ஆகும்.

கட்டுரைகள்
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மே 07, 2025
வேதபுத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதன்...

Read More ...

Intro Image
மே 07, 2025
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்....

Read More ...

Intro Image
ஏப்ரல் 23, 2025
நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
ஆர்மீனியர்கள் என்ற பிரிவினர் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து வேதத்திலுள்ள இயேசுகிறிஸ்துவா? என்று...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது. பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து,...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.