images/new_theme/Promotion banner-4-2-min.jpg

கிறிஸ்துவின் ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட ஒரு ஊழியனின் ஊழியத்தில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. அவர் மீட்கப்படாத மக்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதும், தேவனுடைய மக்களுக்களை ஞானத்தோடும், புரிந்துக்கொள்ளுதலோடும் அவர்களை வளர்ப்பதும் (எரேமியா 3:15), இடறல்களை ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுவதும் (ஏசாயா 57:14) மட்டுமல்லாமல், அவர் சென்று, “சத்தமிட்டுக் கூப்பிடு. அடக்கிக்கொள்ளாதே. எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.” (ஏசாயா 58:1, 1 தீமோத்தேயு 4:2) என்ற கட்டளைக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, மற்றொரு முக்கியமான கடமையாக, “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;" (ஏசாயா 40:1) என்ற தேவனுடைய வார்த்தைக்கும் அவர் கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது.

“என் மக்கள்!" என்பது எவ்வளவு ஒரு சிறந்த அழைப்பு! “உன் தேவன்!" என்ன ஒரு உறுதியளிக்கும் இணைப்பு “என் மக்களுக்கு ஆறுதல்!" என்ன ஒரு பாக்கியமான பொறுப்பு! “ஆற்றுங்கள், தேற்றுங்கள்" என்ற கட்டளையை இரண்டு முறை வலியுறுத்துவதற்கு மூன்று காரணங்களாகக் குறிப்பிட்டு சொல்லலாம். முதலாவது, சில சமயங்களில் விசுவாசிகளின் ஆத்துமாக்கள் ஆறுதலடைய மறுக்கின்றன (சங்கீதம் 77:2). எனவே இதுபோன்ற நேரங்களில் தான் ஆத்துமாவுக்கு அதிக ஆறுதல் கொடுப்பது அவசியம். இரண்டாவதாக, விசுவாசிகளை ஊக்குவிக்கும் காரியத்தை அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று போதகருக்குத் தெரிவிப்பது அவசியம் என்கிற பொறுப்பை அவர் மனதில் ஆழமாகப் பிரதிபலிக்க. மூன்றாவதாக, தேவன் தாமே தம்முடைய மக்களின் மகிழ்ச்சியைக் குறித்து எவ்வளவாய் வாஞ்சிக்கிறார் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் (பிலிப்பியர் 4:4).

தேவனுக்கு அவருடைய மக்கள் இருக்கிறார்கள், அவருடைய விசேஷித்த தயவுக்கு உரிய மக்கள்: தம்முடன் நெருங்கிய உறவில் இருக்கும்படி இந்தக் கூட்டத்தாரை அழைத்திருப்பதன் மூலம் அவாகளை “என்னுடைய ஜனங்கள்” என்று அநேக நேரங்களில் அழைக்கிறார். அவர்கள் பலமுறை அறுதல் அடையமால் உள்ளனர். அவர்களின் பாவ சுபாவம், சாத்தானால் உண்டாகும் சோதனைகள், உலகத்தார் மூலம் உண்டாகும் துன்பங்கள் மேலும், கிறிஸ்துவின் விஷயங்களில் உலகின் மோசமான அணுகுமுறை, இப்படியாக தொடர்ச்சியான காரணங்களினால் அவர்கள் அறுதல் அடையாமல் உள்ளனர். “சகலவித ஆறுதல்களின்” தேவன் அவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் (2 கொரிந்தியர் 1:3). மேலும் அவருடைய ஊழியக்காரர்கள் இருதயம் உடைந்தவர்களுடைய காயங்களைக் கட்டி அதில் கீலேயாத்தின் பிசின் தைலம் இடவேண்டும் என்பது அவருடைய வெளிப்படையான சித்தமாய் இருக்கிறது. தேவனுடைய கட்டளைகள் மற்றும் அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் இந்த அவரைப்போல வேறொரு தேவன் உள்ளாரா என்கிற கேள்வியை எழுப்புவதின் வழியாகவே “தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்?” என்று நாம் சொல்வதற்கு முகாந்திரம் இருக்கிறது (மீகா 7:18).

இந்த சிறிய புத்தகத்தின் உள்ளடக்கங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக அவ்வப்போது நமது மாதாந்தரப் பத்திரிக்கைகளில் தோன்றிவை. அவைகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வெகு காலத்திற்கு முன்பே போதிக்கப்பட்டவை. இப்போது நாம் உபயோகம் செய்யாத சில கருத்துக்களை நாம் தவிர்த்திருக்கிறோம் (குறிப்பாக தீர்க்கதரிசனம் பற்றி காரியங்கள்). எனினும் தேவனுடைய அநேகம் துன்புற்ற மக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் மிகுந்த ஆறுதலைத் தந்திருப்பதால், அவைகளை அதிகம் மறுதிருத்தம் செய்யவில்லை. இது புத்தகத்தில் உள்ள வேத வசன விளக்கங்கள் வழியாக தேவன் துன்பப்பட்டவர்களுக்கு சமாதானம் தருவாராக. அனைத்து மகிமையும் தேவனுக்கே உரியது.

-ஆர்தர் W. பிங்க், 1952

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
டிசம்பர் 19, 2025
அன்பான நண்பரே, இன்று உங்கள் உள்ளத்தில் மன நிம்மதி இருக்கிறதா? "எப்படியாவது இந்த குடி பழக்கத்தை...

Read More ...

Intro Image
டிசம்பர் 19, 2025
  அன்பானவர்களே! இந்த உலகத்தில் ஜாதி மதம் இனம் மொழி நாடு என வேறுப்பாடு பார்க்காமல் உலகமெங்கும் ஒருமித்து இயேசு கிறிஸ்துவின்...

Read More ...

Intro Image
டிசம்பர் 11, 2025
தினந்தோறும் பிரச்சனையோடு இருக்கும் ஒரு மனிதனை கற்பனை செய்து பாருங்கள். பரிசுத்த வேதத்தில்...

Read More ...

Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.