முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

சாக்குப்போக்குகளுக்கு இடமில்லை

ஜெபிக்காத வாசகர்களுக்கு என் இறுதி வார்த்தைகள்:

இந்த ஆக்கத்தை வாசிக்கிற அனைவரும் ஜெபிக்கிற மக்களாக இருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. ஒருவேளை நீங்கள் ஜெபிக்காதவர்களாக இருந்தால், தேவனின் சார்பாக இன்று நான் உங்களுக்குச் சொல்லும் அறிவுரையைக் கவனமாகக் கேளுங்கள்.

ஜெபிக்காத வாசகர்களே! நான் மிகுந்த வேதனையுடன் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் இப்போது இருக்கிற நிலையிலேயே மரித்தால், உங்கள் ஆத்துமாவை இழந்துவிடுவீர்கள். நீங்கள் மரணத்திற்குப் பின்பு விழித்தெழும்போது, நித்தியத்திற்கும் பரிதாபமான நிலையில் இருப்பீர்கள். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரையும் நான் வன்மையாக எச்சரிக்கிறேன். நீங்கள் ஜெபிக்காமல் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு எந்தவொரு நல்ல காரணத்தையும் காட்டவே முடியாது.

'எப்படி ஜெபிப்பது என்று தெரியாது' எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், ஜெபம் என்பது கிறிஸ்தவத்தில் மிகவும் எளிமையான ஒரு செயல். ஜெபம் செய்வதற்கு நமக்கு புத்தக அறிவோ, பெரிய ஞானமோ அல்லது புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளவோ வேண்டியதில்லை. நம்முடைய இருதயத்தின் வாஞ்சையைத் தவிர வேறு எதுவும் அவசியமில்லை. ஒரு பலவீனமான குழந்தை தான் பசியோடு இருக்கும்போது அழும். வறுமையில் வாடும் பிச்சைக்காரன் கையேந்திப் பிச்சை கேட்பான். அதுபோல, மிகவும் கல்லாத மனிதன் கூட தேவனிடம் ஏதாவது சொல்ல விரும்பினால், நிச்சயம் அதைத் தன் முழு மனதோடு சொல்ல முடியும்.

'ஜெபிப்பதற்கு ஏற்ற இடமில்லை' என நீங்கள் சொல்லும் சாக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது. யார் தேடினாலும் தனிமையான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். நமது ஆண்டவர் மலைகளுக்குச் சென்று ஜெபம் செய்தார். பேதுரு வீட்டின் மேல்மாடியில் ஜெபம் செய்தார். ஈசாக்கு வயலிலே ஜெபம் செய்தார். நாத்தான்வேல் அத்திமரத்தின் அடியில் நின்று ஜெபம் செய்தார். யோனா மீனின் வயிற்றில் இருந்து ஜெபம் செய்தார். ஜெபிக்கிறவனுக்கு, எந்தவொரு மறைவான இடமும் ஒரு ஜெபக்கூடமாகவும், பெத்தேலாகவும், தேவனின் பிரசன்னம் இருக்கும் இடமாகவும் மாறும்.

'எனக்கு ஜெபிப்பதற்கு நேரமில்லை' எனச் சொல்வதும் பயனற்றது. நேரத்தை முறையாகச் செலவிடும்போது நமக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. காலம் மிகவும் குறுகியதுதான்; ஆனால் நமக்கு ஜெபிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும் அளவிற்கு அது குறுகியதல்ல. தானியேலின் கையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அனைத்து விவகாரங்களையும் கையாளும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் ஒரு நாளுக்கு மூன்று வேளை ஜெபம் செய்தார். தாவீது ஒரு பெரிய ஜனக்கூட்டத்தின் ராஜாவாக இருந்தபோதும் அவர் சொல்லுகிறார்: "அந்திசந்தி மத்தியான வேளையிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்" (சங் 55:17). உண்மையாகவே நீங்கள் நேரத்தைக் கண்டுபிடிக்க விரும்பினால், அது நிச்சயம் கிடைக்கும்.

'எனக்கு விசுவாசமும், புது இருதயமும் கிடைக்கும்வரை நான் எப்படி ஜெபிப்பது?' என்று நீங்கள் சொல்வதும் ஏற்கத்தக்க காரணம் அல்ல. இப்படி ஜெபிக்காமல் இருப்பது பாவத்தின்மேல் பாவத்தைச் சேர்ப்பது போலாகும். அது மனந்திரும்பாமல் நரகத்திற்குப் போவது போல மிகவும் கொடுமையானது. இதைக் காட்டிலும் மிகவும் மோசமானது, “எனக்கு இவையெல்லாம் தெரியும், ஆனால் தேவனின் இரக்கத்திற்காக நான் அழுது கெஞ்சமாட்டேன்” என்று சொல்வதாகும். வேதத்தில் ஒருசில வசனங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏசாயா சொல்லுகிறார்: "கர்த்தரைத் தேடத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்" (ஏசா 55:6). ஓசியா சொல்லுகிறார்: "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்" (ஓசி 14:1). பேதுரு மாயவித்தைக்காரனாகிய சீமோனிடம் சொல்லுகிறார்: "உன் துர்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனிடம் வேண்டிக்கொள்" (அப் 8:22). உங்களுக்கு விசுவாசமும் புது இருதயமும் வேண்டுமென்றால், அதற்காகத் தேவனிடம் சென்று அழுகையோடு வேண்டுதல் செய்யுங்கள். ஜெபிப்பதற்காகச் செய்யும் முயற்சியே பல நேரங்களில் மரித்த ஆத்துமாவை உயிரடையச் செய்கிறது.

ஜெபிக்காத வாசகர்களே, நீங்கள் தேவனிடம் எதையுமே கேட்கிறதில்லை. நீங்கள் நரகத்தோடும், மரணத்தோடும் உடன்படிக்கை செய்துகொண்டு விட்டீர்களா? அவியாத அக்கினியிலும், சாகாத புழுவின் மத்தியிலும் சமாதானத்தைக் கண்டுகொண்டீர்களா? உங்களின் எந்தப் பாவங்களும் மன்னிக்கப்படத் தேவையில்லையா? நித்திய அழிவைக் குறித்த எந்தப் பயமும் உங்களுக்குள் இல்லையா? ஏன் உங்களுக்குப் பரலோகத்தின் மீது பசிதாகம் இல்லை? தயவுசெய்து உங்களுடைய இந்த நிலையில் இருந்து இன்றே விழித்துக்கொள்ளுங்கள். இன்றே உங்களுடைய முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். இன்றே விழித்திருந்து தேவனை நோக்கி ஜெபியுங்கள். அநேகர், "கர்த்தாவே! கர்த்தாவே! எங்களுக்குத் திறவும்" என்று கதறி அழப்போகிற நாள் வரப்போகிறது. ஆனால் அந்தக் கதறுதல் காலதாமதமானதால் பலனளிக்காமல் போகப்போகிறது. அநேகர் அந்நாட்களில், "பாறைகளே எங்கள் மீது விழுங்கள், மலைகளே எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்" என்று கதறி அழுவார்கள். நான் மிகுந்த அன்புடன் இன்றே உங்களை எச்சரிக்கிறேன். இது உங்களுடைய ஆத்துமாவின் முடிவாக இருந்துவிட வேண்டாம். இரட்சிப்பு உங்களுக்கு மிக அருகில் இருக்கிறது. இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு, முடிவில் பரலோகத்தை இழந்துபோய்விடாதீர்கள்.

நீங்கள் இரட்சிப்பை விரும்புகிறீர்களா?

உண்மையாகவே இரட்சிக்கப்பட வேண்டும் என ஆசைக்கொண்டு, அதற்காக என்ன செய்ய வேண்டும், எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியாதவர்களுக்கு நான் அன்பாகச் சில ஆலோசனைகளைச் சொல்லுகிறேன். சில வாசகர்கள் இந்த மனநிலையில் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அப்படி யாராவது இருந்தால், அவருக்கு அன்பான அறிவுரை வழங்க விரும்புகிறேன்.

ஒரு பயணத்தை ஆரம்பிக்கும்போது, நிச்சயமாக அதில் ஒரு முதல்படி இருக்கும். அமைதியாக ஓரிடத்தில் இருப்பதிலிருந்து, முன்னோக்கிச் செல்வதில் நிச்சயமாக ஒரு மாற்றம் இருக்கிறது. இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானான் தேசம் சென்ற பயணம் மிகவும் நீண்ட, இடைவிடாத பயணமாக இருந்தது. அவர்கள் யோர்தானைக் கடப்பதற்கு நாற்பது வருடங்கள் ஆயிற்று. அந்தப் பயணத்தை ஆரம்பித்தவுடன் அவர்கள் ராமசேஸிலிருந்து சுக்கோத்திற்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதுபோலவே, ஆவியானவரின் கிரியையும் ஒரு மனிதன் எப்போது பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும் வெளிவந்து முதல்படி எடுத்து வைக்கிறானோ, அவன் இருதயத்திலிருந்து எப்போது ஜெபத்தை ஏறெடுக்கிறானோ அப்போதுதான் தொடங்க ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு கட்டிடமும் கட்டப்படுவதற்கு முன்பு, முதலில் அடிக்கல் நாட்டப்பட வேண்டும். பின்பு அதின்மேல் அஸ்திபாரம் போடப்பட வேண்டும். நோவாவின் பேழை கட்டிமுடிக்கப்பட நூற்று இருபது ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனாலும், நோவா அதை உருவாக்க வெட்டிய முதல் மரத்தின் மீது தனது கோடரியை வைத்த நாள் என்று ஒரு நாள் இருந்தது. சாலொமோன் கட்டின தேவாலயம் மிகவும் புகழ்பெற்றது; ஆனால் அந்த மோரியா மலையின் ஆழத்தில் அந்தப் பெரிய கல் நாட்டப்பட்ட நாள் ஒன்று இருந்தது. ஆவியானவரின் செயல்களை ஒரு மனிதனின் இருதயத்தில் எப்போது பார்க்க முடியும் என்றால், அவன் தனது இருதயத்தை ஜெபத்தின் மூலமாகத் தேவனிடம் ஊற்றும்போதுதான்.

என்ன செய்ய வேண்டும்?

உண்மையாக இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் நான் சொல்வதைச் செய்யுங்கள். இன்றே தனிமையான ஒரு இடத்திற்குச் சென்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் முழுமனதோடும், ஆர்வத்தோடும் உங்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டும் என ஜெபம் செய்யுங்கள்.

“நீர் பாவிகளை ஏற்றுக்கொள்ளுகிறீர் என்று நான் கேள்விப்பட்டதாலும், 'என்னிடம் வருபவர்களை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை' என்று நீரே சொல்லியிருக்கிறீர் என்பதாலும் நான் உம்மிடம் வருகிறேன்” என்று அவரிடம் சொல்லுங்கள். நான் மிகவும் கீழ்த்தரமான பாவி என்றும், உம்முடைய அழைப்பை ஏற்று விசுவாசத்தினால் உம்மிடம் வருகிறேன் என்றும் அவரிடம் சொல்லுங்கள். இனி நித்தியத்திற்கும் என்னை முழுவதுமாக உம்முடைய கைகளில் அர்ப்பணிக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் ஆதரவற்றவர்களாயும், நம்பிக்கையற்றவர்களாயும் உள்ளீர்கள் என அவரிடம் சொல்லுங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் அழிந்துபோவீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். பாவத்திலிருந்தும், அதின் குற்ற உணர்விலிருந்தும் உங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெபியுங்கள். உங்களை மன்னிக்கும்படியாகவும், உங்களுடைய பாவங்களை அவருடைய இரத்தத்தில் கழுவும்படியாகவும் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். உங்களுக்குப் புது இருதயத்தைக் கொடுக்கும்படியாகவும், உங்களுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை அருளும்படியாகவும் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். இதுமுதல் அவருடைய சீஷனாயும், வேலைக்காரனாயும் இருப்பதற்கு வேண்டிய விசுவாசத்தையும், கிருபையையும், நற்கிரியை செய்ய வல்லமையையும் கொடுக்கும்படியாக அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். வாசகர்களே, இன்றே அவரிடம் செல்லுங்கள்.

உங்கள் சொந்த நடையில், சொந்த வார்த்தைகளில் அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் வியாதியில் இருக்கும்போது மருத்துவர் உங்களிடம் வந்தால், அவரிடம் எங்கே வலிக்கிறது என்று கட்டாயம் சொல்லுவீர்கள். அதுபோல, உங்கள் ஆத்துமா நிச்சயம் தன் பாவத்தை உணர்ந்தால், இயேசுவிடம் சொல்வதற்குச் சரியான காரியங்கள் உங்களிடம் இருக்கும். நீங்கள் பாவியாக இருப்பதினால் அவருடைய அழைப்பின் மீது சந்தேகப்படாதிருங்கள். பாவிகளை ஏற்றுக்கொள்வது அவருடைய பணி. அவர் சொல்லியிருக்கிறார்: "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்" (லூக் 5:32).

சந்தேகப்படாதீர்கள்

நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைத்து அவரிடம் செல்வதற்குத் தயங்காதீர்கள். எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். காத்திருத்தல் சாத்தானிடமிருந்து வருகிறது. நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்களோ, அதே நிலைமையில் அவரிடம் செல்லுங்கள். உங்கள் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீங்கள் அவரிடம் வருவது அவசியமாயிருக்கிறது. நீங்கள் சரியாக்கப்பட முடியாதபடிக்கு, அவரிடம் இருந்து விலகி விடாதீர்கள்.

உங்களுடைய ஜெபங்கள் திக்கித் திக்கி இருப்பதற்காகவும், அதில் வார்த்தைகள் வலிமையில்லாமல் இருப்பதற்காகவும், ஜெபத்தில் உங்கள் மொழிநடை எளிமையாக இருப்பதற்காகவும் பயப்படாதீர்கள். இயேசு கிறிஸ்துவால் உங்களைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு குழந்தையின் முதல் அழுகையைத் தாயால் எப்படிப் புரிந்துகொள்ள முடிகிறதோ, அதேபோல இரட்சகரும் பாவிகளின் வேண்டுதல்களைப் புரிந்துகொள்ளுகிறார். உங்களின் பெருமூச்சுகளையும், உங்களின் புலம்பல்களையும் அவரால் புரிந்துகொள்ள முடியும்.

உடனடியாகப் பதில் கிடைக்கவில்லையே என விரக்தியடைய வேண்டாம். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து பதில் தாமதப்படும்போது, அது நிச்சயமாக ஏதோ ஒரு நல்ல நோக்கத்திற்காகவே தாமதப்படும். நீங்கள் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும். ஒருவேளை தாமதமானால் அதற்காகக் காத்திருங்கள். அவர் பதில் அளிப்பது திண்ணம்.

வாசகர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆசையிருந்தால் நான் உங்களுக்கு மேலே கொடுத்த அறிவுரைகளை நினைவில் கொள்ளுங்கள். இதை முழுமனதுடனும் நேர்மையாகவும் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மே 09, 2026
இன்று அநேக பெற்றோர்கள் குழந்தைகளின் மீது மிகவும் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் கொடிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகிப் புறப்பட்ட...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
உலகில் பலரும் தங்கள் “சுயசித்தம்” அல்லது “சுதந்திரச் சித்தம்” (Free Will) குறித்துப்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
மே 06, 2026
திருச்சபையார் வெறும் மனிதனுடைய அபிப்பிராயங்களைக் கேட்காமல், தங்களுக்கான தேவனுடைய ஜீவ வார்த்தையையே...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 19, 2026
ஆவிக்குரிய ஆபத்துகள் நிறைந்த காலத்திலே வாழும் நீங்கள், மற்றவர்களுடைய ஆத்தும நன்மைக்காக உங்களால்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஏப்ரல் 17, 2026
பனிப்பொழிந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், இதே வசனத்தைக் கேட்டபோதுதான் சார்லஸ் ஸ்பர்ஜன் தேவனுடைய...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.