முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்

ஆசிரியர்: ஜார்ஜ் மதீசன்

பாடல் பிறந்த கதை

1. அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக்கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார்மேகத்திலும் வான ஜோதி!
"விடியுங்காலை களிப்பாம்!"
உம் வாக்கு மெய் மெய்யே.

4. குரூசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண்மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.
 

இப்பாடலை எழுதத் தன்னைத் தூண்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி டாக்டர் ஜார்ஜ் மதீசன் இவ்வாறு கூறுகிறார்:

"1882 - ம் ஆண்டு ஜீன் மாதம் ஆறாம் தேதி இனெல்லத்தில் இப்பாடலை எழுதினேன். அன்று என் சகோதரிக்கு கிளாஸ்கோவில் திருமணம் நடைபெற்றது. எனவே, என் உறவினர் அனைவரும் அங்கே தங்கியிருக்க, நான் மட்டும் தனித்து விடப்பட்டவனாக, தனிமையில் இருந்தேன். அப்போது தான் அந்த பயங்கர துயர அனுபவம் எனக்கு நேரிட்டது. நான் மட்டுமே அறிந்த, அந்த துயர அனுபவம் என்னை மிகவும் வாட்டியது.

மிகவும் சஞ்சலப்பட்டு, சோர்வுற்ற மனநிலையில், தனித்து விடப்பட்ட அந்த சூழ்நிலையில் தான், இப்பாடல் என் உள்ளத்தில் உருவானது. அதை நான் எழுதினேன் என்று சொல்வதைக் காட்டிலும், என் உள்ளத்தில் பேசிய ஒரு குரல், வார்த்தைகளைச் சொல்லச்சொல்ல, அவற்றை அப்படியே, என் கை ஒரு தாளில் துரிதமாக எழுதிவிட்டது. பாடல் முழுவதையும் எழுதி முடிக்க, மொத்தம் ஐந்தே நிமிடங்கள் தான் ஆயின. பொங்கி வரும் நீரூற்றைப் போல என் உள்ளத்தில் கொடுக்கப்பட்ட இப்பாடலை, நான் மேலும் மெருகேற்றத் தேவை ஒன்றுமில்லாமல், தனிப் பொலிவுடன் அமைந்திருந்தது.

இப்படிப்பட்டதோர் சிறந்த அனுவத்தை என் வாழ்நாளில் நான் அதன்பின் பெற்றதேயில்லை."

சிறுவயதிலேயே கண்பார்வை குறைவுபட்ட மதீசனுக்கு, மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால், தனது 18-வது வயதிலேயே பார்வையிழந்தார். இப்பெருங்குறையுடனும் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவனாகத் தேறி, தனது 19வது வயதிலேயே பட்டம் பெற்றார். 1866-ம் ஆண்டு, தனது 24-ம் வயதில், உதவிகுருவாக பொறுப்பேற்று, பின் இரண்டு ஆண்டுகளில் இனெல்லம் என்ற இடத்திலுள்ள சிற்றாலயத்தின் போதகரானார்.

இனெல்லத்தில் 18 ஆண்டுகள் திறமையாகப் பணியாற்றி, "சிறந்த பிரசங்கியார்" என்ற மதிப்பும் பாராட்டும் பெற்றார். திருமறைக்கட்டுரைகள் பல எழுதி, திருச்சபை மக்களின் அன்பையும் பேராதரவையும் பெற்றார். இதையறிந்த இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி, அவரைத் தன் பால்மோரல் கோட்டை அரண்மனை ஆலயத்தில் தேவ செய்தியளிக்க அழைத்தார். மதீசனின் செய்தியால் புத்துணர்ச்சி பெற்ற ராணி அவருக்கு நன்றி கூறினார்.

பின்னர் 1886-ம் ஆண்டு எடின்பர்கில் உள்ள, 2000 அங்கத்தினர்களைக் கொண்ட தூய பெர்னார்டு பேராலயத்திற்குப் போதகராக நியமிக்கப்பட்டார்.

1899 - ம் ஆண்டில் அவர் ஓய்வு பெறும் வரை அந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாக ஊழியம் செய்தார். அவரது கிறிஸ்தவ இலக்கியத் தொண்டு அவர் ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தது.
இப்பாடலுக்கு இசை அமைத்ததும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். 1885 - ம் ஆண்டு, ஸ்காட்லாந்து தேசத்தின் அசான் கடற்கரை மணலில் உட்கார்ந்து, டாக்டர் ஆல்பர்ட் லிஸ்டர் பீஸ் இப்பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் உள்ளத்தில் தொனித்த ராகத்தை, அப்படியே சில நிமிடங்களில் எழுதி முடித்துவிட்டார்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.