முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல் பிறந்த கதை

 1. பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்,
துன்பமும் துக்கமும் மாறியே போம்;
நன்மைச் சொரூபியைத் தரிசிப்போம்,
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.
 
   பேரின்பமாம், பூரிப்புண்டாம்,
   பேரின்பமாம், பூரிப்புண்டாம்,
   மேலுலகில் - (மேல்) - அவர் சந்நிதியில்
   மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்.
 
2. மாட்சிமையான காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்,
சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்,
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.
- பேரின்பமாம்
 
3. அன்பராம் இஷ்டரைக் கண்டு கொள்வோம்,
இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்,
என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்,
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.
- பேரின்பமாம்.

''அம்மா! நான் உலகெங்கும் பிரபலமாகும் ஒரு பாடலை எழுத விரும்புகிறேன்''.

''ரொம்ப நல்லது, மகனே! நீ அமெரிக்க ஜனாதிபதியாவதைக் காட்டிலும், அனைவருக்கும் உதவும் நல்ல பாடலை எழுதுவதுதான் மிகச் சிறந்தது.''

ஆம், அச்சிறுவனின் வாஞ்சை நிறைவேறியது. அவன் தாயின் கணிப்பும் தவறவில்லை. ஓரிரு சந்ததிகளால் மட்டும் அறியப்பட்டு, போற்றப்படும் அமெரிக்க ஜனாதிபதியைக் காட்டிலும், வழி வழியாய்ப் பல சந்ததிகளால், பல தேசங்களில், பல்வேறு மொழிகளில் விரும்பிப் பாடப்படும் இப்பாடலை இயற்றி, அதிகப் புகழ்பெற்றான் அந்த சிறுவன், சார்லெஸ் H. காபிரியேல்.

18.8.1856 அன்று அயோவாவிலுள்ள வில்ட்டனில்  சார்லெஸ் பிறந்தார். சிறுவன் சார்லெஸின் இல்லம், அநேக மக்கள் கூடி, உற்சாகமாய் தேவனைத் துதித்துப் பாடி, ஆராதிக்கும் இடமாக விளங்கியது. எனவே, அவர் சிறுவயதிலிருந்தே, இசையில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். இதனால், கிரமமாக சங்கீதக் கல்வி பெறாதபோதிலும், இசைப் பள்ளிகளை நிறுவிப் போதிக்குமளவிற்கு இசை ஞானம் பெற்றிருந்தார். இந்த இசைப் பள்ளிகளின் மூலம், சார்லெஸ் பலருக்கு இசைப்பயிற்சி அளித்தார்.

சார்லெசுக்கு, எட்கார்டு என்ற நண்பருண்டு. அவர் மிஸ்úஸôரியிலுள்ள ''சூரியக் கதிரொளி மீட்பகம்'' என்ற ஸ்தாபனத்தின் தலைவர். ஒரு நல்ல விசுவாசி. அவர் முகம் எப்பொழுதும், ஆனந்தக் களிப்புடன் பளிச்சிடும். அவர் கலந்துகொள்ளும் நற்செய்திக் கூட்டங்களிலும், ஜெபக் கூட்டங்களிலும், திடீர் திடீரென்று, ''மகிமை'' என்ற உற்சாக ஆரவாரம், அவர் வாயிலிருந்து புறப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

புன்னகை பூத்த முகம் கொண்ட எட்கார்டை, அனைவரும் ''பளிச்சிடும் முகம்'' என்றே அழைத்தனர். அவர் ஜெபிக்கும்போது, ஒவ்வொரு முறையும், ''அது எனக்கு மகிமையின் பூரிப்பைத் தருவதாக'' என்று கூறி முடிப்பார்.

இந்த சொற்றொடர்களை, மீண்டும் மீண்டும், பல சந்தர்ப்பங்களில் எட்கார்டு கூறக் கேட்ட சார்லெஸ், அதையே தலைப்பாகக் கொண்டு, இப்பாடலை எழுதினார். எட்கார்டு இவ்வுலக வாழ்வை முடித்து, பரலோகம் செல்லும் நாள் வந்தபோது, இப்பாடலையே தன் வாழ்வின் அனுபவ சாட்சியாகப் பாடி மரித்தார்.

சார்லெஸ் எழுதிய பாடல்களுக்கு, அவரே ராகத்தையும் அமைப்பார். சிறந்த இசை வல்லுனராக விளங்கிய சார்லெஸின் பாடல்களை, பிரபல பாடகரான ஹோமர் ரோட்ஹீவர், பில்லி சன்டேயின் நற்செய்திக் கூட்டங்களில் பாடி, பிரபலமாக்கினார். தன் வாழ்நாள் முழுவதையும், இறைவனின் இசைப் பணிக்கென அர்ப்பணித்த சார்லெஸ், 35 நற்செய்திப் பாடல் புத்தகங்களையும், 8 ஞாயிறு பள்ளிப் பாடல் புத்தகங்களையும், ஆண்களுக்கான 7 பல்லவிப் புத்தகங்களையும், பெண்களுக்கான 6 பாடல் புத்தகங்களையும், 10 சிறுவர் கீதப் புத்தகங்களையும், மற்றும் அநேக பாடகர் குழு இசைப் புத்தகங்களையும் எழுதினார்.

கட்டுரைகள்
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மே 07, 2025
வேதபுத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதன்...

Read More ...

Intro Image
மே 07, 2025
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்....

Read More ...

Intro Image
ஏப்ரல் 23, 2025
நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
ஆர்மீனியர்கள் என்ற பிரிவினர் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து வேதத்திலுள்ள இயேசுகிறிஸ்துவா? என்று...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது. பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து,...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.