முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

ஆசிரியர்: தே. தேவசகாயம்

பல்லவி
நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
நீயுனக்குச் சொந்தமல்லவே.
 
அனு பல்லவி
நீயுனக்குச் சொந்தமல்லவே,
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
                                               - நீயுனக்குச்
 
சரணங்கள்
1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே - திரு ரத்தம் ரத்தம்
திரு விலாவில் வடியுது, பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே.
                                     - நீயுனக்குச்
 
2. இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்தத முனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ?
                                    - நீயுனக்குச்
 
3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக்கடல் தள்ளுவானேன்?
                                     - நீயுனக்குச்
 
4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகை விட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
 உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்.
                                      - நீயுனக்குச்

கவிஞர் தே. தேவசகாயம் சாட்சியாபுரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மேசியாதாஸ், தேவநேசன் என்று இரு குமாரர்கள் உண்டு. ஒரு நாள் இவ்விரு பையன்களும் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில், ஏதோ ஒரு பொருளுக்காக, "இது என்னுடையது; உன்னுடையதல்ல,'' என்று கூச்சலிட்டுச் சண்டை போட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற தந்தையின் உள்ளத்தில், மேலே குறிப்பிட்ட பவுலடியாரின் வேத அறிவுரை நினைவில் வந்தது.

இந்நிகழ்ச்சியால் உள்ளக்கிளர்ச்சி பெற்ற இக்கவிஞர், இந்தப் பாடலின் முதல் வரியை, "நீ உனக்குச் சொந்தமல்லவே, தாசா, நேசா,'' என்பதாக எழுதினார். "ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறைவன் இயேசுவின் விலையேறப்பெற்ற ரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்ட அடிமை. எனவே, தனக்கென்று உரிமை பாராட்டத் தகுதியற்றவன்."

இக்கருத்தை மையமாகக்கொண்டு, இந்த அருமையான பாடலை, தேவசகாயம் தன் பிள்ளைகளுக்கென எழுதினார். அதையே, திருச்சபைப் பிள்ளைகளாகிய நம் அனைவருக்கும் பயன்படும் வகையில், "தாசா.. நேசா..'' என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு, ''மீட்கப்பட்ட பாவி'' என்ற வார்த்தைகள் அவ்விடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

"தம் ஜீவனையே ஈனச் சிலுவையில் கிரயமாகச் செலுத்தி, பாவிகளாகிய நம்மை மீட்டெடுத்த இயேசுவுக்கே நாம் சொந்தம். எனவே, பழைய ஏற்பாட்டுக் கால "விருப்ப அடிமைகளைப்" போல, நாமும், தொடர்ந்து ஜீவ காலம் முழுவதும், அவரையே அண்டி வாழ வேண்டும். அவரை விட்டு ஓட முயற்சிக்கலாகாது. பழைய வாழ்க்கையின் மீது மீண்டும் நாட்டம் கொள்ளக் கூடாது'' என்ற கிறிஸ்தவத் தத்துவக் கருத்துக்களை அழகாக, தெளிவாக, இப்பாடலில் தமது மைந்தர்களுக்காக இக்கவிஞர் எழுதியிருக்கிறார்.

இப்பாடலின் கடைசிச் சரணத்தைச் சார்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கிறிஸ்தவ அருட்கவிஞராகிய அருட்திரு டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் இவ்வாறு எழுதுகிறார்: "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த Dr. D.T நைல்ஸ் என்ற பெரியார், வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்குப் புற்றுநோய் கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அவர், எவ்வித மனக்கலக்கமும் அடையாமல், மருத்துவர்களையும், நண்பர்களையும் பார்த்து, "நாம் பிழைத்தாலும், மரித்தாலும், ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள்," என்று கூறினார்.

இந்த நிலையான கிறிஸ்தவ நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் இப்பாடலை, கவிஞர் தேவசகாயம் எவ்வளவு நேர்த்தியாக எழுதியிருக்கிறார்! கவிஞர் தேவசகாயம் இயற்றிய மற்றுமிரு பாடல்களும் திருச்சபை மக்களால் விரும்பிப் பாடப்படுகின்றன. அவை, "வா, பாவி, மலைத்து நில்லாதே, வா'' என்ற அன்பின் அழைப்புப் பாடலும், "அடைக்கலம் அடைக்கலமே'' என்ற நம்பிக்கையூட்டும் பாடலுமாகும்.

கட்டுரைகள்
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
மே 07, 2025
வேதபுத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதன்...

Read More ...

Intro Image
மே 07, 2025
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்....

Read More ...

Intro Image
ஏப்ரல் 23, 2025
நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும்...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
ஆர்மீனியர்கள் என்ற பிரிவினர் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து வேதத்திலுள்ள இயேசுகிறிஸ்துவா? என்று...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
சீர்திருத்தம் எதைப் பற்றியது என்று கேட்பது மிகவும் அவசியமானது. பிரதானமாக, விசுவாசத்தினால் மட்டுமே...

Read More ...

Intro Image
ஏப்ரல் 19, 2025
“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து,...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.