images/new_theme/Promotion banner-4-2-min.jpg

அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17:16,17)

ஒருவேளை இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு நகரத்தில் வசிக்கலாம்; ஆகவே பசுமையான புல்வெளிகளைவிட, செங்கற்களையும் கட்டுமானப் பொருட்களையும் அதிகம் பார்க்கலாம். அல்லது நீங்கள் ஆழமாக நேசிக்கும் உங்கள் உறவினரோ நண்பரோ ஒரு பட்டணத்தில் வசிக்கலாம். இவற்றில் உங்கள் நிலை எதுவாக இருந்தாலும், இக்கட்டுரையின் முகப்பில் உள்ள வேதவாக்கியங்கள் உங்கள் கவனத்தை நாடுகின்றன. இந்த வேதப்பகுதி கற்றுக்கொடுக்கும் பாடங்களை நான் உங்களுக்குக் காண்பிக்கும்படியாக, சில நிமிடங்களுக்கு உங்கள் கவனத்தை இங்கே திருப்புங்கள்.

இது மிகவும் பிரபலமான அத்தேனே பட்டணம். அந்நாட்களில் இப்பட்டணமானது அதன் நிபுணத்துவத்துக்கும், தத்துவஞானிகளுக்கும், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும், கட்டிடக் கலைஞர்களுக்கும் பிரசித்திபெற்ற நகரமாக விளங்கியது. உலகத்தாருக்குப் பண்டைய கிரேக்க நாடு கண்களாக இருந்ததுபோல, அத்தேனே பட்டணம் கிரேக்க நாட்டின் கண்களாயிருந்தது.

பவுல் புறஜாதியாருக்கு அப்போஸ்தலனாயிருந்தார். உலகம் இதுவரைக் கண்டதிலேயே கடின உழைப்பிலும் ஊழியத்திலும் வெற்றிகண்டவர் பவுல். தன்னுடைய ஆவிக்குரிய போதகரைத் தவிர, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்களில், தன்னுடைய எழுதுகோலாலும் பேச்சாலும் மனுக்குலத்தின் மீது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பவுல் மட்டுமே.

புறஜாதியாரின் உன்னதக் கோட்டையான அத்தேனேயும், கிறிஸ்துவின் உன்னத ஊழியக்காரரான பவுலும் நம்முன் நேருக்கு நேர் நிற்கிறார்கள். அதின் முடிவு நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது; நிகழ்வுகள் கவனமாக விளக்கப்பட்டுள்ளன. நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் இக்காரியம், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்நாட்களுக்கும், தற்கால இந்தியாவின் மாநகரங்களில் வசிப்பவர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாகும். இந்தப் பகுதியில் நாம் கீழ்க்காணும் மூன்று தலைப்புகளின் கீழ் தொடர்ந்து சிந்திக்கப்போகிறோம்.
கட்டுரைகள்
More articles ...
More articles ...
More articles ...
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
No Image
ஆகஸ்ட் 27, 2026
பரிசுத்த வேதாகமம், தேவனாகிய யெகோவாவை சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகராக நமக்கு அறிமுகப்படுத்துகிறது....

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
வியாதி என்ற முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் இப்போது சிந்திக்கப்போகிறோம். இதிலிருந்து யாராலும்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்படும் சர்தை சபையானது, வெளியில் உயிரோடிருப்பதாகப் பெயர்...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
சார்லஸ் ஸ்பர்ஜன் அவர்கள், சங்கீதம் 110:3-ஐ அடிப்படையாகக் கொண்டு முழங்கிய இந்த உன்னதமான பிரசங்கம்,...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
சுவிசேஷப் பணி என்பது மனிதத் திட்டங்களாலோ அல்லது நிறுவனங்களின் பலத்தினாலோ நடைபெறுவது அல்ல; அது...

தெடர்ந்து வாசிக்க ...

Intro Image
ஜூலை 24, 2026
நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாவது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய காரியம் இது. இந்தப்...

தெடர்ந்து வாசிக்க ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.