images/new_theme/Promotion banner-4-2-min.jpg

     எந்த எண்ண அலைகளுடன் இந்த கட்டுரை ஆரம்பித்ததோ அதே நினைவலைகளுடன் இதை முடிக்க இருக்கிறேன். நம்முடைய கிராமங்களில் மக்கள்தொகை ஆண்டுக்காண்டு குறைந்துக்கொண்டே வருகிறது. நகரவாசிகளின் எண்ணிக்கை கிராமவாசிகளின் எண்ணிக்கையைவிட பன்மடங்கு அதிகம். நீங்கள் ஒரு நகரவாசியாயிருந்தால், முடிவாக இப்பொழுது நான் கொடுக்கப்போகும் அறிவுரையை கவனமுடன் கேளுங்கள். உங்கள் ஆத்துமாவைக்குறித்து நான் பேசும்பொழுது உங்கள் முழு கவனத்தையும் என்னிடம் செலுத்துங்கள்.

1. நீங்கள் ஒரு வித்தியாசமான ஆவிக்குறிய ஆபத்தான நிலையிலே இருக்கிறீகள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சீட்டு நகரத்திலோ அல்லது கிராமத்திலோ விழுந்திருக்கலாம். பாபேலின் நாட்கள் முதல், எங்கெல்லாம் ஆதாமின் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் ஒருவரை ஒருவர் உச்சகட்ட பாவத்தையும் துன்மார்க்கத்தையும் நோக்கி இழுக்கிறார்கள். மாபெரும் நகரங்கள் எப்பொழுதும் சாத்தானின் ஆசனமாக இருந்திருக்கின்றன. இந்த நகரங்களில் இளம் வாலிபன் தேவனற்ற தன்மையின் மேலதிக உதாரங்களைக் காண்கிறான்; அவன் பாவத்திலே வாழ முடிவுசெய்துவிட்டால், அவனுக்கு உதவ பல நண்பர்கள் தயாராயிருப்பார்கள். இந்த நகரங்களில் தான் திரையரங்குகளும், சூதாட்டவிடுதிகளும், நடன விடுதிகளும், மதுபான விடுதிகளும் எப்பொழுதும் கூட்டமாயிருக்கும். இந்த நகரங்களில் தான் பண ஆசையும், பொழுதுபோக்குகளும், ஆபாச ஆசைகளும், திரளானவர்களை அடிமையாக்குகின்றன. இந்த நகரத்தில் ஒரு மனிதன் ஓய்வு நாளை உதாசீனப்படுத்த, கிருபையை அவமதிகும், வேதத்தை அலட்சியப்படுத்த, ஜெபப் பழக்கத்தை விட்டுவிட உற்சாகப்படுத்தும் நூற்றுக்கணக்கானவைகளைக் காணலாம். நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்தால் உங்களைப் பாதுகாத்துக்கொளுங்கள். உங்களுக்கு வரும் ஆபத்தைக்குறிந்து அறிந்திருங்கள். உங்கள் பெலவீனத்தையும் பாவத்தன்மையையும் அறிந்திருங்கள். கிறிஸ்துவண்டை ஓடி, உங்கள் ஆத்துமாவை அவர் பாதுகாத்துக்கொள்ளும்படி அவரிடம் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களைப் பிடித்துக்கொளும்படிக் கேளுங்கள், அவர் உங்களைப் பாதுகாப்பாக நடத்துவார். உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நின்று விழிப்புடன் ஜெபம்பண்ணுங்கள்.
2. மற்றொருவிதத்தில், நீங்கள் ஒரு நகரத்தில் வாழ்ந்தால், கிராமப்பகுதிகளில் உங்களுக்குக் கிடைகாத மற்றொரு சிறப்பான உதவி உங்களுக்கு கிடைக்கலாம். பரலோகத்திற்கு நேரான உங்கள் பயணத்தில் உங்களுக்கு மகிழ்வுடன் உதவிசெய்யும் உண்மையான கிறிஸ்துவின் ஊழியர்கள் இல்லாத இந்திய நகரங்கள் இல்லை! தங்கள் சிறு எண்ணிக்கையுடன் மேலும் ஒருவரைக் கூட்டிக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் குறுகலான வழியில் செல்லும் மோட்ட பிரயாணிகள் இல்லாத, நற்செய்தியை பிரசங்கிக்கும் ஊழியர் இல்லாத இந்தியப் பட்டணங்கள் சொற்பமே!
வாசகரே, திடன் கொள்ளுங்கள், ஒரு நகரத்தில் கிறிஸ்துவுக்காக வாழ்தல் என்பது முடியாத காரியம் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். தேவனால் எல்லாம் கூடும் என்பதை நினைவில் வையுங்கள். மாபெரும் சோதனைகளின் மத்தியிலும், சிலுவை சுமந்து, மரணம்வரை உண்மையாயிருந்த மிகப்பெரிய சாட்சிகளின் வரிசையை நினைத்துக்கொள்ளுங்கள். பாபிலோனில் தானியேலையும் மற்ற மூன்று பிள்ளைகளையும் நினைத்துக்கொள்ளுங்கள். ரோம் நகரில் நீரோவின் வீட்டில் இருந்த பரிசுத்தர்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்களில் நாட்களில், கொரிந்துவில், எபேசுவில், அந்தியோகியாவில் இருந்த திரளான விசுவாசிகளை நினைத்துக்கொள்ளுங்கள். வாழும் இடமல்ல, கிருபையே ஒருவனை கிறிஸ்தவனாக்குகிறது. பூமியில் வாழ்ந்ததிலேயே மிகவும் பரிசுத்தமான, மிகவும் உபயோகமான தேவனுடைய பரிசுத்தர்கள், வனாந்திரத்தில் வாழ்ந்த சன்யாசிகளல்ல, அவர்களும் நகரவாசிகளே.
இவைகளை நினைவில் வைத்து, உற்சாகத்துடன் இருங்கள். “முழுவதும் விக்கிரக ஆராதனையால் நிறைந்திருந்த” அத்தேனேயைப் போன்ற ஒரு நகரத்தில் உங்கள் சீட்டு விழுந்திருக்கலாம். வங்கியிலோ, வியாபார ஸ்தலத்திலோ அல்லது ஒரு கடையிலோ நீங்கள் மட்டும் தனியாக நிற்க வேண்டியிருக்கலாம். கிறிஸ்து உங்களுடன் இருந்தால் நீங்கள் தனி ஒருவன் அல்ல. தேவனிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள். தைரியமாகவும், உறுதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். மாபெரும் நகரத்திலும் ஒரு மனிதன் மகிழ்ச்சியாகவும், உபயோகமான கிறிஸ்தவனாகவும், வாழும்பொழுது மதிக்கப்படுபவனாகவும், மரிக்கும்பொழுது கனப்படுத்தவும்படுவான் என்பதை நீங்கள் கண்டுக்கொளும் நாள் வரும்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
ஆகஸ்ட் 20, 2025
நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான இரண்டு கேள்விகள்: உண்மையாகவே தேவன் இருக்கிறாரா? அப்படி...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 19, 2025
கிறிஸ்து மரித்தாரா? அவர் சிலுவையில் கோரமான முறையில், வேதனையுடன், அவமானத்தையும், சாபத்தையும்...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 19, 2025
நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு மதங்கள் இருந்தபோதிலும், வேதாகமும் மனிதனின் மனசாட்சியும் ஒரு ஒரே...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
சாத்தானின் சுவிசேஷம் ஒரு புரட்சிகர கொள்கைகளின் அமைப்பும் அல்ல, அது ஒரு அராஜகவாதத் திட்டமும் அல்ல....

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
நாவு நம்முடைய சரீரத்தில் மிகவும் சிறிய அவயம். ஆனால் அது உலகம் அளவிற்கு தீமையை கொண்டிருக்கிறது. அது...

Read More ...

Intro Image
ஆகஸ்ட் 02, 2025
மனிதகுலம் ஆதாமின் வீழ்ச்சியின் மூலம், நாம் தேவனின் அன்பை மட்டுமல்ல, நமது இயல்பின் தூய்மையையும்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.