முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

ஆசிரியர்: J.S. அற்புதராஜ் மர்காஷிஷ்

பாடல் பிறந்த கதை

 1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்;
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்.
 
    அனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன்
    அனைத்தும் அர்ப்பணமே;
    என் முழுத் தன்மைகள் ஆவல்களும்
    அனைத்தும் கிறிஸ்துவுக்கே
 
2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே;
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை;
உம் சிலுவை அன்பை சந்தித்தேனே;
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்.
                - அனைத்தும்
 
3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா!
வான் புவி கிரகங்கள் ஆள்பவரே! 
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்.
                - அனைத்தும்
 
4. என் வாழ்வில் இழந்த நன்மைக் கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே;
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்.
               - அனைத்தும்

''கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இல்லவே, இல்லை! இந்த வேத புத்தகமெல்லாம் நான் நம்பக் கூடாத கற்பனைக் கதைப் புத்தகம் தான்!'' என  இளமைத்துடிப்புடன் முழங்கிக் கொண்டிருந்தான் அந்தப் போதகரின் மகன்! ''உன் வாலிப நாட்களில் உன் சிருஷ்டிகரை நினை'' என்ற வேதவசனத்திற்கு எதிர்மறையாக, தெய்வ நம்பிக்கையை முற்றும் இழந்த நாத்திகனாக மாறியிருந்தான் வாலிபன் அற்புதராஜ்!

ஆனால் தன்னை விட்டுத் தூரமாய் விலகி ஓடிய, காணாமற்போன இந்த ஆட்டைத் தேடித் தூக்கி அணைத்து, மாற்றினார் நல்ல மேய்ப்பனாம் இறைவன் இயேசு.  ஆம், 1969 -ம் ஆண்டில், இந்த அற்புதத்தை ஆண்டவர் அற்புதராஜின் வாழ்க்கையில் நிகழ்த்தி, அவரை ஆட்கொண்டார்.  புது வாழ்வு பெற்ற அற்புதராஜ் தன்னை ஆண்டவரின் கரத்தில் அர்ப்பணம் செய்தார். இந்த அருமையான அர்ப்பணப் பாடலை இயற்றிய சகோதரர் J.S. அற்புதராஜ் மர்காஷிஷ், தென்னிந்தியத் திருச்சபையின் திருநெல்வேலித் திருமண்டலப் போதகரான அருள்திரு. ஜான் சாமுவேல் ஐயரின் மகனாக 27.3.1942 அன்று பிறந்தார்.  இவரது சொந்த ஊர் மெஞ்ஞானபுரம்.  கண்டிப்புடன் கூடிய, பயபக்தியுள்ள கிறிஸ்தவக் குடும்பப் பின்னணியில் வளர்ந்தார். நாசரேத்தில் தனது படிப்பைத் தொடர்ந்த அற்புதராஜ், முதுநிலைக் கலைப்பட்டம் பெற்று, அத்துடன் ஆசிரியர் பயிற்சி முதுநிலைப்பட்டமும் பெற்று முடித்தார்.  தற்சமயம் திருநெல்வேலியிலுள்ள CSI ஷாப்டர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தனது சிறுவயது முதல் இசையில்  விருப்பமுள்ளவராக வளர்ந்த அற்புதராஜ், நாசரேத் மற்றும் முதலூர் ஆலய / பள்ளிப் பாடகர் குழுவில் இருந்தார்.  பின்னர் சாயர்புரத்திலும், தூத்துக்குடி கால்டுவெல் காலனி ஆலயத்திலும் ஆர்கன் வாசித்து, பாடகர் குழுத் தலைவராகவும் திருப்பணியாற்றினார்.  தற்போது பாளையங்கோட்டையிலுள்ள கதீட்ரல் பேராலயப் பாடகர் குழுத் தலைவராக விளங்குகிறார். 05.05.1966 அன்று திருமணமான இச்சகோதரருக்கு தேவன் ஒரு மகளையும் இரு மகன்களையும் கொடுத்து, இவரது இல்லறத்தை ஆசீர்வதித்திருக்கிறார்.  மேனாட்டிசையில் புலமை மிக்க இவர், கீ போர்டு வாசிப்பதில் திறமை பெற்றிருக்கிறார்.  இதுவரை 85 பாடல்களை இயற்றி ராகமமைத்திருக்கிறார்.  ''மலரைப் பார்த்து'', ''சிலுவையைப் பார்த்து'' என்ற இரு ஒலிநாடாக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

சகோதரர் அற்புதராஜ் தூத்துக்குடியில் பணியாற்றிய நாட்களில், 1978-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற, கிறிஸ்துவுக்கு வாலிபர் இயக்கத்தின் சிறப்புக் கூடுகைக்கென இப்பாடலை இயற்றினார்.  அக்கூட்டங்களில் இப்பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டு அறிமுகமானது.  வாலிபர் மத்தியில் ஊழியம் செய்துவரும் அற்புதராஜ், இப்பாடலைத் தனது செய்தியின் இறுதியில், சமர்ப்பண அழைப்புப் பாடலாகப் பாடுவது வழக்கமாயிற்று.  இப்பாடலின் மூலம், அநேக வாலிபர்கள் ஆண்டவருக்குத் தங்களை அர்ப்பணம் செய்தனர்.

ரோமர் 12- ம் அதிகாரத்தின் முதலிரு வசனங்களின் அடிப்படையில், நம்மை முற்றிலும் அர்ப்பணம் செய்ய அழைக்கும் இப்பாடல், வாலிபர்களுக்கெனப் பிரத்தியேகமாக எழுதப்பட்டாலும், கிறிஸ்தவ சமுதாயத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பாடும் அர்த்தமுள்ள பாடலாக இன்றும் விளங்குகிறது.  இப்பாடலைக் கொண்டு தேவன் அதிசய அற்புதங்களைத் தன் வாழ்வில் பொழிந்ததாக சகோதரர் அற்புதராஜ் சாட்சி பகருகின்றார்.  கிறிஸ்தவ வாழ்வின் இவ்வுலக ஓட்டத்தில், சோதனைகளால் தடுமாறி விழும் வேளைகளில், மீண்டும் நமது அர்ப்பணத்தை ஆண்டவரிடம் புதுப்பித்துக்கொள்ளவும் இப்பாடல் உதவுகிறது எனத் தன் அனுபவத்திலிருந்து எடுத்துக் கூறுகிறார்.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.