முகப்பு

images/new_theme/Promotion banner-4-2-min.jpg

பாடல்: எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் 

ஆசிரியர்: ஜான்சன் ஓட்மன்

பாடல் பிறந்த கதை

1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
 
    எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
    ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
 
2. கவலைச்சுமை நீ சுமக்கும் போதும்
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் - எண்ணி
 
3. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங்கொள்ள பேராசீர்வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் - எண்ணி
 
4. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாக நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில் - எண்ணி

பாடல் பிறந்த கதை

"இப்பாடலை ஆண்கள் பாடுவார்கள்; சிறுவர் விசில் அடிப்பார்கள்; பெண்கள் தங்கள் பிள்ளைகளைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடலாகப் பாடுவார்கள்!" என, "லண்டன் டெய்லி" என்ற செய்தித்தாள், ஜிப்ஸி ஸ்மித்தின் கூட்டத்தில், இப்பாடலுக்குக் கிடைத்த அறிமுகத்தை, அப்படியே வெளியிட்டிருந்தது!

ஆரம்ப நாட்களில் சிறுவருக்கென்று எழுதப்பட்ட இப்பாடலை, இன்று அனைத்து வயது மக்களும் விரும்பிப் பாடுகிறார்கள். எனவே, நமது பாடல் புத்தகங்களில் பிரபலமான பாடலாக இது விளங்குகிறது.

இப்பாடலை எழுதிய போதகர் ஜான்சன் ஓட்மன் ஜீனியர், 21.4.1856-ல் நியூஜெர்சியிலுள்ள மெட்போர்டுக்கருகில் பிறந்தார். பாடல் வரம் பெற்ற இவரது தந்தையின் மூலம், பல திருச்சபைப் பாடல்களை சிறுவயதிலேயே கற்றுக் கொண்டார். 5000 பாடல்களுக்கு மேல் இயற்றிய இவர், நியூஜெர்சியிலுள்ள பெரிய ஆயுள் காப்பு நிறுவனத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். ஓட்மன் எழுதிய பாடல்கள் அனைத்திலும், இப்பாடலே சிறந்த பாடலாகும்.

1897-ல் "இளைஞர் பாடல்கள்" என்ற பாடல் புத்தகத்தில் இப்பாடல் வெளியாகி, உலகமெங்கும் பாடப்படும் பாடலாக மாறிவிட்டது. "பூமியின் இருண்ட இடங்களை ஒளிமயமாக்கும் சூரிய ஒளிக்கதிர்கள் போல இப்பாடல் விளங்குகிறது" என்று எழுத்தாளர் ஒருவர் கூறினார். அமெரிக்காவில் எழுதப்பட்ட பாடல்களிலெல்லாம், இங்கிலாந்து தேசத்தில் சிறப்பான வரவேற்புப் பெற்றது இப்பாடல் தான்.

பல இசைப் பள்ளிகளை நிறுவி, நற்செய்திக் கூட்டங்களில் பாடல் நேரங்களை முன் நின்று நடத்திப் புகழ்பெற்ற உ.ஞ. எக்செல் இப்பாடலுக்கு ராகம் அமைத்தார். இவர் தாமே 2000 பாடல்களை எழுதி, அவற்றிற்கு இசை அமைத்து, பாடல் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரைகள்
More articles ...
More articles ...

தமிழ் வேதாகமம்

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.

புத்தக அறிமுகம்
பரிசுத்த வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தை வாசிப்பதற்கு, முன் அந்த புத்தகத்தை குறித்த பின்னணி மற்றும் அறிமுகம் முழு அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை நாங்கள் உங்களுக்கு கிடைக்க செய்கிறோம்.

வாசிப்பதற்கு...
ஆடியோ மற்றும் வீடியோ
கட்டுரைகள் மற்றும் புத்தகங்களுடன் கூடுதலாக, ஆடியோ மற்றும் வீடியோகளும் இங்கே உங்களுக்குக்காக
01

ஆடியோக்கள்

YOUTUBE மூலம் இங்கே கிடைக்கும் பல ஆத்மீக செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் பதிவுகளையும் நீங்கள் கேட்கலாம்.
02

வீடியோக்கள்

YOUTUBE CHANNEL மூலம் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் வீடியோக்களையும் நீங்கள் காணலாம்.

Store

எங்களுடைய வெளியீட்டு புத்தகங்களை அச்சுவடிவல் பெற்றுக்கொள்ள தொடர்புக்கொள்ளுங்கள்.
புதிய புத்தகங்கள்
Intro Image
நவம்பர் 21, 2025
நீங்கள் எந்த காரியத்தில் கவனமற்று இருந்தாலும் பரவாயில்லை. உங்களுடையதும் உங்கள் பிள்ளைகளுடையதுமான...

Read More ...

Intro Image
நவம்பர் 15, 2025
அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும்...

Read More ...

Intro Image
நவம்பர் 01, 2025
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதை குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல்...

Read More ...

Intro Image
அக்டோபர் 31, 2025
வரலாற்றில் இப்படி ஒரு அதிசயமான நாளை ஏற்படுத்தின எங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனை நன்றியுள்ள...

Read More ...

Intro Image
அக்டோபர் 07, 2025
ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த...

Read More ...

Intro Image
செப்டம்பர் 29, 2025
தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக்...

Read More ...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.