1 | நெபுகத்னேசர் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் கனவுகள் சில கண்டு, உள்ளம் கலங்கி, உறக்கமின்றித் தவித்தான். | தானி 1:1-5 2நாளா 36:5-7 |
2 | அப்பொழுது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும்படி மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான். அவர்களும் வந்து அரசன் முன்னிலையில் நின்றார்கள். | தானி 1:20 தானி 4:6 தானி 5:7 ஆதி 41:8 யாத் 7:11 உபா 18:10-12 ஏசா 8:19 ஏசா 19:3 ஏசா 47:12 ஏசா 47:13 |
3 | அரசன் அவர்களை நோக்கி, “நான் ஒரு கனவு கண்டேன்: அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது: நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்” என்றான். | தானி 2:1 ஆதி 40:8 ஆதி 41:15 |
4 | அப்பொழுது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமேய மொழியில்) “அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம்” என்று கூறினார்கள். | ஆதி 31:47 எஸ்றா 4:7 ஏசா 36:11 |
5 | அரசன் கல்தேயருக்கு மறுமொழியாக, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு நீங்கள் விளக்கிக் கூறாவிடில், உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்: உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்: இது என் திண்ணமான முடிவு. | தானி 3:29 1சாமு 15:33 சங் 50:22 சங் 58:7 |
6 | ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் விளக்கிக் கூறுவீர்களாகில், அன்பளிப்புகளும் பரிசுகளும் பெரு மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள். ஆகையால் கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூறுங்கள்” என்று கூறினான். | தானி 2:48 தானி 5:7 தானி 5:16 தானி 5:29 எண் 22:7 எண் 22:17 எண் 22:37 எண் 24:11 |
7 | அதற்கு அவர்கள் மீண்டும், “அரசர் அந்தக் கனவைத் தம் பணியாளர்களுக்குச் சொல்லட்டும்: அப்பொழுது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்” என்று பதிலளித்தார்கள். | தானி 2:4 தானி 2:9 பிரச 10:4 |
8 | அதற்கு அரசன் மறுமொழியாகக் கூறியது: “நான் முடிவெடுத்துவிட்டேன் என்பதை அறிந்தே நீங்கள் காலம் தாழ்ந்த முயலுகிறீர்கள்: இது எனக்குத் திண்ணமாய்த் தெரியும். | எபே 5:16 கொலோ 4:5 |
9 | கனவு இன்னதென்று உங்களால் தெரிவிக்க இயலாதெனில், உங்கள் எல்லாருக்கும் ஒரே தீர்ப்புதான். சூழ்நிலை மாறும்வரை பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்ல உங்களுக்குள் உடன்பட்டிருக்கிறீர்கள். ஆதலால் கனவை முதலில் சொல்லுங்கள்: அப்பொழுதுதான் அதன் உட்பொருளையும் உங்களால் விளக்கிக் கூறமுடியும் என்பதை நான் அறிந்துகொள்ள இயலும்.” | தானி 3:15 எஸ்தர் 4:11 |
10 | கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, “அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவன் இவ்வுலகில் ஒருவனுமில்லை: வலிமையுடைய எந்தப் பேரரசனும் இத்தகைய காரியத்தை எந்த மந்திரவாதியிடமாவது, மாய வித்தைக்காரனிடமாவது, கல்தேயனிடமாவது, இதுகாறும் கேட்டது கிடையாது. |
11 | ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று: தெய்வங்களாலன்றி வேறெவராலும் அரசருக்கு அதனைத் தெரிவிக்க முடியாது: ஆனால், மானிடர் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!” என்று மறுமொழி கூறினார்கள். | தானி 2:27 தானி 2:28 தானி 5:11 ஆதி 41:39 யாத் 8:19 மத் 19:26 |
12 | அரசன் இதைக் கேட்டுக் கடுஞ்சினமுற்றுச் சீறி எழுந்து பாபிலோனில் இருந்த எல்லா ஞானிகளையும் அழித்து விடும்படி ஆணையிட்டான். | தானி 3:13 யோபு 5:2 சங் 76:10 நீதி 16:14 நீதி 19:12 நீதி 20:2 நீதி 27:3 நீதி 27:4 நீதி 29:22 மத் 2:16 மத் 5:22 |
13 | ஞானிகள் கொலை செய்யப்படவேண்டும் என்ற ஆணையின்படி தானியேலையும் அவருடைய தோழர்களையும் கொலை செய்யத் தேடினார்கள். | தானி 6:9-15 எஸ்தர் 3:12-15 சங் 94:20 நீதி 28:15-17 ஏசா 10:1 |
14 | அரசனுடைய காவலர்த் தலைவன் அரியோக்கு பாபிலோனிய ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்டு வந்தான். | 2சாமு 20:16-22 பிரச 9:13-18 |
15 | தானியேல் முன்னெச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் அரசனுடைய காவலர்த் தலைவனாகிய அரியோக்கிடம், “அரசனின் ஆணை இவ்வளவு கடுமையாயிருப்பது ஏன்?” என்று கேட்டார். அதற்குரிய காரணத்தை அரியோக்கு தானியேலுக்குத் தெரிவித்தான். |
16 | உடனே தானியேல் அரசனிடம் போய், கனவின் உட்பொருளை அவனுக்கு விளக்கிக்கூறத் தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார். | தானி 2:9-11 தானி 1:18 தானி 1:19 |
17 | பின்னர், தானியேல் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, அனனியா, மிசாவேல், அசரியா ஆகிய தோழர்களிடம் செய்தியைக் கூறினார். | தானி 1:7 தானி 1:11 தானி 3:12 |
18 | பாபிலோனிய ஞானிகளோடு அவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லப்படாதிருக்க, விண்ணகக் கடவுள் கருணை கூர்ந்து அம் மறைபொருளை வெளிப்படுத்தியருள வேண்டுமென்று அவரை மன்றாடுமாறு அவர்களிடம் சொன்னார். | தானி 3:17 1சாமு 17:37 எஸ்தர் 4:15-17 சங் 50:15 சங் 91:15 நீதி 3:5 நீதி 3:6 ஏசா 37:4 எரே 33:3 மத் 18:12 மத் 18:19 அப் 4:24-31 அப் 12:4 ரோம 15:30 2தீமோ 4:17 2தீமோ 4:18 |
19 | அவ்வாறே அன்றிரவு கண்ட காட்சி ஒன்றில், தானியேலுக்கு அம்மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார். | தானி 2:22 தானி 2:27-29 தானி 4:9 2இரா 6:8-12 சங் 25:14 ஆமோ 3:7 1கொரி 2:9 1கொரி 2:10 |
20 | அவர் கூறியது: கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழத்தப்படுவதாக! ஏனெனில், ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன! | ஆதி 14:20 1இரா 8:56 1நாளா 29:10 1நாளா 29:20 2நாளா 20:21 சங் 41:13 சங் 50:23 சங் 72:18 சங் 72:19 சங் 103:1 சங் 103:2 சங் 113:2 சங் 115:18 சங் 145:1 சங் 145:2 |
21 | காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே! அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை நிலைநிறுத்துபவர் அவரே! ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே! அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே! | தானி 2:9 தானி 7:25 தானி 11:6 1நாளா 29:30 எஸ்தர் 1:13 யோபு 34:24-29 சங் 31:14 சங் 31:15 பிரச 3:1-8 எரே 27:5-7 |
22 | ஆழ்ந்த மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் அவரே! இருளில் உள்ளதை அறிபவர் அவரே! ஒளியும் வாழ்வது அவருடனே! | தானி 2:11 தானி 2:28 தானி 2:29 ஆதி 37:5-9 ஆதி 41:16 ஆதி 41:25-28 யோபு 12:22 சங் 25:14 ஏசா 41:22 ஏசா 41:26 ஏசா 42:9 மத் 13:13 ரோம 16:25 ரோம 16:26 1கொரி 2:9-11 எபே 3:5 |
23 | எங்கள் தந்தையரின் இறைவா! உமக்கு நன்றியும் புகழும் கூறுகின்றேன்: ஏனெனில், எனக்கு ஞானமும் ஆற்றலும் தந்தவர் நீரே! நாங்கள் உம்மிடம் கேட்டதை இப்பொழுது எனக்குத் தெரியப்படுத்தியவர் நீரே! அரசனது காரியத்தை எங்களுக்கு அறிவித்தவரும் நீரே! | 1நாளா 29:13 சங் 50:14 சங் 103:1-4 ஏசா 12:1 மத் 11:25 லூக் 10:21 யோவா 11:41 |
24 | பின்பு தானியேல், பாபிலோனிய ஞானிகளை அழிப்பதற்கு அரசனால் நியமிக்கப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, “நீர் பாபிலோனிய ஞானிகளை அழிக்க வேண்டாம்: என்னை அரசர் முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்: நான் அரசரது கனவின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்” என்றார். | தானி 2:12 தானி 2:13 அப் 27:24 |
25 | எனவே, அரியோக்கு தானியேலை அரசன் முன்னிலைக்கு விரைவாய் அழைத்துச் சென்று, அரசனிடம், “அரசரே! சிறைப்பட்ட யூதா நாட்டினருள், அரசருடைய கனவின் உட்பொருளை விளக்கிக் கூறவல்ல ஒருவனைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான். | நீதி 24:11 பிரச 9:10 |
26 | அரசனோ “பெல்தசாச்சர்” என்று பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூற உன்னால் இயலுமா?” என்று கேட்டான். | தானி 1:7 தானி 4:8 தானி 4:19 தானி 5:12 |
27 | தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: அரசர் கேட்கும் மறைபொருளை அரசருக்கு அறிவிக்க எந்த ஞானியாலும் மாயவித்தைக்காரனாலும் மந்திரவாதியாலும் சோதிடனாலும் இயலாது. | தானி 2:2 தானி 2:10 தானி 2:11 தானி 5:7 தானி 5:8 யோபு 5:12 யோபு 5:13 ஏசா 19:3 ஏசா 44:25 ஏசா 47:12-14 |
28 | ஆனால் அரசரே! மறைபொருள்களை வெளிப்படுத்தும் விண்ணகக் கடவுள் பிற்காலத்தில் நிகழப்போவதை நெபுகத்னேசர் என்னும் உமக்குத் தெரிவித்துள்ளார்: நீர் கண்ட கனவும், நீர் படுத்திருந்த பொழுது, உம் மனக்கண் முன்னே தோன்றின காட்சிகளும் பின்வருமாறு: | சங் 115:3 மத் 6:9 |
29 | அரசரே! நீர் படுத்திருந்த பொழுது, எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றி நினைக்கத் தொடங்கினீர்: அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்க விருப்பதை உமக்குக் காண்பித்தார். | எசே 38:10 |
30 | ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் மற்றெல்லா உயிர்களையும்விட நான் ஞானம் மிக்கவன் என்பதால் எனக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும் உமது இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்துகொள்ளவும் அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. | ஆதி 41:16 அப் 3:12 1கொரி 15:8-12 |
31 | அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. | தானி 7:3-17 மத் 4:8 லூக் 4:5 |
32 | அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது: அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை: வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை. | தானி 2:37 தானி 2:38 தானி 4:22 தானி 4:30 தானி 7:4 ஏசா 14:4 எரே 51:7 வெளிப் 17:4 |
33 | அதன் கால்கள் இரும்பினால் ஆனவை: அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது. | தானி 2:40-43 தானி 7:7 தானி 7:8 தானி 7:19-26 |
34 | அந்தக் கல் இரும்பினாலும் களி மண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது. | தானி 2:44 தானி 2:45 தானி 7:13 தானி 7:14 தானி 7:27 சங் 118:22 ஏசா 28:16 சகரி 12:3 மத் 16:18 அப் 4:11 1பேது 2:7 வெளிப் 11:15 |
35 | அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது: ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று. | சங் 1:4 சங் 1:5 ஏசா 17:13 ஏசா 17:14 ஏசா 41:15 ஏசா 41:16 ஓசி 13:3 மீகா 4:13 |
36 | அரசரே! இதுவே நீர் கண்ட கனவு: அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம். | தானி 2:23 தானி 2:24 |
37 | அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார். | 1இரா 4:24 எஸ்றா 7:12 ஏசா 10:8 ஏசா 47:5 எரே 27:6 எரே 27:7 எசே 26:7 ஓசி 8:10 வெளிப் 1:5 வெளிப் 17:14 |
38 | உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. | தானி 4:21 தானி 4:22 சங் 50:10 சங் 50:11 எரே 27:5-7 |
39 | உமக்குப்பின் உமது அரசைவிட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்: அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்: அது உலகெல்லாம் ஆளும். | தானி 2:32 தானி 5:28-31 தானி 7:5 தானி 8:3 தானி 8:4 தானி 8:20 தானி 11:2 ஏசா 44:28 ஏசா 45:1-5 |
40 | பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்: அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும். | தானி 2:33 தானி 7:19-26 தானி 8:24 தானி 9:26 தானி 11:36-45 யோவா 11:48 |
41 | மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களிமண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். | தானி 2:33-35 தானி 7:7 தானி 7:24 வெளிப் 12:3 வெளிப் 13:1 வெளிப் 17:12 |
42 | அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்ததுபோல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும். | தானி 7:24 வெளிப் 13:1 |
43 | இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்: ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காததுபோல், அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்கமாட்டார்கள். |
44 | அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்: அது என்றுமே அழியாது: அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்: அதுவோ என்றென்றும் நிலைத்திற்கும். | தானி 2:28 தானி 2:37 |
45 | மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையுயம் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது: அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி. | தானி 2:24 தானி 2:35 ஏசா 28:16 சகரி 12:3 மத் 21:24 |
46 | அதைக் கேட்ட அரசன் நெபுகத்னேசர் தானியேலின் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்: அவருக்குக் காணிக்கைப் பொருள்களைப் படைத்துத் தூபமிடுமாறு ஆணையிட்டான். | லூக் 17:16 அப் 10:25 அப் 14:13 அப் 28:6 வெளிப் 11:16 வெளிப் 19:10 வெளிப் 22:8 |
47 | மேலும், அரசன் தானியேலை நோக்கி, “நீர் வணங்கும் கடவுளே தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்: அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர்: அவர் ஒருவரே மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்த வல்லவர். இது உண்மையிலும் உண்மை: ஏனெனில் உம்மால் மட்டுமே இம்மறைபொருளை விளக்கிக் கூறமுடிந்தது” என்றான். | தானி 11:36 உபா 10:17 யோசு 22:22 சங் 136:2 |
48 | பின்பு அரசன் தானியேலை உயர்ந்த முறையில் சிறப்பித்து அவருக்குப் பரிசில் பல தந்து, பாபிலோன் நாடு முழுவதற்கும் அவரை ஆளுநராக ஏற்படுத்தினான்: பாபிலோனிய ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் நியமித்தான். | தானி 2:6 தானி 5:16 ஆதி 41:39-43 எண் 22:16 எண் 22:17 எண் 24:11 1சாமு 17:25 1சாமு 25:2 2சாமு 19:32 2இரா 5:1 யோபு 1:3 எரே 5:5 |
49 | மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைப் பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தான். தானியேலோ அரசனது அவையில் தொடர்ந்து பணியாற்றினார். | தானி 2:17 தானி 1:17 தானி 3:12-30 நீதி 28:12 |