இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 40

                   
புத்தகங்களைக் காட்டு
1“ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள்.ஏசா 3:10 ஏசா 35:3 ஏசா 35:4 ஏசா 41:10-14 ஏசா 41:27-14 ஏசா 49:13-16 ஏசா 50:10 ஏசா 51:3 ஏசா 51:12 ஏசா 57:15-19 ஏசா 60:1-22 ஏசா 61:1-3 ஏசா 62:11 ஏசா 62:12 ஏசா 65:13 ஏசா 65:14 ஏசா 66:10-14 நெகே 8:10 சங் 85:8 எரே 31:10-14 செப் 3:14-17 சகரி 1:13 சகரி 9:9 2கொரி 1:4 1தெச 4:18 எபிரெ 6:17 எபிரெ 6:18
2எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.ஆதி 34:3 2நாளா 30:22 ஓசி 2:14
3குரலொளி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.மத் 3:1-3 மாற் 1:2-5 லூக் 3:2-6 யோவா 1:23
4பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.ஏசா 42:11 ஏசா 42:15 ஏசா 42:16 1சாமு 2:8 சங் 113:7 சங் 113:8 எசே 17:24 எசே 21:26 லூக் 1:52 லூக் 1:53 லூக் 3:5 லூக் 18:14
5ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்: மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்: ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.ஏசா 6:3 ஏசா 11:9 ஏசா 35:2 ஏசா 60:1 சங் 72:19 சங் 96:6 சங் 102:16 ஆபகூ 2:14 லூக் 2:10-14 யோவா 1:14 யோவா 12:41 2கொரி 3:18 2கொரி 4:6 எபிரெ 1:3 வெளிப் 21:23
6“உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்: “எதை நான் உரக்கக் கூற வேண்டும்?” என்றேன். “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்: அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே!ஏசா 40:3 ஏசா 12:6 ஏசா 58:1 ஏசா 61:1 ஏசா 61:2 எரே 2:2 எரே 31:6 ஓசி 5:8
7ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்துபோம்: பூ வதங்கிவிழும்: உண்மையில் மானிடர் புல்லே ஆவர்!
8புல் உலர்ந்துபோம்: பூ வதங்கி விழும்: நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.ஏசா 46:10 ஏசா 46:11 ஏசா 55:10 ஏசா 55:11 சங் 119:89-91 சகரி 1:6 மத் 5:18 மத் 24:35 மாற் 13:31 யோவா 10:35 யோவா 12:34 ரோம 3:1-3 1பேது 1:25
9சீயோனே! நற்செசய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு!ஏசா 41:27 ஏசா 52:7 எஸ்றா 1:1 எஸ்றா 1:2 லூக் 24:47 ரோம 10:18
10இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்: அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்: அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன.ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 59:15-21 ஏசா 60:1-22 சகரி 2:8-11 மல்கி 3:1 யோவா 12:13 யோவா 12:15
11ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.”ஏசா 49:9 ஏசா 49:10 ஏசா 63:11 ஆதி 49:24 சங் 23:1-6 சங் 78:71 சங் 78:72 சங் 80:1 எசே 34:12-14 எசே 34:23 எசே 34:31 எசே 37:24 மீகா 5:4 யோவா 10:11-16 எபிரெ 13:20 1பேது 2:25 1பேது 5:4 வெளிப் 7:17
12கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால் கணக்கிட்டவர் யார்? வானத்தைச் சாண் அளவால் கணித்திட்டவர் யார்? மண்ணுலகின் புழுதியை மரக்காலால் அளந்தவர் யார்? மலைகளை நிறைகோலாலும் குன்றுகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?ஏசா 48:13 யோபு 11:7-9 யோபு 38:4-11 சங் 102:25 சங் 102:26 சங் 104:2 சங் 104:3 நீதி 8:26-28 நீதி 30:4 எபிரெ 1:10-12 வெளிப் 20:11
13ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து கற்றுத்தந்தவர் யார்?யோபு 21:22 யோபு 36:22 யோபு 36:23 லூக் 10:22 யோவா 1:13 ரோம 11:34 1கொரி 2:16 எபே 1:11
14யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்குப் பயிற்சி அளித்து, நீதிநெறியை உணர்த்தியர் யார்? அவருக்கு அறிவு புகட்டி, விவேக நெறியைக் காட்டியவர் யார்?1கொரி 12:4-6 கொலோ 2:3 யாக் 1:17
15இதோ, வேற்றினத்தார், வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும், தராசில் ஒட்டிய தூசாகவும் அவரால் கருதப்படுகின்றனர். இதோ, தீவுகளை ஓர் அணுவென அவர் தூக்குகின்றார்.ஏசா 40:22 யோபு 34:14 யோபு 34:15 எரே 10:10
16எரிப்பதற்கு லெபனோன் போதாது: எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது.சங் 40:6 சங் 50:10-12 மீகா 6:6 மீகா 6:7 எபிரெ 10:5-10
17மக்களினங்கள் யாவும் இல்லாமையாக, ஒன்றுமில்லாமையாக, வெறுமையாக அவரால் கருதப்படுகின்றன.யோபு 25:6 சங் 62:9 தானி 4:34 தானி 4:35 2கொரி 12:11
18இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு நிகராகக் கொள்வீர்கள்?ஏசா 40:25 ஏசா 46:5 ஏசா 46:9 யாத் 8:10 யாத் 9:14 யாத் 15:11 யாத் 20:4 உபா 33:26 1சாமு 2:2 யோபு 40:9 சங் 86:8-10 சங் 89:6 சங் 89:8 சங் 113:5 எரே 10:6 எரே 10:16 மீகா 7:18 அப் 17:29 கொலோ 1:15 எபிரெ 1:3
19சிலை வடிவத்தையா? அதைச் சிற்பி வார்க்கிறான்: பொற்கொல்லன் அதைப் பொன்னால் வேய்கிறான்: வெள்ளிச் சங்கிலிகளை அதற்கென அமைக்கிறான்.ஏசா 37:18 ஏசா 37:19 ஏசா 41:6 ஏசா 41:7 ஏசா 44:10-12 ஏசா 46:6 ஏசா 46:7 யாத் 32:2-4 நியா 17:4 சங் 115:4-8 சங் 135:15 சங் 135:18 எரே 10:3-5 எரே 10:9-5 ஓசி 8:6 ஆபகூ 2:18 ஆபகூ 2:19
20இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற இயலா வறியவயன் உளுத்துப்போகா மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்: அசைக்க முடியாச் சிலையொன்றை நிறுவ அவன் கைவினைஞனைத் தேடுகிறான்.ஏசா 2:8 ஏசா 2:9 ஏசா 44:13-19 எரே 10:3 எரே 10:4 தானி 5:23
21உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்படவில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா? மண்ணுலகின் அடித்தளங்கள் இடப்பட்டதுபற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?ஏசா 27:11 ஏசா 44:20 ஏசா 46:8 சங் 19:1-5 சங் 115:8 எரே 10:8-12 அப் 14:17 ரோம 1:19-21 ரோம 1:28-21 ரோம 3:1 ரோம 3:2
22உலகின் விதானத்தின் மீது வீற்றிருப்பவர் அவரே: மண்ணில் வாழ்வோர் வெட்டுக்கிளி போல்வர்: வான் வெளியைத் திரைச் சீலையென விரித்துக் குடியிருக்கும் கூடாரம்போல் அதை அமைப்பவரும் அவரே.ஏசா 19:1 ஏசா 66:1 சங் 2:4 சங் 29:10 சங் 68:33
23ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே: மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.ஏசா 19:13 ஏசா 19:14 ஏசா 23:9 ஏசா 24:21 ஏசா 24:22 யோபு 12:21 யோபு 34:19 யோபு 34:20 சங் 76:12 சங் 107:40 எரே 25:18-27 லூக் 1:51 லூக் 1:52 வெளிப் 19:18-20
24அவர்கள் நடப்படுகிறார்கள்: விதைக்கப்படுகிறார்கள்: ஆனால் அவர்களின் தண்டு நிலத்தில் வேர்விடுவதற்குள், அவர்கள்மேல் அவர் ஊத, அவர்கள் வாடிவதங்குகின்றனர். சூறைக்காற்று அவர்களைத் துரும்பென அடித்துச் செல்கிறது.ஏசா 14:21 ஏசா 14:22 ஏசா 17:11 1இரா 21:21 1இரா 21:22 2இரா 10:11 யோபு 15:30-33 யோபு 18:16-19 எரே 22:30 நாகூ 1:14
25“யாருக்கு என்னை ஒப்பிடுடவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?” என்கிறார் தூயவர்.ஏசா 40:18 உபா 4:15-18 உபா 4:33-18 உபா 5:8
26உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்: அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.ஏசா 51:6 உபா 4:19 யோபு 31:26-28 சங் 8:3 சங் 8:4 சங் 19:1
27“என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது: என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ செல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?
28உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள கடவுள்: அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்: அவர் சோர்ந்து போகார்: களைப்படையார்: அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.எரே 4:22 மாற் 8:17 மாற் 8:18 மாற் 9:19 மாற் 16:14 லூக் 24:25 யோவா 14:9 1கொரி 6:3-5 1கொரி 6:9-5 1கொரி 6:16 1கொரி 6:19
29அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்: வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.ஏசா 41:10 ஆதி 49:24 உபா 33:25 சங் 29:11 சகரி 10:12 2கொரி 12:9 2கொரி 12:10 பிலிப் 4:13 கொலோ 1:11 எபிரெ 11:34
30இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்: வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.ஏசா 9:17 ஏசா 13:18 சங் 33:16 சங் 34:10 சங் 39:5 பிரச 9:11 ஆமோ 2:14
31ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார்.ஏசா 8:17 ஏசா 25:9 ஏசா 30:18 சங் 25:3 சங் 25:5 சங் 25:21 சங் 27:14 சங் 37:34 சங் 40:1 சங் 84:7 சங் 92:1 சங் 92:13 சங் 123:2 புலம் 3:25 புலம் 3:26 ரோம 8:25 1தெச 1:10
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.