இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 39

                   
புத்தகங்களைக் காட்டு
1அக்காலத்தில், பாபிலோன் மன்னன் பலாதானின் மகன் மெரோதாக்கு பலாதான், எசேக்கியா நோய்வாய்ப்பட்டதையும் அவர் குணமடைந்ததையும் கேள்வியுற்று அவரிடம் மடலையும் அன்பளிப்பையும் அனுப்பி வைத்தான்.2இரா 20:12-19
2இதுபற்றி மகிழ்ந்த எசேக்கியா தூதர்க்குத் தம் கருவூல அறை, நறுமணப் பொருள்கள், பரிமளத்தைலம், பொன், வெள்ளி ஆகியவற்றையும் தம் படைக்கலன் இருந்த அறை முழுவதையும், தம் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்தையும் காண்பித்தார். எசேக்கியா தம் அரண்மனையிலோ தம் ஆட்சி எல்லைக்குள்ளோ அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் இல்லை.2நாளா 32:25 2நாளா 32:31 யோபு 31:25 சங் 146:3 சங் 146:4 நீதி 4:23 எரே 17:9
3அப்போது, எசாயா இறைவாக்கினர் எசேக்கியா அரசரிடம் வந்து, “அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து உம்மிடம் வந்தார்கள்?” என்று வினவ, “அவர்கள் தொலை நாடான பாபிலோனிலிருந்து என்னிடம் வந்தார்கள்” என்றார்.ஏசா 38:1 ஏசா 38:5 2சாமு 12:1 2இரா 20:14 2இரா 20:15 2நாளா 16:7 2நாளா 19:2 2நாளா 25:15 எரே 22:1 எரே 22:2
4“உம் அரண்மனையில் என்ன பார்த்தார்கள்?” என்று அவர் வினவ, “என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தார்கள், நான் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் என் சேமிப்புக் கிடங்கில் இல்லை” என்றார் எசேக்கியா.யோசு 7:19 யோபு 31:33 நீதி 23:5 நீதி 28:13 1யோவா 1:9
5அப்போது எசாயா எசேக்கியாவிடம், “படைகளின் ஆண்டவரின் வாக்கைக்”கேளும்:1சாமு 13:13 1சாமு 13:14 1சாமு 15:16
6இதோ, நாள்கள் வருகின்றன, அப்போது உம் அரண்மனையில் இருப்பவையும் இந்நாள்வரை உம் மூதாதையர் சேமித்து வைத்திருப்பவையும் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும்: எதுவும் விடப்படாது, என்கிறார் ஆண்டவர்.2இரா 20:17-19 2இரா 24:13 2இரா 25:13-15 2நாளா 36:10 2நாளா 36:18 எரே 20:5 எரே 27:21 எரே 27:22 எரே 52:17-19 தானி 1:2
7உமக்குப் பிறக்கும் புதல்வர் சிலர் கைதுசெய்யப்படுவர்: பாபிலோன் மன்னர் அரண்மனையில் அவர்கள் அண்ணகராய் இருப்பர்” என்றார்.2இரா 24:12 2இரா 25:6 2இரா 25:7 2நாளா 33:11 2நாளா 36:10 2நாளா 36:20 எரே 39:7 எசே 17:12-20
8தம் ஆட்சிக்காலத்தில் அமைதியும் பாதுகாப்பும் இருக்கும் என்றுணர்ந்த எசேக்கியா எசாயாவை நோக்கி, “நீர்கூறிய ஆண்டவரின் வாக்கு நல்லதே” என்றார்.லேவி 10:3 1சாமு 3:18 2சாமு 15:26 யோபு 1:21 சங் 39:9 புலம் 3:22 புலம் 3:39 1பேது 5:6
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.