ஏசாயா 42:16 - WCV
பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில் நடத்திச் செல்வேன்: அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்: அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்: கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்: இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன: நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.