| 1 | ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்துகொள்வார்: அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்டவரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள். | ஏசா 40:1 ஏசா 40:2 ஏசா 44:21 ஏசா 44:22 ஏசா 54:7 ஏசா 54:8 லேவி 26:40-45 உபா 4:29-31 நெகே 1:8 நெகே 1:9 சங் 98:3 சங் 102:13 சங் 136:10-24 சங் 143:12 எரே 50:4-6 எரே 50:17-20 எரே 50:33-20 எரே 51:4-6 எரே 51:34-37 லூக் 1:54 லூக் 1:72-74 |
| 2 | மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்: தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்: அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள். | ஏசா 18:7 ஏசா 60:9-12 ஏசா 61:5 எஸ்றா 2:65 ரோம 15:27 2கொரி 8:4 2கொரி 8:5 கலா 5:13 |
| 3 | ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில், | ஏசா 12:1 ஏசா 32:18 உபா 28:48 உபா 28:65-68 எஸ்றா 9:8 எஸ்றா 9:9 எரே 30:10 எரே 46:27 எரே 46:28 எரே 50:34 எசே 28:24 சகரி 8:2 சகரி 8:8 வெளிப் 18:20 வெளிப் 19:1-3 |
| 4 | பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு: “ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே! | எரே 24:9 எசே 5:15 ஆபகூ 2:6 |
| 5 | தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார். | ஏசா 14:29 ஏசா 9:4 ஏசா 10:5 சங் 125:3 எரே 48:15-17 |
| 6 | அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்: பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள். | ஏசா 33:1 ஏசா 47:6 2நாளா 36:17 எரே 25:9 தானி 7:19-21 யாக் 2:13 |
| 7 | மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது: மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது. | ஏசா 49:13 சங் 96:11-13 சங் 98:7-9 சங் 126:1-3 நீதி 11:10 எரே 51:48 வெளிப் 18:20 வெளிப் 19:1-6 |
| 8 | தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும் உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன: 'நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல் எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை' எனப் பாடுகின்றன. | ஏசா 55:12 ஏசா 55:13 எசே 31:16 சகரி 11:2 |
| 9 | நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது: உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது.” | நீதி 15:24 |
| 10 | அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, “நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே! | சங் 49:6-14 சங் 49:20-14 சங் 82:6 சங் 82:7 பிரச 2:16 லூக் 16:20-23 |
| 11 | உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன: புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்! பூச்சிகள் உன் போர்வையாகும்! | ஏசா 21:4 ஏசா 21:5 ஏசா 22:2 யோபு 21:11-15 எசே 26:13 எசே 32:19 எசே 32:20 தானி 5:1-4 தானி 5:25-30 ஆமோ 6:3-7 வெளிப் 18:11-19 |
| 12 | வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! | ஏசா 13:10 ஏசா 34:4 எசே 28:13-17 லூக் 10:18 2பேது 2:4 வெளிப் 12:7-10 |
| 13 | 'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்: இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்: வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். | ஏசா 47:7-10 எசே 27:3 எசே 28:2 எசே 29:3 தானி 4:30 தானி 4:31 செப் 2:15 வெளிப் 18:7 வெளிப் 18:8 |
| 14 | மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! | ஏசா 37:23 ஏசா 37:24 |
| 15 | ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்: படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே! | ஏசா 14:3-11 எசே 28:8 எசே 28:9 மத் 11:23 அப் 12:22 அப் 12:23 வெளிப் 19:20 |
| 16 | உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, 'மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும், | சங் 58:10 சங் 58:11 சங் 64:9 |
| 17 | பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?' என்பர். | ஏசா 13:19-22 ஏசா 64:10 எசே 6:14 யோவே 2:3 செப் 2:13 செப் 2:14 |
| 18 | மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில் மாட்சியுடன் படுத்திருக்கின்றனர். | ஏசா 22:16 2நாளா 24:16 2நாளா 24:25 பிரச 6:3 எசே 32:18-32 |
| 19 | நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்: வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய். | 1இரா 21:19 1இரா 21:24 2இரா 9:25 2இரா 9:34-36 எரே 8:1 எரே 8:2 எரே 16:6 எரே 22:19 |
| 20 | கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்: ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்: உன் மக்களைக் கொன்று போட்டாய்: தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும். | ஏசா 13:15-19 யோபு 18:16 யோபு 18:19 சங் 21:10 சங் 37:28 சங் 109:13 சங் 137:8 சங் 137:9 |
| 21 | மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்: நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது: பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது.” | யாத் 20:5 லேவி 26:39 மத் 23:35 |
| 22 | “அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர், “பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன்,” என்கிறார் ஆண்டவர். | ஏசா 13:5 ஏசா 21:9 ஏசா 43:14 ஏசா 47:9-14 எரே 50:26 எரே 50:27 எரே 50:29-35 எரே 51:3 எரே 51:4 எரே 51:56 எரே 51:57 |
| 23 | “அந்நாட்டை முள்ளம்பன்றிகளின் இடமாக்குவேன்: சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையாக்குவேன்: அழிவு என்னும் துடைப்பத்தால் முற்றிலும் துடைத்துவிடுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர். | ஏசா 13:21 ஏசா 13:22 ஏசா 34:11-15 எரே 50:39 எரே 50:40 எரே 51:42 எரே 51:43 செப் 2:14 வெளிப் 14:8 வெளிப் 18:2 வெளிப் 18:21-23 |
| 24 | படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்: “நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்: நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும். | யாத் 17:16 சங் 110:4 எரே 44:26 ஆமோ 8:7 எபிரெ 4:3 எபிரெ 6:16-18 |
| 25 | என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்: என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்: அப்பொழுது அவனது நுகத்தடி அவர்களைவிட்டு அகலும்: அவன் வைத்த சுமை அவர்கள் தோளிலிருந்து இறங்கும். | ஏசா 9:4 ஏசா 10:16-19 ஏசா 10:32-34 ஏசா 17:12-14 ஏசா 30:30-33 ஏசா 31:8 ஏசா 31:9 ஏசா 37:36-38 எசே 39:4 |
| 26 | மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே: பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே. | ஏசா 5:25 செப் 3:6-8 |
| 27 | படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைக்க வல்லவன் எவன்? அவர் தம் கையை ஓங்கியிருக்க அதை மடக்கக்கூடியவன் எவன்?” | ஏசா 23:9 ஏசா 43:13 ஏசா 46:11 யோபு 40:8 எரே 4:28 எரே 51:59 ரோம 8:28 ரோம 8:31 |
| 28 | ஆகாசு அரசன் இறந்த ஆண்டில் இந்தத் திருவாக்கு அருளப்பட்டது. | ஏசா 6:1 2இரா 16:20 2நாளா 28:27 |
| 29 | பெலிஸ்திய நாட்டின் அனைத்து மக்களே, உங்களை அடித்த கோல் முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்: ஏனெனில் பாம்பின் வேரினின்று கட்டுவிரியன் புறப்பட்டு வரும்: அதன் கனியாகப் பறவைநாகம் வெளிப்படும். | நீதி 24:17 எசே 26:2 எசே 35:15 ஓசி 9:1 ஒபதி 1:12 மீகா 7:8 செப் 3:11 |
| 30 | ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்: வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்: உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன், உன்னில் எஞ்சியிருப்போரை நான் கொன்றொழிப்பேன். | யோபு 18:13 |
| 31 | வாயிலே, வீறிட்டு அழு: நகரே, கதறியழு: எல்லாப் பெலிஸ்திய மக்களே: மனம் பதறுங்கள், ஏனெனில் வடபுறத்திலிருந்து புகையெனப் படை வருகின்றது. அதன் போர்வீரருள் கோழை எவனும் இல்லை. | ஏசா 13:6 ஏசா 16:7 |
| 32 | அந்த நாட்டுத் தூதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்? “சீயோனுக்கு அடித்தளமிட்டவர் ஆண்டவர்: அவர்தம் மக்களுள் துயருறுவோர் அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே.” | ஏசா 39:1 2சாமு 8:10 2இரா 20:12-19 |