7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்: மலைகளே! ஒன்றுகூடுங்கள்:
9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்: ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்: பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்: மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.