15
“மோவாபையும் அதன் நகர்களையும் அழிப்பவன் வந்துவிட்டான்: அதன் சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்திற்குப் போய் விட்டார்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர்.
16
மோவாபின் அழிவு அண்மையில் உள்ளது: தீங்கு அதை நோக்கி விரைந்து வருகிறது.
17
அதைச் சுற்றியிருப்போரே, நீங்கள் அனைவரும் அதற்காகத் துக்கம் கொண்டாடுங்கள். அதன் புகழை அறிந்திருப்போரே, நீங்கள் அனைவரும் “வலிமைமிக்க செய்கோல் முறிந்தது எங்ஙனம்? மேன்மைமிக்க கோல் உடைந்தது எவ்வாறு?” என்று கேளுங்கள்.