1 | அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர் தனியளாய் அமர்ந்தனளே! நாடுகளில் மாண்புடையாள் விதவைபோல் ஆனாளே! மாநிலங்களின் இளவரசி அடிமைப்பெண் ஆயினளே! | புலம் 2:1 புலம் 4:1 ஏசா 14:12 எரே 50:23 செப் 2:15 வெளிப் 18:16 வெளிப் 18:17 |
2 | ஆறாத் துயருற்று இரவில் அவள் அழுகின்றாள்: அவளின் கன்னங்களில் கண்ணீர் வடிகின்றது: அவளின் காதலரில் தேற்றுவார் எவரும் இல்லை: அவளின் நண்பர் அனைவரும் அவளுக்குத் துரோகம் செய்து பகைவர் ஆயினர். | புலம் 1:16 புலம் 2:11 புலம் 2:18 புலம் 2:19 யோபு 7:3 சங் 6:6 சங் 77:2-6 எரே 9:1 எரே 9:17-19 எரே 13:17 |
3 | இன்னலுற்ற அடிமையான யூதா நாடுகடத்தப்பட்டாள்! வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும் அவள் அமைதி பெறவில்லை! துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே அவளை வளைத்து பிடித்தனர்! | 2இரா 24:14 2இரா 24:15 2இரா 25:11 2இரா 25:21 2நாளா 36:20 2நாளா 36:21 எரே 39:9 எரே 52:15 எரே 52:27-30 |
4 | விழாக்களுக்குச் செல்பவர் யாருமில்லை: சீயோனுக்குச் செல்லும் வழிகள் புலம்புகின்றன: அவள் நுழைவாயில்கள் பாழடைந்துள்ளன: அவள் குருக்கள் பெருமூச்சு விடுகின்றனர்: அவளின் கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர்: அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று. | புலம் 2:6 புலம் 2:7 புலம் 5:13 ஏசா 24:4-6 எரே 14:2 மீகா 3:12 |
5 | உயர் தலைவர் ஆயினர் அவளின் எதிரிகள்! வளமுடன் வாழ்கின்றனர் அவளின் பகைவர்! அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டவர் அவளைத் துன்பத்திற்கு உட்படுத்தினார்! அவள் குழந்தைகளை எதிரிகள் கைதியாக்கிக்கொண்டு போயினர். | புலம் 2:17 புலம் 3:46 லேவி 26:17 உபா 28:43 உபா 28:44 சங் 80:6 சங் 89:42 ஏசா 63:18 எரே 12:7 மீகா 7:8-10 |
6 | அனைத்து மேன்மையும் மகள் சீயோனை விட்டு அகன்றது: அவள் தலைவர்கள் பசும்புல் காணா மான்கள்போல் ஆயினர். துரத்தி வருவோர் முன் அவர்கள் ஆற்றல் அற்றவர் ஆயினர். | 2இரா 19:21 சங் 48:2 சங் 48:3 ஏசா 1:21 ஏசா 4:5 ஏசா 12:6 செப் 3:14-17 |
7 | எருசலேம், தன் துன்ப நாள்களிலும், அகதியாய் வாழ்ந்தபோதும், முன்னாள்களில் தனக்கிருந்த நலன்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தாள்: அவளின் மக்கள் எதிரிகளின் கைகளில் சிக்கினார்கள்: அவளுக்கு உதவி செய்வார் யாருமில்லை: அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள் அவளை ஏளனம் செய்தனர். | யோபு 29:2-25 யோபு 30:1 சங் 42:4 சங் 77:3 சங் 77:5-9 ஓசி 2:7 லூக் 15:17 லூக் 16:25 |
8 | ஏராளமாய்ப் பாவம் செய்தாள் எருசலேம்: அதனால் அவள் கறைப்பட்டவள் ஆனாள்: அவளை முன்பு மதித்த அனைவரும் அவமதித்தனர்: அவளுடைய திறந்த மேனியைக் கண்டனர்: அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னோக்கித் திரும்பினாள். | புலம் 1:5 புலம் 1:20 1இரா 8:46 1இரா 8:47 1இரா 9:7 1இரா 9:9 ஏசா 59:2-13 எரே 6:28 எசே 14:13-21 எசே 22:2-15 |
9 | ஐயகோ! அவள் தீட்டு அவள் ஆடையில் தெரிகின்றதே! அவள் தனக்கு வரவிருப்பதை நினைவில் கொள்ளவில்லை! அளவது வீழ்ச்சி அதிர்ச்சியைத் தருகின்றது! அவளைத் தேற்றுவார் யாரும் இல்லை! “ஆண்டவரே என் துன்பத்தைப் பாரும்! பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!” | புலம் 1:17 எரே 2:34 எரே 13:27 எசே 24:12 எசே 24:13 |
10 | ஒப்பற்ற அவளது விருப்பமான பொருளனைத்தின்மீதும் கைவைத்தான் பகைவன்! வேற்றினத்தார் உம் சபைக்கு வருவதைத் தடை செய்தீர்! அன்னார் அவளது திருத்தலத்தில் நுழைவதை அவள் பார்த்து நின்றாள்! | புலம் 1:7 ஏசா 5:13 ஏசா 5:14 எரே 15:13 எரே 20:5 எரே 52:17-20 |
11 | உணவைத் தேடி அவளின் மக்கள் அனைவரும் ஓலமிடுகின்றனர்! உயிரைக் காத்திடத் தம் ஒப்பற்ற பொருள்களை உணவுக்காகத் தந்தனர்! “ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்! நான் எத்தகு இழிநிலைக்கு உள்ளானேன் என்று பாரும்!” | புலம் 1:19 புலம் 2:12 புலம் 4:4-10 உபா 28:52-57 2இரா 6:25 எரே 19:9 எரே 38:9 எரே 52:6 எசே 4:15-17 எசே 5:16 எசே 5:17 |
12 | இவ்வழியாய்க் கடந்து செல்வோரே! உங்களுக்குக் கவலை இல்லையா? அனைவரும் உற்றுப் பாருங்கள்! எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ? ஆண்டவர் தம் வெஞ்சின நாளில் என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினர். | புலம் 2:13 புலம் 4:6-11 தானி 9:12 மத் 24:21 லூக் 21:22 லூக் 21:23 லூக் 23:28-31 |
13 | மேலிருந்து அவர் நெருப்பினை என் எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்! என் கால்களுக்கு வலை விரித்தார்! அவர் என்னைப் பின்னடையச் செய்தார்! அவர் என்னைப் பாழாக்கினார்! நாள் முழுவதும் நான் சோர்ந்து போகிறேன். | புலம் 2:3 புலம் 2:4 உபா 32:21-25 யோபு 30:30 சங் 22:14 சங் 31:10 சங் 102:3-5 நாகூ 1:6 ஆபகூ 3:16 2தெச 1:8 எபிரெ 12:29 |
14 | என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது: அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன: அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்: நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார். | உபா 28:48 நீதி 5:22 ஏசா 14:25 ஏசா 47:6 எரே 27:8 எரே 27:12 எரே 28:14 |
15 | என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்: என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்: மகள் யூதாவாகிய கன்னியை, ஆலையில் திராட்சைப் பழத்தைப் பிழிவதுபோல, என் தலைவர் கசக்கிப் பிழிந்தார். | 2இரா 9:33 2இரா 24:14-16 2இரா 25:4-7 சங் 119:118 ஏசா 5:5 ஏசா 28:18 எரே 50:26 தானி 3:13 மீகா 7:10 மல்கி 4:3 லூக் 21:24 எபிரெ 10:29 |
16 | இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்: என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன: என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்: பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர். | புலம் 1:2 புலம் 1:9 புலம் 2:11 புலம் 2:18 புலம் 3:48 புலம் 3:49 சங் 119:136 எரே 9:1 எரே 9:10 எரே 13:17 எரே 14:17 லூக் 19:41-44 ரோம 9:1-3 |
17 | சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்: அவளைத் தேற்றுவார் யாருமில்லை: சூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்: எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று. | 1இரா 8:22 1இரா 8:38 ஏசா 1:15 எரே 4:31 |
18 | ஆண்டவரோ நீதியுள்ளவர்: நான் அவரது வாக்குக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன்: அனைத்து மக்களினங்களே, செவிகொடுங்கள்: என் துயரத்தைப் பாருங்கள்: என் கன்னிப்பெண்களும் இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர். | யாத் 9:27 உபா 32:4 நியா 1:7 எஸ்றா 9:13 நெகே 9:33 சங் 119:75 சங் 145:17 எரே 12:1 தானி 9:7 தானி 9:14 செப் 3:5 ரோம 2:5 ரோம 3:19 வெளிப் 15:3 வெளிப் 15:4 வெளிப் 16:5-7 |
19 | என் காதலர்களை அழைத்தேன்: அவர்களோ என்னை ஏமாற்றினர்: என் குருக்களும் பெரியோரும் தங்கள் உயிரைக் காத்திட உணவு தேடுகையில், நகரில் பசியால் மாண்டனர். | புலம் 1:2 புலம் 4:17 யோபு 19:13-19 எரே 2:28 எரே 30:14 எரே 37:7-9 |
20 | ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும்! துயரில் நான் மூழ்கியுள்ளேன்! நான் பெருங் கலகம் செய்துள்ளேன்! என் குலை நடுங்குகின்றது! என் இதயம் வெடிக்கின்றது! வெளியே வாளுக்கு இரையாகினர் என் பிள்ளைகள்! வீட்டினுள்ளும் சாவு மயம்! | புலம் 1:9 புலம் 1:11 ஏசா 38:14 |
21 | நான் விடும் பெருமூச்சை அவர்கள் கேட்டார்கள்: என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை: என் எதிரிகள் அனைவரும் எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக் கேள்வியுற்றனர்: நீரே அதைச் செய்தீர் என மகிழ்ச்சி அடைகின்றனர்! நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்! அவர்களும் என்னைப்போல் ஆகட்டும்! | புலம் 1:2 புலம் 1:8 புலம் 1:11 புலம் 1:12 புலம் 1:16 புலம் 1:22 |
22 | அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும் உம் திருமுன் வருவதாக! என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு, நீர் என்னைத் தண்டித்தது போல், அவர்களையும் தண்டியும்! விம்மல்கள் மிகப் பல! என் இதயம் சோர்ந்துபோயிற்று! | நெகே 4:4 நெகே 4:5 சங் 109:14 சங் 109:15 சங் 137:7-9 எரே 10:25 எரே 18:23 எரே 51:35 லூக் 23:31 வெளிப் 6:10 |