8
என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே: ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.
9
நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்: ஆதலால், அவரது கடும் சினத்தை, அவர் எனக்காக வழக்காடி எனக்கு நீதி வழங்கும்வரை, தாங்கிக்கொள்வேன்: அவர் என்னை ஒளிக்குள் கொண்டு வருவார்: அவரது நீதியை நான் காண்பேன்.
10
அப்போது, என்னோடு பகைமைகொண்டவர்கள் அதைக் காண்பார்கள்: “உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?” என்று என்னிடம் கேட்டவள் வெட்கம் அடைவாள்: என் கண்கள் அவளைக் கண்டு களிகூரும். அப்பொழுது, தெருச் சேற்றைப்போல அவள் மிதிபடுவாள்.