| 1 | ஆண்டவர் என்னிடம் கூறியது: மோசேயும் சாமுவேலும் என்முன் வந்து நின்றாலும் என் உள்ளம் இந்த மக்கள்பால் திரும்பாது. என் முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டிவிடு. அவர்கள் அகன்று போகட்டும். | எரே 7:16 எரே 11:14 எரே 14:11 எசே 14:14 எசே 14:21 |
| 2 | 'நாங்கள் எங்கே போவோம்?' என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: சாவுக்குரியோர் வாளால் மாள்வர்: பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்: நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்.” | எரே 14:12 எரே 24:9 எரே 24:10 எரே 43:11 ஏசா 24:18 எசே 5:2 எசே 5:12 எசே 14:21 தானி 9:12 ஆமோ 5:19 சகரி 11:9 வெளிப் 6:3-8 |
| 3 | ஆண்டவர் கூறுவது: நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்: கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன். | எரே 7:33 லேவி 26:16 லேவி 26:22 லேவி 26:25 உபா 28:26 1இரா 21:23 1இரா 21:24 2இரா 9:35-37 ஏசா 18:6 ஏசா 56:9 ஏசா 56:10 எசே 14:21 வெளிப் 6:8 வெளிப் 19:17 வெளிப் 19:18 |
| 4 | அவர்களைக் கண்டு உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும். எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம். | எரே 9:16 எரே 24:9 எரே 29:18 எரே 34:17 லேவி 26:33 உபா 28:25 உபா 28:64 புலம் 1:8 எசே 23:46 |
| 5 | எருசலேமே! யாராவது உனக்கு இரக்கம் காட்டுவார்களா? திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா? | எரே 16:5 எரே 21:7 யோபு 19:21 சங் 69:20 ஏசா 51:19 புலம் 1:12-16 புலம் 2:15 புலம் 2:16 நாகூ 3:7 |
| 6 | ஆண்டவர் கூறுவது: “நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்: என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்: எனவே, உன்னை அழிப்பதற்கு என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்: இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன். | எரே 1:16 எரே 2:13 எரே 2:17 எரே 2:19 |
| 7 | நாட்டின் வாயில்களில் நான் அவர்களை முறத்தால் தூற்றிச் சிதறடித்தேன்: அவர்களைத் தனியாகத் தவிர்க்க விட்டேன்: என் மக்களை அழித்துவிட்டேன்: ஏனெனில் அவர்கள் தங்கள் தீயவழியிலிருந்து திரும்பவில்லை. | எரே 4:11 எரே 4:12 எரே 51:2 சங் 1:4 ஏசா 41:16 மத் 3:12 |
| 8 | கடற்கரை மணலைவிட அவர்களின் கைம்பெண்களின் எண்ணிக்கையை மிகுதியாக்கினேன்: இளைஞர்களின் அன்னையருக்கு எதிராகக் கொலைஞனைப் பட்டப்பகலில் கூட்டி வந்தேன்: திடீரென அவள் துயரும் திகிலும் அடையச் செய்தேன்: | ஏசா 3:25 ஏசா 3:26 ஏசா 4:1 |
| 9 | எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்: மூச்சுத் திணறினாள்: அவள் வாழ்வில் கதிரவன் மறைந்து விட்டான்: அவள் வெட்கி நாணமுற்றாள்: எஞ்சியிருப்போரை அவர்களுடைய எதிரிகளின்முன் வாளுக்கு இரையாக்குவேன்,” என்கிறார் ஆண்டவர். | 1சாமு 2:5 ஏசா 47:9 புலம் 1:1 புலம் 4:10 |
| 10 | நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை: கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் உன்னைச் சபிக்கிறார்கள். | எரே 20:14-18 யோபு 3:1-26 |
| 11 | ஆண்டவரே, நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால், எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில் நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால், அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும். | சங் 37:3-11 பிரச 8:12 |
| 12 | வடக்கிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்? | எரே 1:18 எரே 1:19 எரே 21:4 எரே 21:5 யோபு 40:9 ஏசா 45:9 ஆபகூ 1:5-10 |
| 13 | “நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன். | எரே 15:8 எரே 17:3 எரே 20:5 |
| 14 | முன்பின் தெரியாத ஒரு நாட்டில் எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்: ஏனெனில் என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது. அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்.” | எரே 15:4 எரே 14:18 எரே 16:13 எரே 17:4 எரே 52:27 லேவி 26:38 லேவி 26:39 உபா 28:25 உபா 28:36 உபா 28:64 ஆமோ 5:27 |
| 15 | ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்: நீர் என்னை அறிவீர்: என்னை நினைவுகூரும்: எனக்கு உதவியருளும்: என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டுப் பழிவாங்கும்: நீர் பொறுமையுள்ளவர்: என்னைத் தள்ளிவிடாதேயும்: உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்பதை நினைவில் கொள்ளும். | எரே 12:3 எரே 17:16 யோபு 10:7 சங் 7:3-5 சங் 17:3 யோவா 21:15-17 2கொரி 5:11 |
| 16 | நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்: அவற்றை உட்கொண்டேன்: உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன: என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று. | எசே 3:1-3 வெளிப் 10:9 |
| 17 | களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர். | சங் 1:1 சங் 26:4 சங் 26:5 2கொரி 6:17 |
| 18 | எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ! | எரே 14:19 சங் 6:3 சங் 13:1-3 புலம் 3:1-18 |
| 19 | எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்: பயனில் நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்: நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம். | எரே 15:10-18 எரே 20:9 யாத் 6:29 யாத் 6:30 யோனா 3:2 |
| 20 | நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்: அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்: ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்: ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். | எரே 1:18 எரே 1:19 எரே 6:27 எசே 3:9 அப் 4:8-13 அப் 4:29-31 அப் 5:29-32 |
| 21 | தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்: முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.” | ஆதி 48:16 சங் 27:2 சங் 37:40 ஏசா 49:24 ஏசா 49:25 ஏசா 54:17 மத் 6:13 ரோம 16:20 2கொரி 1:10 |