| 1 | எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: |
| 2 | “நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.” | எரே 13:1 எரே 19:1 எரே 19:2 ஏசா 20:2 எசே 4:1-5 ஆமோ 7:7 எபிரெ 1:1 |
| 3 | எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். | யோனா 1:3 யோவா 15:14 அப் 26:19 |
| 4 | குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார். | எரே 18:6 ஏசா 45:9 ரோம 9:20-23 |
| 5 | அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: |
| 6 | “இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள். | எரே 18:4 ஏசா 64:8 தானி 4:23 மத் 20:15 ரோம 11:34 |
| 7 | ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம். | எரே 1:10 எரே 12:14-17 எரே 25:9-14 எரே 45:4 ஆமோ 9:8 யோனா 3:4 |
| 8 | எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன். | எரே 7:3-7 எரே 36:3 நியா 10:15 நியா 10:16 1இரா 8:33 1இரா 8:34 2நாளா 12:6 ஏசா 1:16-19 எசே 18:21 எசே 33:11 எசே 33:13 யோனா 2:5-10 லூக் 13:3-5 |
| 9 | அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம். | எரே 1:10 எரே 11:17 எரே 30:18 எரே 31:4 எரே 31:28 எரே 31:38 எரே 32:41 பிரச 3:2 ஆமோ 9:11-15 |
| 10 | மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன். | எரே 7:23-28 சங் 125:5 எசே 18:24 எசே 33:18 எசே 45:20 செப் 1:6 |
| 11 | ஆகையால் இப்போது நீ யூதா நாட்டினரையும் எருசலேம் வாழ் மக்களையும் நோக்கிக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு எதிராய் வரப்போகும் தீமைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகிறேன்: ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய வழியிலிருந்து திரும்புங்கள்: உங்கள் வழிகளையும் செயல்களையும் திருத்திக்கொள்ளுங்கள்.” | ஆதி 11:3 ஆதி 11:4 ஆதி 11:7 2இரா 5:5 ஏசா 5:5 யாக் 4:13 யாக் 5:1 |
| 12 | அவர்களோ, “இதெல்லாம் சொல்லிப் பயனில்லை. எங்கள் திட்டப்படியே நாங்கள் நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இதயத்தின் பிடிவாதப்படியே செயல்படுவோம்” என்பார்கள். | எரே 2:25 2இரா 6:33 ஏசா 57:10 எசே 37:11 |
| 13 | எனவே ஆண்டவர் கூறுவது இதுவே: “இதுபோன்ற செயலைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? என்று நாடுகளிடையே கேட்டுப்பார். கன்னி இஸ்ரயேல் பெரும் கோரச் செயல் ஒன்று செய்துள்ளாள். | எரே 2:10-13 |
| 14 | லெபனோன் மலையின் உறைபனி அதன் பாறை உச்சிகளிலிருந்து அகல்வதுண்டோ? அதலிருந்து வழிந்தோடும் தண்ணீரால் நீரோடைகள் வற்றிப்போவதுண்டோ? | யோவா 6:68 |
| 15 | என் மக்களோ என்னை மறந்து விட்டார்கள்: இல்லாத ஒன்றிற்குத் தூபம் காட்டுகின்றார்கள்: தங்கள் வழிகளிலே தொன்மையான பாதைகளிலே தடுமாறுகின்றார்கள்: நெடுஞ்சாலையை விட்டுவிட்டு ஒதுக்கு வழிகளிலே நடக்கின்றார்கள். | எரே 2:13 எரே 2:19 எரே 2:32 எரே 3:21 எரே 13:25 எரே 17:13 |
| 16 | அவர்கள் நாடு கொடூரமாய்க் காட்சியளிக்கும்: காலமெல்லாம் ஏளனத்துக்கு உள்ளாகும்: அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலடைவான்: தலையை ஆட்டிக்கொண்டே செல்வான். | எரே 9:11 எரே 19:8 எரே 25:9 எரே 49:13 எரே 50:13 லேவி 26:33 லேவி 26:34 லேவி 26:43 உபா 29:23 ஏசா 6:11 எசே 6:14 எசே 12:19 எசே 33:28 எசே 33:29 |
| 17 | கீழைக் காற்றைப்போல் அவர்கள் எதிரிகளுக்குமுன் அவர்களைச் சிதறடிப்பேன்: அவர்களின் துன்பக் காலத்தில் என் முகத்தையல்ல, முதுகையே அவர்களுக்குக் காண்பிப்பேன்.” | எரே 13:24 உபா 28:25 உபா 28:64 யோபு 27:21 சங் 48:7 ஓசி 13:15 |
| 18 | அப்போது அவர்கள் “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்” என்றனர். | எரே 18:11 எரே 11:19 சங் 21:11 ஏசா 32:7 மீகா 2:1-3 |
| 19 | ஆண்டவரே, என்னைக் கவனியும்: என் எதிரிகள் சொல்வதைக் கேளும். | எரே 20:12 சங் 55:16 சங் 55:17 சங் 64:1-4 சங் 56:1-3 சங் 109:4 சங் 109:28 மீகா 7:8 லூக் 6:11 லூக் 6:12 |
| 20 | நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழிபறித்திருக்கின்றார்கள்: அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும். | 1சாமு 24:17-19 சங் 35:12 சங் 38:20 சங் 109:4 சங் 109:5 நீதி 17:13 யோவா 10:32 யோவா 15:25 |
| 21 | ஆகவே அவர்களுடைய பிள்ளைகள் பஞ்சத்தால் மடியட்டும்: அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்: அவர்தம் மனைவியர் விதவையராய்த் தனியராகட்டும்: கணவர்கள் கொல்லப்படட்டும்: இளைஞர்கள் போரில் வாளால் மடியட்டும். | எரே 11:20-23 எரே 12:3 எரே 20:1-6 எரே 20:11-6 எரே 20:12-6 சங் 109:9-20 2தீமோ 4:14 |
| 22 | திடீரெனக் கொள்ளைக் கூட்டத்தினர் அவர்களிடையே வரட்டும். அவர்கள் வீடுகளிலிருந்து அழுகுரல் கேட்கட்டும்: ஏனெனில் அவர்கள் என்னைப் பிடிக்கக் குழி பறித்தார்கள்: என் கால்களுக்குக் கண்ணி வைத்தார்கள். | எரே 4:19 எரே 4:20 எரே 4:31 எரே 6:26 எரே 9:20 எரே 9:21 எரே 25:34-36 எரே 47:2 எரே 47:3 எரே 48:3-5 ஏசா 10:30 ஏசா 22:1-4 செப் 1:10 செப் 1:11 செப் 1:16 |
| 23 | ஆண்டவரே! என்னைக் கொல்வதற்காக அவர்கள் செய்த சதித் திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர்: அவர்கள் குற்றத்தை மன்னியாதேயும்: அவர்கள் பாவத்தை உம் முன்னிலையிலிருந்து அகற்றிவிடாதேயும்: அவர்கள் உம்முன் வீழ்ச்சியுறட்டும்: உம் சினத்தின் நாளில் அவர்களின் செயல்களுக்கு ஏற்றபடி அவர்களை நடத்தும். | எரே 18:18 எரே 11:18-20 எரே 15:15 சங் 37:32 சங் 37:33 |