| 1 | விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது. | நீதி 15:30 நீதி 22:1 ஏசா 56:5 லூக் 10:20 எபிரெ 11:2 எபிரெ 11:39 |
| 2 | விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும் முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர். | ஆதி 48:1-22 ஆதி 49:2-33 ஆதி 50:15-17 யோபு 1:4 யோபு 1:5 ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 22:12-14 ஆமோ 6:3-6 மத் 5:4 மத் 14:6-12 1பேது 4:3 1பேது 4:4 |
| 3 | சிரிப்பைவிடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்: ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும். | சங் 119:67 சங் 119:71 சங் 126:5 சங் 126:6 எரே 31:8 எரே 31:9 எரே 31:15-20 எரே 50:4 எரே 50:5 தானி 9:3-19 தானி 10:2 தானி 10:3 தானி 10:19 சகரி 12:10-14 லூக் 6:21 லூக் 6:25 யோவா 16:20-22 2கொரி 7:9-11 யாக் 4:8-10 |
| 4 | ஞானமுள்ளவரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவே இருக்கும்: மூடரின் உள்ளத்திலோ சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும். | நெகே 2:2-5 ஏசா 53:3 ஏசா 53:4 மத் 8:14-16 மாற் 5:38-43 லூக் 7:12 லூக் 7:13 யோவா 11:31-35 |
| 5 | மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும் ஞானி இடித்துரைப்பதைக் கேட்பதே நன்று. | சங் 141:5 நீதி 9:8 நீதி 13:13 நீதி 15:31 நீதி 15:32 நீதி 17:10 நீதி 27:6 வெளிப் 3:19 |
| 6 | மூடரின் சிரிப்பு, பானையின்கீழ் எரியும் முட்செடி படபடவென்று வெடிப்பதைப் போன்றது: அதனால் பயன் ஒன்றுமில்லை. | பிரச 2:2 சங் 58:9 சங் 118:12 ஏசா 65:13-15 ஆமோ 8:10 லூக் 6:25 லூக் 16:25 2பேது 2:13-17 யூதா 1:12 யூதா 1:13 |
| 7 | இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்: கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும். | உபா 28:33 உபா 28:34 உபா 28:65 |
| 8 | ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது: உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப் பொறுமையோடு இருப்பதே மேல். | சங் 126:5 சங் 126:6 ஏசா 10:24 ஏசா 10:25 ஏசா 10:28-34 லூக் 16:25 யாக் 5:11 1பேது 1:13 |
| 9 | உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே: மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம். | 1சாமு 25:21 1சாமு 25:22 2சாமு 19:43 எஸ்தர் 3:5 எஸ்தர் 3:6 நீதி 14:17 நீதி 16:32 யோனா 4:9 எபே 4:26 எபே 4:27 யாக் 1:19 |
| 10 | “இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?” என்று கேட்காதே: இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல. | நியா 6:13 எரே 44:17-19 |
| 11 | மரபுரிமைச் சொத்தோடு ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்: இதுவே உலகில் வாழும் மக்களுக்கு நல்லது. | பிரச 9:15-18 1இரா 3:6-9 லூக் 16:8 லூக் 16:9 1தீமோ 6:17-19 |
| 12 | பணம் நிழல் தருவதுபோல் ஞானமும் நிழல் தரும்: ஞானம் உள்ளவருக்கு அதனால் வாழ்வு கிடைக்கும்: அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே. | யோபு 1:10 யோபு 22:21-25 நீதி 2:7 நீதி 2:11 நீதி 14:20 நீதி 18:10 நீதி 18:11 ஏசா 33:6 |
| 13 | கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார். அவர் கோணலாக்கினதை நேராக்க யாரால் இயலும்? | யோபு 37:14 சங் 8:3 சங் 107:43 ஏசா 5:12 |
| 14 | வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு: துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: “அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்”. | பிரச 3:4 உபா 28:47 சங் 30:11 சங் 30:12 சங் 40:3 மத் 9:13 யோவா 16:22 யோவா 16:23 யாக் 5:13 |
| 15 | என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார். | பிரச 2:23 பிரச 5:16 பிரச 5:17 பிரச 6:12 ஆதி 47:9 சங் 39:6 |
| 16 | நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்? | நீதி 25:16 மத் 6:1-7 மத் 9:14 மத் 15:2-9 மத் 23:5 மத் 23:23 மத் 23:24 மத் 23:29 லூக் 18:12 ரோம 10:2 பிலிப் 3:6 1தீமோ 4:3 |
| 17 | தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்? | எரே 2:33 எரே 2:34 எசே 8:17 எசே 16:20 யாக் 1:21 |
| 18 | ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர். | பிரச 11:6 நீதி 4:25-27 நீதி 8:20 லூக் 11:42 |
| 19 | ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும். | பிரச 9:15-18 2சாமு 20:16-22 நீதி 21:22 நீதி 24:5 கொலோ 1:9-11 |
| 20 | குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை. | 1இரா 8:46 2நாளா 6:36 யோபு 15:14-16 சங் 130:3 சங் 143:2 நீதி 20:9 ஏசா 53:6 ரோம 3:23 யாக் 3:2 1யோவா 1:8-10 |
| 21 | பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும். | 2சாமு 19:19 |
| 22 | நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும். | 1இரா 2:44 மத் 15:19 மத் 18:32-35 யோவா 8:7-9 யாக் 3:9 |
| 23 | இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன். | ஆதி 3:5 1இரா 3:11 1இரா 3:12 1இரா 11:1-8 ரோம 1:22 1கொரி 1:20 |
| 24 | ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது: மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்? | உபா 30:11-14 யோபு 11:7 யோபு 11:8 யோபு 28:12-23 யோபு 28:28-23 சங் 36:6 சங் 139:6 ஏசா 55:8 ஏசா 55:9 ரோம 11:33 1தீமோ 6:16 |
| 25 | நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்: ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும், மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன். | பிரச 1:13-17 பிரச 2:1-3 பிரச 2:12-3 பிரச 2:20-3 |
| 26 | சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்: உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான். | நியா 16:18-21 நீதி 2:18 நீதி 2:19 நீதி 5:3-5 நீதி 7:21-27 நீதி 9:18 நீதி 22:14 நீதி 23:27 நீதி 23:28 |
| 27 | “ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்” என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்: அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை. | பிரச 1:1 பிரச 1:2 பிரச 12:8-10 |
| 28 | ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை. | பிரச 7:23 பிரச 7:24 ஏசா 26:9 |
| 29 | நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே. | ஆதி 1:26 ஆதி 1:27 ஆதி 5:1 |