இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஓசியா 13

                   
புத்தகங்களைக் காட்டு
1எப்ராயிம் பேசியபோது ஏனையோர் நடுங்கினர்: இஸ்ரயேலில் அவன்மிக உயர்ந்திருந்தான்: ஆனால், பாகாலை வழிபட்ட குற்றத்திற்காய் மடிந்தான்.1சாமு 15:17 நீதி 18:12 ஏசா 66:2 லூக் 14:11
2இப்போதும், அவர்கள் பாவத்தின்மேல் பாவம் செய்கிறார்கள்: சிலைகளைத் தங்களுக்கென வார்த்துக் கொள்கிறார்கள்: அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை: அவை யாவும் தட்டானின் கைவேலைகளே: “இவற்றுக்குப் பலியிடுங்கள்” என்கிறார்கள் அவர்கள்: மனிதர் கன்றுக்குட்டிகளை முத்தமிடுகின்றார்கள்.எண் 32:14 2நாளா 28:13 2நாளா 33:23 ஏசா 1:5 ஏசா 30:1 ரோம 2:5 2தீமோ 3:13
3ஆதலால் அவர்கள் காலையில் காணும் மேகம்போலும், விரைவில் உலர்ந்து போகும் பனித்துளி போலும், சுழற்காற்றில் சிக்கிய களத்துத் துரும்பு போலும் பலகணி வழியாய் வெளிப்பட்ட புகைப்போலும் ஆவார்கள்.ஓசி 6:4
4எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: என்னைத் தவிர வேறு கடவுளை நீ அறியாய்: என்னையன்றி வேறு மீட்பரும் இல்லை.ஓசி 12:9 யாத் 20:2 சங் 81:9 சங் 81:10 ஏசா 43:3 ஏசா 43:10 ஏசா 44:6-8
5வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நானே:யாத் 2:25 சங் 1:6 சங் 31:7 சங் 142:3 நாகூ 1:7 1கொரி 8:3 கலா 4:9
6வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால் அவர்கள் மனநிறைவுற்றார்கள்: மன நிறைவடைந்ததும் செருக்குற்று என்னை மறந்து போனார்கள்.ஓசி 10:1 உபா 8:12-14 உபா 32:13-15 நெகே 9:25 நெகே 9:26 நெகே 9:35 எரே 2:31
7ஆதலால் நான் அவர்களுக்கு ஒரு சிங்கம் போலிருப்பேன்: வேங்கைப்போலப் பாயுமாறு வழியோரத்தில் மறைந்திருப்பேன்.ஓசி 5:14 ஏசா 42:13 எரே 5:6 புலம் 3:10 ஆமோ 1:2 ஆமோ 3:4 ஆமோ 3:8
8குட்டியைப் பறிகொடுத்த பெண் கரடிபோல் அவர்கள்மேல் பாய்ந்து அவர்கள் நெஞ்சைக் கிழிப்பேன்: சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்பேன்: காட்டுவிலங்கு அவர்களைக் கிழித்தெறியும்.2சாமு 17:8 நீதி 17:12 ஆமோ 9:1-3
9இஸ்ரயேலே, உன்னை நான் அழிக்கப் போகின்றேன்: உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?ஓசி 14:1 2இரா 17:7-17 நீதி 6:32 நீதி 8:36 ஏசா 3:9 ஏசா 3:11 எரே 2:17 எரே 2:19 எரே 4:18 எரே 5:25 மல்கி 1:9
10“எனக்கு அரசன் வேண்டும், தலைவர்கள் வேண்டும்” என்று என்னிடம் கேட்டாய். உன்னை மீட்கும் அரசன் எங்கே? உன் நகர் அனைத்திலும் உள்ள தலைவர்கள் எங்கே?சங் 10:16 சங் 44:4 சங் 47:6 சங் 47:7 சங் 74:12 சங் 89:18 சங் 149:2 ஏசா 33:22 ஏசா 43:15 எரே 8:19 சகரி 14:9 யோவா 1:49
11வேண்டா வெறுப்போடு உனக்கு நான் ஓர் அரசனைத் தந்தேன்: என் சினத்தில் நான் அவனை அகற்றிவிட்டேன்.ஓசி 10:3 1சாமு 8:7-9 1சாமு 10:19 1சாமு 12:13 1சாமு 15:22 1சாமு 15:23 1சாமு 16:1 1சாமு 31:1-7 1இரா 12:15 1இரா 12:16 1இரா 12:26-32 1இரா 14:7-16 2இரா 17:1-4 நீதி 28:2
12எப்ராயிமின் தீச்செயல் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது: அவனுடைய பாவம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.உபா 32:34 உபா 32:35 யோபு 14:17 யோபு 21:19 ரோம 2:5
13அவனுக்கான பேறுகால வேதனை வந்தாயிற்று: ஆனால், அவன் ஓர் அறிவற்ற பிள்ளை: பிறக்கும் நேரம் வந்து விட்டது: ஆனால், கருப்பையை விட்டு வெளியேற மறுக்கிறான்.சங் 48:6 ஏசா 13:8 ஏசா 21:3 எரே 4:31 எரே 13:21 எரே 22:23 எரே 30:6 எரே 49:24 மீகா 4:9 மீகா 4:10 1தெச 5:3
14பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்பேனோ? சாவிலிருந்து அவர்களை மீட்பேனோ? சாவே! உன் கொள்ளை நோய்கள் எங்கே? பாதாளமே! உன் அழிவு வேலை எங்கே? தற்போது இரக்கம் என்னிடம் இல்லை.ஓசி 6:2 யோபு 19:25-27 யோபு 33:24 சங் 16:10 சங் 30:3 சங் 49:15 சங் 71:20 சங் 86:13 ஏசா 25:8 எசே 37:11-14 ரோம 11:15
15எப்ராயிம் தன் சகோதரருள் கனி தரும் மரம் போலிருக்கலாம்: ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய கீழைக்காற்று பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்: வந்து அவனுடைய நீரோடைகளையும், நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும். அவனது கருவூலத்திலிருந்து விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போகும்.ஆதி 41:52 ஆதி 48:19 ஆதி 49:22 உபா 33:17
16சமாரியா தன் கடவுளை எதிர்த்துக் கலகமூட்டிற்று: அது தன் குற்றப் பழியைச் சுமக்கும்: அதன் குடிமக்கள் வாளால் மடிவார்கள், அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படுவார்கள்: அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப்படுவார்கள்.2இரா 17:6 2இரா 17:18 2இரா 19:9-11 ஏசா 7:8 ஏசா 7:9 ஏசா 8:4 ஏசா 17:3 ஆமோ 3:9-15 ஆமோ 4:1 ஆமோ 6:1-8 ஆமோ 9:1 மீகா 1:4 மீகா 6:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.