இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஓசியா 12

                   
புத்தகங்களைக் காட்டு
1எப்ராயிம் காற்றை உண்டு, நாள் முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க ஓடுகிறான்: பொய்யும் வன்செயலும் அவனிடம் பெருகி விட்டன: அசீரியாவோடு உடன்படிக்கை செய்கின்றான்: எகிப்துக்கு எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.ஓசி 8:7 யோபு 15:2 எரே 22:22
2ஆண்டவருக்கு யூதாவோடு வழக்கு ஒன்று உண்டு: யாக்கோபை அவன் தீய வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்: அவன் செயல்களுக்குத் தக்கபடி கைம்மாறு தருவார்.ஓசி 4:1 எரே 25:31 மீகா 6:2
3யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே தமையனை முந்திக் கொண்டான்: பெரியவனாக வளர்ந்த பின்போ கடவுளோடு போராடினான்.ஆதி 25:26 ரோம 9:11
4வான தூதரோடு போராடி வெற்றி கொண்டான்: கண்ணீர் சிந்தி, அவர் அருளை வேண்டிக்கொண்டான்: பெத்தேல் என்னுமிடத்தில் அவரை சந்தித்தான்: அவரும் அங்கே அவனுடன் பேசினார்.ஆதி 32:29 ஆதி 48:15 யாத் 3:2-5 ஏசா 63:9 மல்கி 3:1 அப் 7:30-35
5அந்த ஆண்டவரே படைகளின் கடவுள்: ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.ஆதி 28:16 ஆதி 32:30
6ஆதலால், இஸ்ரயேலே! உன் கடவுளிடம் திரும்பி வா: இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி: எப்போதும் உன் கடவுளை நம்பிக் காத்திரு.ஓசி 14:1 நீதி 1:23 ஏசா 31:6 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 3:14-22 புலம் 3:39-41 யோவே 2:13 சகரி 1:3 அப் 2:38 அப் 26:20
7ஆனால், இஸ்ரயேல் கள்ளத்தராசைக் கையில் வைத்திருக்கும் கானானியன் போன்றவன்: அவன் கொடுஞ்செயல் புரியவே விரும்புகின்றான்.எசே 16:3 சகரி 14:21 யோவா 2:16
8எப்ராயிம், “நான் பணக்காரனாகிவிட்டேன், எனக்கென்று செல்வம் சேர்த்துக்கொண்டேன்” என்கிறான். ஆனால், அவனது செல்வம் எல்லாம் சேர்ந்தும்கூட அவனது தீச்செயலின் பழியை அகற்றாது!யோபு 31:24 யோபு 31:25 சங் 49:6 சங் 52:7 சங் 62:10 சகரி 11:5 லூக் 12:19 லூக் 16:13 1தீமோ 6:5 1தீமோ 6:17 வெளிப் 3:17
9எகிப்து நாட்டினின்று உன்னை அழைத்து வந்த நாள்முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: விழா நாள்களில்போல மறுபடியும் உன்னைக் கூடாரங்களில் வாழச் செய்வேன்.ஓசி 13:4 யாத் 20:2 லேவி 19:36 லேவி 26:13 எண் 15:41 சங் 81:10 மீகா 6:4
10இறைவாக்கினர்களிடம் பேசினேன்: நானே காட்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினேன்: இறைவாக்கினர் வாயிலாக உவமைகளில் பேசினேன்.1இரா 13:1 1இரா 14:7-16 1இரா 17:1 1இரா 18:21-40 1இரா 19:10 2இரா 17:13 நெகே 9:30 எரே 25:4 ஆமோ 7:14
11கிலயாதில் தீச்செயல் மலிந்திருப்பதால் அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்: கில்காலில் காளைகளைப் பலியிடுவதால் உழவுசால் அருகே இருக்கும் கற்குவியல்போல் அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.ஓசி 6:8 1இரா 17:1
12யாக்கோபு ஆராம் நாட்டிற்குத் தப்பி ஓடினான்: இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக ஊழியம் செய்தான்: அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.ஆதி 27:43 ஆதி 28:1-29 உபா 26:5
13இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். இறைவாக்கினர் ஒருவரால் அவன் பாதுகாக்கப்பட்டான்.ஓசி 13:4 ஓசி 13:5 யாத் 12:50 யாத் 12:51 யாத் 13:3 1சாமு 12:8 சங் 77:20 ஏசா 63:11 ஏசா 63:12 ஆமோ 2:11 ஆமோ 2:12 மீகா 6:4 அப் 3:22 அப் 3:23 அப் 7:35-37
14எப்ராயிம் ஆண்டவருக்கு மிகவும் சினமூட்டினான்: அவனுடைய தலைவர் அவனுடைய இரத்தப் பழியை அவன் மேலேயே சுமத்துவார்: அவனுடைய நிந்தையை ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.2இரா 17:7-18 எசே 23:2-10
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.