1 | பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே: | எரே 1:2 எசே 1:3 ஓசி 1:1 2பேது 1:21 |
2 | முதியோரே, இதைக் கேளுங்கள்: நாட்டிலிலுள்ள குடிமக்களே, நீங்கள் அனைவரும் செவி கொடுங்கள்: உங்கள் நாள்களிலாவது, உங்கள் தந்தையரின் நாள்களிலாவது இதுபோன்று நடந்ததுண்டோ? | சங் 49:1 ஏசா 34:1 எரே 5:21 ஓசி 5:1 ஆமோ 3:1 ஆமோ 4:1 ஆமோ 5:1 மீகா 1:2 மீகா 3:1 மீகா 3:9 மத் 13:9 வெளிப் 2:7 |
3 | இதைக் குறித்து உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்: உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்: அவர்களின் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும். | யாத் 10:1 யாத் 10:2 யாத் 13:14 உபா 6:7 யோசு 4:6 யோசு 4:7 யோசு 4:21 யோசு 4:22 சங் 44:1 சங் 71:18 சங் 78:3-8 சங் 145:4 ஏசா 38:19 |
4 | வெட்டுப் புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது: இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக் கிளி தின்றது: துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை வளர்த்த வெட்டுக்கிளி தின்றழித்தது. | யோவே 2:25 ஆமோ 4:9 யாத் 10:4 |
5 | குடிவெறியர்களே, விழித்தெழுந்து அழுங்கள்: திராட்சை இரசம் குடிக்கிறவர்களே, நீங்கள் அனைவரும் அந்த இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்: ஏனெனில், அது உங்கள் வாய்க்கு எட்டாமற் போயிற்று. | ஏசா 24:7-11 ஆமோ 6:3-7 லூக் 21:34-36 ரோம 13:11-14 |
6 | ஆற்றல்மிக்க, எண்ணிக்கையில் அடங்காத வேற்றினம் ஒன்று என் நாட்டிற்கு எதிராய் எழும்பி இருக்கின்றது: அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்: பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் அதற்கு உண்டு. | யோவே 2:2-11 யோவே 2:25-11 நீதி 30:25-27 |
7 | என்னுடைய திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று: அத்தி மரங்களை முறித்துப் போட்டது: அவற்றின் பட்டைகளை முற்றிலும் உரித்துக் கீழே எறிந்தது: அவற்றின் கிளைகள் வெளிறிப் போயின. | யோவே 1:12 யாத் 10:15 சங் 105:33 ஏசா 5:6 ஏசா 24:7 எரே 8:13 ஓசி 2:12 ஆபகூ 3:17 |
8 | கணவனாக வரவிருந்தவனை இழந்ததால் சாக்கு உடை உடுத்திக் கொள்ளும் கன்னிப் பெண்ணைப்போல் கதறி அழுங்கள். | யோவே 1:13-15 யோவே 2:12-14 ஏசா 22:12 ஏசா 24:7-12 ஏசா 32:11 எரே 9:17-19 யாக் 4:8 யாக் 4:9 யாக் 5:1 |
9 | ஆண்டவரது இல்லத்தில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமல் ஒழிந்தன. ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் குருக்கள் புலம்பி அழுகின்றார்கள். | யோவே 1:13 யோவே 1:16 யோவே 2:14 ஓசி 9:4 |
10 | வயல்வெளிகள் பாழாயின: நிலமும் புலம்புகின்றது: ஏனெனில், தானிய விளைச்சல் அழிவுற்றது: இரசம் தரும் திராட்சைக் கொடிகள் காய்ந்துபோயின: எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள் பட்டுப் போயின: | யோவே 1:17-20 லேவி 26:20 ஏசா 24:3 ஏசா 24:4 எரே 12:4 எரே 12:11 எரே 14:2-6 ஓசி 4:3 |
11 | உழவுத் தொழில் செய்வோரே, கலங்கி நில்லுங்கள்: திராட்சைத் தோட்டக்காரர்களே, அழுங்கள். ஏனெனில், கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற் போயின: வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று. | எரே 14:3 எரே 14:4 ரோம 5:5 |
12 | திராட்சைக் கொடி வாடிப் போகின்றது: அத்தி மரம் உலர்ந்துபோகின்றது: மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் யாவும் வதங்குகின்றன: மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது. | யோவே 1:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 |
13 | குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு தேம்பி அழுங்கள்: பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்: என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்: ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின. | யோவே 1:8 யோவே 1:9 யோவே 2:17 எரே 4:8 எரே 9:10 எசே 7:18 |
14 | உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்: ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்: ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். | யோவே 2:15 யோவே 2:16 2நாளா 20:3 2நாளா 20:4 |
15 | மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்: | யோவே 2:2 எரே 30:7 ஆமோ 5:16-18 |
16 | உணவுப் பொருளெல்லாம் பாழாய்ப் போனதை நம் கண்கள் காணவில்லையா? நம் கடவுளின் இல்லத்திலிருந்து மகிழ்ச்சியும் அக்களிப்பும் இல்லாமற்போனதை நாம் பார்க்கவில்லையா? | யோவே 1:5-9 யோவே 1:13-9 ஆமோ 4:6 ஆமோ 4:7 |
17 | விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின: பண்டசாலைகள் பாழடைந்துவிட்டன: களஞ்சியங்கள் இடிந்து விழுந்தன: கோதுமை விளைச்சல் இல்லாமற் போயிற்று. | ஆதி 23:16 |
18 | காட்டு விலங்கினங்கள் என்னவாய்த் தவிக்கின்றன! மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன: ஆட்டு மந்தைகளும் இன்னலுற்றுத் தவிக்கின்றன! | யோவே 1:20 1இரா 18:5 எரே 12:4 எரே 14:5 எரே 14:6 ஓசி 4:3 ரோம 8:22 |
19 | ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள் தீக்கிரையாயின: வயல்வெளியிலிருந்தே மரங்கள் அனைத்தையும் நெருப்பு சுட்டெரித்துவிட்டது. | சங் 50:15 சங் 91:15 மீகா 7:7 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 லூக் 18:1 லூக் 18:7 பிலிப் 4:6 பிலிப் 4:7 |
20 | நீரோடைகள் வற்றிப்போனதால் காட்டுவிலங்குகள்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன: பாலைநிலத்திலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு விழுங்கிவிட்டது. | யோபு 38:41 சங் 104:21 சங் 145:15 சங் 147:9 |