ஏசாயா 24:7-11 - WCV
7
திராட்சை இரசம் அழுகின்றது: திராட்சைக் கொடி தளர்கின்றது: அக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
8
மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது. அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது: யாழின் இன்னிசை நின்றுவிட்டது.
9
பாடலுடன் அவர்கள் திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்: மதுவும் குடிப்போருக்குக் கசப்பாயிருக்கும்.
10
குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது: யாரும் நுழையாதபடி வீடெல்லாம் பூட்டப்பட்டது.
11
திராட்சை இரசத்திற்காகத் தெருக்களில் கூச்சல் எழுகின்றது: மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது: விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.